news

News October 14, 2024

ALERT: இலவச மொபைல் வழங்கும் மத்திய அரசு ?

image

‘இலவச மொபைல் யோஜனா 2024’ என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு 1 கோடி பேருக்கு இலவச மொபைல் போன்களை வழங்குவதாக வடஇந்திய யூடியூப் சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல் முற்றிலும் தவறானது, இதுபோன்ற எந்த திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை என மத்திய அரசின் ‘PIB Fact Check’ தளம் விளக்கமளித்துள்ளது. மேலும், இது போன்ற செய்திகளை நம்பாமல், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

News October 14, 2024

WFH தரவே முடியாது: முரண்டு பிடிக்கும் IT நிறுவனங்கள்!

image

சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னைக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அக்.15 முதல் அக்.18 வரை ஐடி ஊழியர்களுக்கு WFH தர முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால், பல ஐடி நிறுவனங்கள், என்ன மழை பெய்தாலும் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்துக்கு வர வேண்டும் எனக் கூறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News October 14, 2024

B.ED கலந்தாய்வு தேதி மாற்றம்

image

சென்னையில் நாளை நடைபெறவிருந்த B.ED மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, அக்.21ஆம் தேதி நடைபெறும் என கல்லூரி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். அன்றைய தினம், தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் மாணவர்களுக்கான B.ED கலந்தாய்வு நடைபெற உள்ளது.

News October 14, 2024

எந்த மாவட்டத்துக்கு என்ன அலர்ட்: முழு விவரம்

image

நாளை (OCT 15), எதிர்பார்க்கப்படும் மழையை பொறுத்து மாவட்டங்களுக்கு கீழ்க்கண்டவாறு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது:
RED ALERT: திருவாரூர், நாகை, மயிலாடுதுறை
ORANGE ALERT: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், க.குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை.
YELLOW ALERT: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை.

News October 14, 2024

வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம்: பார்த்திபன் அதிரடி

image

‘வந்தே பாரத்’ ரயிலில் உணவு மிக மோசமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக இல்லை. ஆரோக்கிய கேடாக இருப்பதாக பலர் முனுமுனுத்தனர். நான் புகார் கொடுத்துள்ளேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன்பெற வேண்டி இந்த புகாரை அளித்தேன்” எனக் கூறியுள்ளார்.

News October 14, 2024

சின்னத்திரை நடிகருடன் நடிகைக்கு நிச்சயதார்த்தம்

image

‘சிறகடிக்க ஆசை’ தொடர் நாயகன் வெற்றி வசந்துக்கு, ‘பொன்னி’ தொடர் நடிகை வைஷ்ணவியுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இருவரும் நீண்ட நாள்களாகவே காதலித்து வந்தநிலையில், சென்னையில் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். திருமணத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

News October 14, 2024

ஒரு நாளில் 400 ரன்கள் அடிப்பதே இலக்கு: கம்பீர்

image

டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் இந்திய அணி 400 ரன்கள் குவிப்பதை விரும்புவதாக பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்துள்ளார். வெற்றிக்கான தேவை இருப்பின் 2 நாள்கள் தொடர்ந்து ஆடவும் இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாகவும், வெற்றி மட்டுமே தங்களின் குறிக்கோள் எனவும் குறிப்பிட்டுள்ளார். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதை தாண்டி, கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

News October 14, 2024

மக்களே.. இரவு 7 மணி வரை இங்கெல்லாம் மழை!

image

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், தென்காசி ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News October 14, 2024

பாம்புகள் ஜாக்கிரதை! முக்கிய NUMBER.. நோட் பண்ணுங்க

image

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் சுற்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்று பெரிய மழை பெய்யும் போது, பொந்துகளில் நீர் நிரம்புவதால் அங்குள்ள பாம்புகள் வீடுகளுக்குள் வந்துவிடும். எனவே, வீடுகளுக்குள் பாம்பு புகுந்தால் அதனை அப்புறப்படுத்த 044 – 22200335 என்ற எண்ணில் தொடர்புகொள்ள வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 14, 2024

கணக்கு டீச்சருக்கே கணக்கு தெரியலையா..??

image

குஜராத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பொதுத்தேர்வில் தோல்வியடையவே, மறு கூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார். அதில், ஆசிரியரின் கவனக்குறைவால் 30 மதிப்பெண்கள் தவறவிடப்பட்டது தெரியவந்துள்ளது. அந்த விடைத்தாளை திருத்தியது ஒரு கணித ஆசிரியர் என்ற தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல், பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலின்போது தவறு செய்த 4,488 ஆசிரியர்களுக்கு அம்மாநில கல்வித்துறை அபராதம் விதித்துள்ளது.

error: Content is protected !!