news

News October 13, 2024

தவெக மாநாட்டிற்கு வருபவர்களுக்கு அறிவுரை

image

தவெக மாநாட்டிற்கு வருபவர்கள் குடும்பத்துடன் வரவேண்டும் என பொதுச்செயலாளர் ஆனந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தர்மபுரியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், வாகனங்களில் வரும் தொண்டர்கள் அமைதியாகவும், ஒழுக்கத்துடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், பைக்கில் வருபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தவெக முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.27ல் நடைபெறுகிறது.

News October 13, 2024

நாளை கடைசி: 39,481 பணியிடங்கள்

image

மத்திய ஆயுதப் படைகளில் (CAPFs) காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.14) கடைசி நாளாகும். ஆண்கள் காவல் படையில் 35,612 இடங்களும், பெண்கள் பிரிவில் 3,869 இடங்களும் உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்ற 18 – 23 வயதுடையவர்கள் <>ssc.gov.in<<>> என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

News October 13, 2024

தனியார் பேருந்துகளின் கட்டணம் உயர்வு

image

நான்கு நாள் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று சென்னை திரும்பி வருகின்றனர். அதிக அளவில் மக்கள் சென்னை திரும்பி வருவதால் இதை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிகிறது. நெல்லை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வர, வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ₹500 – ₹1,000 வரை அதிகமாக வசூலிப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

News October 13, 2024

இந்திய அணிக்கு 152 ரன்கள் இலக்கு

image

மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 151/8 ரன்கள் எடுத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆஸி., அணியில் அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 40, மெஹ்ரத் 32, எல்லிஸ் பெர்ரி 32 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேணுகா தாகூர் சிங், தீப்தி ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2024

திமுக நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி ஆர்டர்!

image

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்டும், வரும் 16-ம் தேதி சென்னை, திருவள்ளூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மழைக்காலத்தில் திமுக நிர்வாகிகள் முன்னின்று உதவ வேண்டும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. எந்த நேரத்திலும் களத்திற்கு வர தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 13, 2024

‘இட்லி கடை’ படத்தில் இணைந்த நித்யா மேனன்

image

‘ராயன்’ படத்தையடுத்து தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘இட்லி கடை’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், நடிகை நித்யா மேனன் இப்படத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து, இத்தகவலை தெரிவித்துள்ளார். முன்னதாக இருவரும் இணைந்து நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

News October 13, 2024

இளமை, ஆரோக்கியத்திற்கு நாங்க கியாரண்டி!

image

ஆண்டுதோறும் வயது கூடினாலும் இளமை, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமா? கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
*நாள்தோறும் 2 பழங்கள் உட்கொள்வது
*ஒரு நாளைக்கு கட்டாயம் 3 லிட்டர் நீர் பருகுவது
*வாரம் 4 முறை எடைப் பயிற்சி
*நாள்தோறும் 5 நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங்
*வாரம் 6 மணி நேரம் குறையாமல் உடற்பயிற்சி
*நாள்தோறும் 7000 படிகள் நடப்பது
*ஒரு நாளைக்கு 8 மணிநேர தூக்கம்

News October 13, 2024

மதக்கலவரத்தை தூண்டும் செயல்: மார்க்சிஸ்ட்

image

நாக்பூர் RSS பேரணியில் மோகன் பகவத் பேசியது மதப்பகைமை, மதக் கலவரத்தை திட்டமிட்டு தூண்டும் நோக்கில் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் RSS அமைப்பின் அடிப்படைவாத அரசியல், மதவெறி நடவடிக்கைகளை எதிர்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டின் மாண்பை பாதுகாக்கும் போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அக்கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.

News October 13, 2024

அரசு ஊழியர்கள் இதை கட்டாயம் அணிய வேண்டும்!

image

சமீபகாலமாக அரசு ஊழியர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும் போது, புகைப்படத்துடன் கூடிய ID கார்டை கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி அணியாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரித்துள்ளது. முன்னதாக, பல அரசு அலுவலகங்களில் BIO METRIC ATTENDANCE முறை அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

News October 13, 2024

இஸ்ரேலுக்கு 34 நாடுகள் கண்டனம்

image

லெபனான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஐநா அமைதிகாப்பு படையினர் (UNIFIL) மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு இந்தியா உள்பட 34 நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐநா படை மீது நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி அவை கோரியுள்ளன. லெபனான் மீது படையெடுக்க, அங்குள்ள ஐநா படை தடையாக இருப்பதால், வேண்டுமென்றே அந்த முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டுவீசி வருகிறது. இதில் ஐநா வீரர்கள் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

error: Content is protected !!