India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான ‘வேட்டையன்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து இதுவரை மொத்தம் ₹240 கோடியை தாண்டிவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் இப்படம் ₹30 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. நீங்கள் இப்படத்தை பார்த்துவிட்டீர்களா?
கொரோனா தடுப்பூசிக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் தாக்கலான பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பியது. பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறி தள்ளுபடி செய்தது.
கனமழை காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை ஒருநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வராக பொறுப்பேற்றுள்ள அதிஷி, பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தலைநகரின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக மத்திய அரசுக்கும் டெல்லி அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் அலுவலகமும் மோடி, அதிஷி சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அக்.15 முதல் அக்.17 வரை இந்த கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும், பயணிகளின் வருகையை பொறுத்து ரயில்களுக்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. கனமழை காலங்களில் மெட்ரோ ரயில்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் தாக்குதல்கள், அத்துமீறல்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் அமெரிக்கா, தற்போது போரில் நேரடியாக இறங்குகிறது. அமெரிக்கா வழங்கும் கணக்கற்ற ஆயுதங்கள், நிபுணத்துவம் & ஐநாவில் வீட்டோ ஆதரவால் தான் இஸ்ரேல் தாக்குப் பிடிக்கிறது. இந்நிலையில் அதிநவீன ஏவுகணை தடுப்பு சாதனம் ‘THAAD’ உடன் 100 வீரர்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்புகிறது. அதிபர் தேர்தல் வெற்றிக்கு, பைடனுக்கும் ஒரு வெற்றி தேவையல்லவா?
ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கத்துக்கு தற்போது புதிய நடைமுறை வந்துள்ளது. இதுவரை இறந்தவர்கள் அல்லது திருமணம் ஆனவர்களின் பெயரை நீக்கக் கோரி விண்ணப்பித்தால், அதற்குரிய சான்றிதழ்களை ஆன்லைனில் சமர்ப்பித்தாலே போதுமானது. ஆனால், இதில் பல முறைகேடுகள் நடைபெறுவது தெரியவந்துள்ளது. எனவே, அதிகாரிகள் நேரடியாக வீட்டிற்கே வந்து சான்றிதழ்களை சரிபார்த்த பிறகே, ரேஷன் கார்டுகளில் இருந்து பெயர் நீக்கப்படுமாம்.
சென்னை மட்டுமே தமிழகம் என்று திமுக அரசு நினைப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். கோவை உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், மக்களை காக்க எவ்வித முன்னெச்சரிக்கையும் அரசு எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் தொடர் ஆய்வு செய்யும் முதல்வரும், துணை முதல்வரும் மற்ற மாவட்டங்களும் தமிழகத்தில்தான் உள்ளன என்பதை மறந்துவிட்டதாகவும் அவர் சாடியுள்ளார்.
சூர்யா நடிக்கும் 45வது படத்தை RJ பாலாஜி இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வேல் மற்றும் அரிவாள்கள் இடம்பெற்றிருக்கும் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும்போதே கண்டிப்பாக இது ஒரு Action படமாக இருக்கும் என தெரிகிறது. சூர்யா ரசிகர்கள் இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சின்ன வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, தூதுவளை இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழைகளைச் சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இக்கலவையை மசிய அரைத்து, சாமை அரிசி மாவுடன் கலந்து பிசையவும். அதை சூடான தோசைக் கல்லில் மெலிதாக ஊற்றி, வேக வைத்து எடுத்தால், சுவையான தூதுவளை தோசை ரெடி.
Sorry, no posts matched your criteria.