India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிலருக்கு வீடு வாங்கலாமா? அல்லது நிலமாக வாங்கி வைக்கலாமா? என்ற சந்தேகம் இருக்கும். முதலீடு அடிப்படையில் பார்க்கும்போது நிலம் வாங்குவதே புத்திசாலித்தனமான முடிவு என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நிலத்தின் மதிப்பானது நீண்டகாலத்தில் உயரும். அதேநேரம் வீட்டின் மதிப்பு குறையும் என்கிறார்கள். எனவே, முதலீட்டிற்காக வாங்குவதாக இருந்தால் நிலமாக வாங்கி வைக்கவே பரிந்துரைக்கின்றனர்.
காலையில் எழுந்ததும் 30 நிமிடங்களுக்குள் சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பென்சில்வேனியா மாகாண பல்கலை., ஆய்வில் தெரியவந்துள்ளது. சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் கேன்சர் மற்றும் உடலில் கெட்ட கொழுப்புகள், ரத்த கொதிப்பு, இதய நோய்கள், நீரிழிவு பிரச்னைகளை ஏற்படுத்தும். இது இளைஞர்களை அதிகம் பாதிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக திரைப் பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் ஓய்வெடுக்க வெளிநாடுகளுக்குச் செல்வதுண்டு. ஆனால், இசையமைப்பாளர் யுவன் கொஞ்சம் வித்தியாசமாக மாமனார் ஊர் பக்கம் செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரத்தை ஒட்டிய கீழக்கரை கடற்கரைப் பகுதிகளில் யுவனை சர்வ சாதாரணமாக சந்திக்க முடிகிறது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். நீங்கள் ஓய்வுக்காக செல்லும் இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் 39.48 லட்சம் உறுப்பினர்களுக்கு திட்ட செயலாக்கம் குறித்து ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பண்ணை, பண்ணை சாரா செயல்பாடுகள், சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், திறன்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்பு, உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்படவுள்ளதாக உதயநிதி கூறியுள்ளார்.
2026 தேர்தலில் அதிமுக சாதிக்கும் என தான் நினைக்கவில்லை என ஓபிஎஸ் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் ஆருடம் தெரிவித்துள்ளார். அதிமுகவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும், அப்படி அமைந்தால் யார் முதல்வர் என்பதில் சிக்கல் உள்ளதாகவும் கூறியுள்ளார். இபிஎஸ் விஜய்யை முதல்வராக ஏற்க மாட்டார் எனவும், அதேநேரம் இபிஎஸ் முதல்வராக விஜய் கட்சி தொடங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தவெக உறுப்பினர் சேர்க்கைக்கு என தனி செயலி உள்ளது. இதனை விஜய் அறிமுகப்படுத்தியபோதே அதன்மூலம் லட்சக்கணக்கானோர் கட்சியில் இணைந்தனர். விக்கிரவாண்டி மாநாடு நடந்து முடிந்ததில் இருந்து, உறுப்பினர்கள் சேர்க்கை இன்னும் வேகமெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சர்வர் அடிக்கடி முடங்குவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர். இதையடுத்து, உறுப்பினராக சேர விரும்புவோர் தகவல்களை நிர்வாகிகள் நேரில் சேகரித்து வருகிறார்களாம்.
அதிகாலையை புத்துணர்ச்சியோடு தொடங்க புதினா டீ குடிக்க ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்னைகளை சரி செய்கிறது என்கிறார்கள். ஒரு கப் கொதிக்கும் நீரில் 5-6 புதினா இலைகளை சேர்க்கவும். அதனுடன் சுவைக்காக சில துளிகள் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நாளை குதூகலமாக்கும் புதினா டீ ரெடி.
அரசுப் பள்ளி மாணவர்கள் JEE, நிட்(NID) தேர்வுக்கு விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், +2 மாணவர்களுக்கு இந்த தேர்வு குறித்து எடுத்துரைத்து, தகுதியானவர்களை விண்ணப்பிக்க வைக்கும் பணியை தலைமை ஆசிரியர்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. JEE முதன்மை தேர்வுக்கு நவ.22, NID தேர்வுக்கு டிச.2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவர் நவகிரகங்களைப் சுற்றி வழிபடும்போது, தனது ஜென்ம கிரகத்திற்குரிய எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் 9 முறை சுற்றி வணங்கி, பின் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாக சுற்றிவந்து வழிபடுதல் வேண்டும். சூரியன் 10, சுக்கிரன் 6, சந்திரன் 11, சனி 8, செவ்வாய் 9, ராகு 4, புதன் 5, கேது 9, வியாழன் 21 என்ற தனி எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும் என நவகிரக தாந்த்ரீக பரிகாரம் கூறுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்கிறார். ராஷ்டிரபதி பவனில் 10 AMக்கு நடைபெறும் விழாவில், ஜனாதிபதி திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதையொட்டி, புதிய CJவுக்கு சட்டத்துறையினர் உள்பட பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இதற்குமுன் CJவாக இருந்த சந்திரசூட், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.