India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,540-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை II, தனிப்பிரிவு உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த செப்.14 ஆம் தேதி முதல்நிலை எழுத்துத் தேர்வு நடந்து முடிந்த நிலையில் கூடுதலாக 213 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
நொய்டாவில் பெண்ணின் வயிற்றுக்குள் 9 இன்ச் பைப் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரண் நெகி என்பவருக்கு நொய்டா ஹாஸ்பிடலில் ஆபரேஷன் மூலம் கருப்பை கட்டி அகற்றப்பட்டது. வீடு திரும்பிய அவருக்கு வயிறு வலிக்கவே, வேறு ஹாஸ்பிடலில் பரிசோதித்தார். இதில் பிளாஸ்டிக் பைப் இருந்தது தெரிந்ததால் அகற்றப்பட்டது. ஆபரேஷன் செய்த டாக்டர் மீது நெகி அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சீசன் சென்னையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 4-வது சுற்றில் ஈரானின் அமீன் தபதாபேயியுடன் உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய அவர் அமீனை வீழ்த்தி ஒரு புள்ளி பெற்றார். இதன்மூலம் முதலிடத்தில் இருந்த அமீன் தபதாபேயியை பின்னுக்கு தள்ளி 3.5 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறினார்.
1) உலகின் மிகப் பழமையான நகரம் எது? 2) DNT என்பது யாரை குறிக்கும்? 3) இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி யார்? 4) தாவர வளர்ச்சியை அளவிட பயன்படும் கருவி எது? 5) Pomology என்றால் என்ன? 6) இறாலின் ரத்த நிறம் என்ன? 7) Furniture என்பதன் தமிழ் சொல் என்ன? 8) 5 கண்கள் கொண்ட பறக்கும் உயிரினம் எது? 9) சோடியம் என்பதன் வேதியியல் குறியீடு என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
பிரியங்கா சோப்ரா தான் தனது ரோல் மாடல் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘பிரியங்கா சோப்ரா பெண்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. அவர் பெண்கள் பெரிதாக சிந்திக்க கற்றுக் கொடுக்கிறார். சிட்டாடல் வெப் சீரிஸ் மூலம் இத்தாலிய நடிகை மெடில்டா, பிரியங்கா சோப்ரா போன்று உலகளவில் தலைசிறந்து விளங்கும் பெண்களை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது’ எனக் கூறியுள்ளார்.
ஐப்பசி திருவோணம் நட்சத்திரம் மிகவும் புனிதமானது என்று ஆன்மிக அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். அந்த நாள்தான் இன்று. திருவோண நட்சத்திரம், இறைவன் வெங்கடாசலபதி நட்சத்திரம். இந்த நாளில் காலையில் தீபாராதனை காட்டி வழிபாடு நடத்தினால், நமக்கு தெரியாமல் செய்த பாவம் கூட நீங்கும். கோடிக்கணக்கான லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.
ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. நேற்று கிராம் தங்கம் ரூ.7,285க்கும், சவரன் தங்கம் ரூ. 58,280க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.7,275க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,200க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி 1 கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. SHARE IT.
அடுப்பில் சட்டி வைத்து நெய் ஊற்றி, வரகரிசி (250g) லேசாக வறுத்து எடுக்கவும். அதில் நீரூற்றி நன்கு வேக வைக்கவும். அத்துடன் குக்கரில் மலர வேக வைத்த பாசி பருப்பை உப்பு சேர்த்து கிளறவும். மற்றொரு சட்டியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி, இடித்த மிளகு, சீரகம், முந்திரி சேர்ந்து பொன்னிறமாக வறுத்து, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பை கலவையுடன் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான வரகரிசி பொங்கல் ரெடி.
ஆளுநர் ஆர்.என். ரவியின் மதுரை, ராமநாதபுர நிகழ்ச்சிகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அந்த 2 நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தகவல் தெரியவில்லை.
நடப்பு மகர விளக்கு, மண்டல சீசனில் சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியபோது, ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 70,000 பக்தர்கள் மட்டுமே சபரிமலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் உடனடி தரிசன அடிப்படையில் 10,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.