India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதியுடன், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடக்கும் +2 தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியாக உள்ளது. மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறும் +1 தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது. மார்ச் 28ல் தொடங்கி ஏப். 15ல் முடிவடையும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே.19ல் வெளியாக உள்ளது.
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். 12ம் வகுப்புக்கான செய்முறை தேர்வு பிப். 7 முதல் பிப். 14 வரை நடக்கிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ல் தொடங்கி, மார்ச் 25ல் முடிகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடங்கி ஏப். 15ல் முடிவடைகிறது. 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் மார்ச் 27 வரை நடைபெறுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சமற்ற நடைமுறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று JIO நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு அந்நிறுவனம் எழுதிய கடிதத்தில், சேட்டிலைட் மூலம் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும், நிலத்தில் டவர்கள் அமைத்து சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டு சமமான வணிக சந்தையை ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
உ.பி.யில் 10 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் 6 வேட்பாளர்களை சமாஜ்வாதி கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு MPஆனதால், சமாஜ்வாதி MLAக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்த 10 தொகுதிகளில் 5-ஐ தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியிருந்தது. இருப்பினும் INDIA கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு இதுவரை எந்த தொகுதியையும் ஒதுக்கவில்லை.
கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்த நிலையில், அடுத்த 4 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நீர் தேங்குதல், மரம் முறிந்து சாலைகள் முடங்குதல், போக்குவரத்து தடை, மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படும் சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் வெற்றிலை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரு வெற்றிலை இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான வெற்றிலை தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நவ. 23ஆம் தேதி சென்னை திரும்புகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் 3 மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க ஆக. 27ஆம் தேதி அவர் லண்டன் சென்றார். படிப்பு முடிந்து சென்னை திரும்பும் அவர், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படிப்புக்கான சான்றிதழ் பெற மீண்டும் லண்டன் செல்கிறார். சென்னை திரும்பியதும் அவரது அரசியல் நடவடிக்கைகள் வேகம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
➤டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக்: திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ் 2ஆவது முறையாக கோப்பை வென்றது. ➤ஏசியான் டேபிள் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் ஆயிஹா – சுதிர்தா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. ➤மைசூரு ஓபன் ITF டென்னிஸ் ஒற்றையரில் இந்தியாவின் ஸ்ரீவல்லி ராஷ்மிகா 2ஆவது இடம்பிடித்தார். ➤IPL 2025: MI அணியின் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்த்தனே மீண்டும் நியமிக்கப்பட்டார்.
PM-ன் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன் பெறுவோர் மானியத்தை, பணமாக்கி பயன்படுத்தும் வகையில், கூப்பன்களாக கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வங்கிக்கடன் வாயிலாக வீடு வாங்குவோருக்கு வட்டி விகிதத்தில் குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இத்தொகையை பெற வீடு வாங்கி ஓராண்டு வரை மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், இத்தொகையை பணமாக்கக் கூடிய கூப்பன்களாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணிக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. வடக்கிழக்கு பருவமழை அடுத்த சில நாள்களில் தொடங்கவுள்ளது. முன்னதாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறைசார் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
Sorry, no posts matched your criteria.