India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*நாத்திகம், பொதுவுடைமையின் பிரிக்க முடியாத பகுதி. *உங்கள் இதயம் நெருப்பிலும், மூளை பனியிலும் இருக்க வேண்டும். *கற்றலானது பிழைகள், தோல்வி இல்லாமல் செய்யப்படுவதில்லை. *அரசியலில் தலையிடவில்லை என்றால், அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும். *தவறான சொல்லாடல், பெருமிதம் தார்மீக அழிவை உச்சரிக்கிறது. *புரட்சிகர கோட்பாடு இல்லாமல் ஒருபோதும் புரட்சிகர இயக்கம் இருக்காது.
இன்று காலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, தி.மலை, கடலூர், திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தேனி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
BSF, CISF, CRPF உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளில் காலியாக உள்ள 39,481 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.14) கடைசி நாளாகும். SCC மூலம் 2025 ஜனவரி- பிப்ரவரியில் இந்த வேலைகளுக்கு தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இன்று இரவு 11 மணியுடன் இந்த அவகாசம் முடிகிறது. இந்தத் தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
பாஜக ஒரு தீவிரவாத கட்சி என காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெ.பி. நட்டா, தொடர் தேர்தல் தோல்விகளால் கார்கேயின் சித்தாந்தம் திவாலாகி விட்டதாக சாடினார். சமூக பணிகள், காெள்கை வகுத்தலில் மோடியின் தரத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால், நாட்டையும், மோடியையும் அவமதிக்க காங்கிரசார் முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
▶அக். 14 (புரட்டாசி 28) ▶திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM &4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶ திதி: துவாதசி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: சதயம்▶சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம். இந்தத் தகவலை பகிருங்கள்.
பள்ளிக்கல்வித் துறையின் வானவில் மன்ற போட்டிகள் நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பள்ளி அளவிலான போட்டி வரும் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும், வட்டார அளவிலான போட்டி நவ.1ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட அளவிலான போட்டி நவ.10- 20 வரையும், மாநில அளவிலான போட்டி நவம்பர் இறுதி வாரத்திலும் நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசிடம் 5 ஏக்கர் நிலத்தை மல்லிகார்ஜூன கார்கே திரும்ப ஒப்படைத்து விட்டார். முத்தா முறைகேடு விவகாரத்தால் கர்நாடக CM சித்தராமையா சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவரின் மனைவி தனக்கு கர்நாடக அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைத்தார். இந்நிலையில் கார்கே மகன் ராகுலின் அறக்கட்டளைக்கு கடந்த மார்ச்சில் ஒதுக்கப்பட்ட நிலம் குறித்து சர்ச்சை எழவே, அதனை திரும்ப ஒப்படைத்துள்ளார்.
இன்று (அக். 14) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
வாசிப்பு இயக்கம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் பள்ளிக்கல்வித் துறையால் இணையவழி பயிற்சி வழங்கப்படவுள்ளது. 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை கையாளும் பள்ளி ஆசிரியர்களுக்கு EMIS தளத்தின் வாயிலாக காணொலி மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அப்போது, தமிழகத்தில் வாசிப்பு இயக்கத்தை ஊக்குவிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை காலத்தில் உள்நாட்டு விமானக் கட்டணம் 20-25% வரை குறைக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 30 நாள்களுக்கு முன்பு விமான பயணத்திற்கு முன்பதிவு செய்தோருக்கு மட்டுமே இது பொருந்தும் என விமான நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, விமான எரிபொருள் விலை குறைப்பு ஆகியவையே இந்த கட்டண குறைப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது. SHARE IT
Sorry, no posts matched your criteria.