India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவில் கடந்த 9 மாதங்களில் மோசமான வானிலைக்கு 3,200 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த அமைப்பு ஒன்று இதுகுறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 274 நாள்களில் 255 நாள்கள் மோசமான வானிலை நிலவியதாகவும், இதில் 32 லட்சம் ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட்டதாகவும், 9,457 கால்நடைகள் இறந்ததாகவும், 2.35 லட்சம் வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு தாய் பால் மிகவும் சத்தான ஒன்று. ஆனால், இந்த பால் பல குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. அப்படி தவித்த 3,50,000 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து சீராட்டியுள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் ஓக்லெட்ரீ(36) என்பவர். ஜூலை 2023 வரை, அவர் 2,645 லிட்டர் தானம் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். 2014-ல் 1,569 லிட்டர் பாலை வழங்கியுள்ளார். அவருக்கு 3 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘மஞ்சள் வீரன்’ படத்தின் கதாநாயகனை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பதாக இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். எதையும் தாங்கும் மன வலிமை கொண்ட மாவீரன் இப்படத்தின் கதாநாயகனாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால், இப்படத்தில் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக, டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.
➤சாம்பாரில் நெல்லிக்காய் சேர்த்தால், சுவை அதிகரிக்கும். ➤நூடுல்ஸ் குழையாதபடி சமைக்க, அதில் சிறிது எண்ணெய் சேர்த்து கொதிக்க வையுங்கள். ➤வறுத்து இடித்த நிலக்கடலை பொடியை பொரியலில் சேர்த்து சமைத்தால் சுவை கூடும். ➤ரவா தோசை செய்யும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், தோசை மொறுமொறுப்பாக வரும். ➤கீரையை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு சேர்த்தால், அதில் உண்டாகும் ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.
தங்கம், பங்குச்சந்தை இரண்டில் முதலீட்டுக்கு எது பெஸ்ட் ஆக இருக்கும் என்ற கேள்வி முதலீட்டாளர் மத்தியில் நிச்சயம் எழும். முதலீட்டைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கம் இருந்தாலும், இந்த இரண்டுமே தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கின்றன. லாபம் இருக்கும் அதே அளவு ரிஸ்க்கும் இருக்கிறது. நீண்ட கால அடிப்படையில், Multi Asset Fund திட்டங்களிலும் Portfolio உருவாக்கி, முதலீட்டை மேற்கொள்ளுங்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் பலியாகும் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்டம்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, உயர்கல்வி வரையிலான செலவை அரசு ஏற்கும் என அறிவிப்பதாக கூறினார். இதற்காக புதிய நிதியம் உருவாக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்படுவதாகவும் கூறினார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டும் தனது திருமணத்திற்கு காமராஜர் வந்து வாழ்த்தியதாக CM ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்துள்ளார். விருதுநகர் பட்டம்புதூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது திருமணத்தின்போது காமராஜருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், எனினும் கருணாநிதி அழைப்பை ஏற்று வந்ததாகவும் தெரிவித்தார். திருமண மேடைக்கு காமராஜர் வர சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
ஆணவம் பிடித்தவர் என்று உதயநிதி ஸ்டாலினை பாஜக மூத்தத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். தமிழிசை போல வேலை, வெட்டி இல்லாதவர் தாம் இல்லை என்று உதயநிதி கூறியதாக வெளியான செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தமிழிசை, ஸ்டாலின் பதவி கொடுக்கவில்லையெனில் உதயநிதிக்கு வேலை இல்லை என சாடினார். தனது அரசியல் அனுபவத்திற்கும், உதயநிதி அனுபவத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது எனவும் கூறினார்.
நாட்டில் எத்தகைய உச்ச பதவியை வகிப்பவராக இருந்தாலும், “எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர் அந்தப் பதவியை வகிக்கிறார்?” என்று கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அரசாங்க அதிகாரியாவது தகுதி இல்லாமல் ஒரு பதவிக்கு நியமிக்கப்பட்டாலோ, அதிகார வரம்பை மீறி அவர் ஒரு உத்தரவு பிறப்பித்தாலோ அதனை எதிர்த்து யார் வேண்டுமானாலும் மனு தாக்கல் செய்யலாம். இந்த மனு Writ of Quo-Warranto என அழைக்கப்படுகிறது.
தோனி குறித்து பேசிய CSK அணியின் CEO காசி விஸ்வநாதன், CSK-யில் தோனி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் விளையாடுவார். இதில் எந்த தடையும் இல்லை. தோனிக்கு சிஎஸ்கே மீது எவ்வளவு அன்பு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் விளையாடும் தோனி, எப்போதும் சரியான முடிவுகளை எடுப்பார். அவர் விளையாட விரும்பும் வரை நாங்கள் அவருக்காக கதவுகளைத் திறந்தே வைத்திருப்போம் என்றார்.
Sorry, no posts matched your criteria.