India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 ஏப்.1 முதல், தங்கத்தைபோல் வெள்ளியையும் அடகு வைத்து கடன் பெறலாம் என RBI அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, வெள்ளி நகைகள், நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். பார் வெள்ளி, ETF, மியூச்சுவல் பண்ட் போன்ற நிதி சொத்துக்கு கடன் கிடையாது. நீங்கள் ₹2.5 லட்சம் வரை பெற விரும்பினால் வெள்ளியின் மதிப்பில் 85% கடன் கிடைக்கும். ₹5 லட்சம் வரை 80% வரையும், அதற்கு மேல் 75% வரையும் கடன் பெறலாம்.

2019-ல் இருந்து தாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் மகத்தான வெற்றிகளை பெற்று வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். 2026 தேர்தலிலும் நாம்தான் வெற்றிபெற போகிறோம் என கூறிய அவர், அன்றைக்கு தலைப்புச் செய்தி, திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என்பதுதான் என்றும் குறிப்பிட்டார். இதை ஆணவத்தில் சொல்லவில்லை, மக்கள் மீதான நம்பிக்கையிலேயே சொல்வதாகவும் வாக்குச்சாவடி பயிற்சிக் கூட்டத்தில் CM கூறினார்.

இந்திய சினிமாவை புரட்டிபோட்ட பாகுபலி படத்தின் பார்ட் 3-யை விரைவில் எதிர்பார்க்கலாம். ஆம், கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் & தயாரிப்பாளர்களிடம் இது குறித்து பேச்சுவார்த்தையில் ராஜமெளலி இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த படம் அனிமேஷன் படமாக எடுக்கப்படவுள்ளதாம். முன்னதாக, முதல் 2 பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு, ‘பாகுபலி The epic’ என்ற பெயரில், வரும் அக்டோபர் 31-ம் தேதி ரிலிஸாகவுள்ளது.

மொன்தா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ள நிலையில், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாலை 4 மணி வரை சென்னை, செங்கை, திருவள்ளூர், கோவை, காஞ்சி, குமரி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் பாதுகாப்புடன் இருங்கள். SHARE IT

₹399 மதிப்புள்ள ChatGPT Go மாதாந்தர சப்ஸ்கிரிப்ஷனை ஓராண்டுக்கு இலவசமாக வழங்கப்போவதாக Open Al நிறுவனம் அறிவித்துள்ளது. நவம்பர் 4 முதல் புதிதாக Sign Up செய்யும் பயனர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இதன்மூலம், AI image generation போன்ற பிரத்யேக சேவைகளை தடையில்லாமல் பெறலாம். பயனர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு ஆஃபரை அறிவித்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. SHARE.

கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு விஜய்தான் முதன்மை காரணம் என சீமான் தெரிவித்துள்ளார். விஜய் மீது சிபிஐ FIR பதிவு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், பாஜக கூட்டணிக்கு விஜய் செல்லவில்லை எனில் அவர் மீது வழக்குப்பதிவு செய்வார்கள் என்றார். மேலும், வழக்கை சிபிஐக்கு மாற்றியதும் முன்ஜாமின் மனுவை ஆனந்த் திரும்ப பெறுகிறார் என்றால் சிபிஐ அவரை காப்பாற்றுகிறது என்றே அர்த்தம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் களத்திற்கு வந்த விஜய், அறிக்கை வாயிலாக ஆளும் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். நெல் கொள்முதல் விவகாரத்தில் எதிர்கட்சிகள், அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கின்றன. இதனிடையே, <<18127990>>வெற்று விளம்பரத்திற்காக<<>> நானும் டெல்டாக்காரன் என CM ஸ்டாலின் பெருமை பேசி வருவதாக விஜய் விமர்சித்துள்ளார். விஜய்யின் அறிக்கைக்கு பிறகு தவெகவினர் மீண்டும் SM-ல் ஆக்டீவாக தொடங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட அரைடஜன் படங்கள் OTT-யில் வெளிவருகின்றன. ஆனால், வரும் வாரம் ரொம்ப ஸ்பெஷல். ₹800 கோடி வசூல் செய்த படத்தில் தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மலையாள படம் வரை மக்களின் கவனம் ஈர்த்த படங்கள் OTT-யில் ரிலீசாகவுள்ளன. என்னென்ன படம் என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe பண்ணுங்க. நீங்க இதில் எந்த படத்தை பார்க்க வெயிட்டிங்?

குழப்பமாக இருந்தாலும், இது உண்மை செய்திதான். டெல்லியில் இருந்து துபாய் சென்ற Air India விமானத்தில் இருந்த கரப்பான் பூச்சிக்குதான் இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிரங்கிய பின் விமானத்தின் ஒவ்வொரு ஊழியரும் தங்களின் வேலை குறித்து Logbook-ல் பதிவிட வேண்டும். அப்படி கடந்த அக்டோபர் 25-ம் தேதி, Logbook-ல் ஊழியர் ஒருவர் எழுதிய இந்த குறிப்பு நெட்டிசன்களை அதிரவைத்துள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

கர்னூல் பஸ் விபத்து குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. விபத்துக்கு காரணமான பைக்கை ஓட்டிவந்த சிவசங்கர் 2:45 மணியளவில் டிவைடரில் மோதி மரணமடைகிறார். பைக்கின் மீது பஸ் மோதியது 2:55 மணிக்கு. இடைப்பட்ட 10 நிமிடங்களில், சாலையில் கிடந்த பைக்கை 19 பேர் கடந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர், பைக்கை ஓரம் கட்டியிருந்தால், இந்த விபத்தே தவிர்க்கப்பட்டிருக்குமே என்ற கேள்வி எழாமல் இல்லை.
Sorry, no posts matched your criteria.