India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. 1) இடி மின்னலுடன் கனமழை: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் 2) லேசான மழை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, நெல்லை. SHARE IT
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. நியூசி., நிர்ணயித்த 111 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய பாக்., அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 11.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாக்., தோல்வியால் இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியுள்ளது.
◙மேஷம் – தொல்லை
◙ரிஷபம் – சிக்கல்
◙மிதுனம் – பக்தி
◙கடகம் – லாபம்
◙சிம்மம் – நிம்மதி
◙கன்னி – பரிவு
◙துலாம் – ஆக்கம்
◙விருச்சிகம் – இன்பம்
◙தனுசு – நற்செயல் ◙மகரம் – நஷ்டம்
◙கும்பம் – உற்சாகம் ◙மீனம் – உதவி
தமிழரின் உணவு பண்பாட்டில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது நெய். சுவை & மணத்திற்காக மட்டுமின்றி, உடல் நலத்திற்காகவும் பயன்படுத்தப்படும் அதில் தற்போது அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. தூய நெய்யா என்பதை கண்டறிய, ஒரு திரியை நெய்யில் நனைத்து தீபம் ஏற்றிப் பாருங்கள். சுத்தமான நெய் நீண்ட நேரம் எரியும். கலப்படம் செய்யப்பட்ட நெய் விரைவில் கருகிவிடும். சர்க்கரை பாகு (கேரமல்) போன்ற வாசனையைக் கொண்டிருக்கும்.
சென்னையில் நாளை முதல் (அக். 15) மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னோட்டமாக, இன்று இரவு முதல் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியிருந்த நிலையில், பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ளது. நாளை அதிகாலை முதலாக மழையின் தீவிரம் அதிகரிக்கும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் (அக்.16) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
*வாட்டர் டேங்க் நிரப்புங்க.
*mobile, emergency lamp, laptop சார்ஜ் போடுங்க.
*torch, matchbox, candle, கொசுவர்த்தி, கொசுவலை, குடை, ரெயின்கோட் தயாராக இருக்கட்டும்.
*காய்கறிகள், பிரெட், பழங்கள், பால், பிஸ்கட் மற்றும் குடிநீர்.
*அவசரத் தேவைக்கான மருந்துகள், செலவுக்கு கொஞ்சம் ரொக்கப் பணம்
*இன்வர்ட்டர், கேஸ் சிலிண்டர் செக் பண்ணுங்க *பாதுகாப்பான வாகன பார்க்கிங் *நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை EPS கொச்சைப்படுத்துவதாக அமைச்சர் K.N நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். 2015 பெரு வெள்ளத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்துவிட்டு 289 பேர் பலியாக காரணமானவர்கள், தமிழக அரசை விமர்சிப்பது சாத்தான் வேதம் ஓதுவதை போல் உள்ளதாகவும் விமர்சித்துள்ளார். ஆய்வுக் கூட்டம் போட்டால், ‘எதற்காக கூட்டம்’ எனக் கேட்கும் இபிஎஸ்-ஐ பார்த்து மக்கள் சிரிப்பதாகவும் சாடியுள்ளார்.
பாபர் அசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை என PAK துணை பயிற்சியாளர் அசார் மக்மூத் தெரிவித்துள்ளார். ENG எதிரான டெஸ்ட் தொடரில் பாபர் விளையாட தயாராக இருந்ததாகவும், அணி நிர்வாகமே அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். பாபர் அணியின் நம்பர் 1 வீரர் எனவும், அவரின் திறமை மீது சந்தேகம் இல்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக மோசமான ஆட்டம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக தகவல்
வெளியானது.
தினபூமி நாளிதழின் மதுரை மாவட்ட முதன்மை நிருபர் திருநாவுக்கரசு இன்று காலமானார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற தினபூமி நாளிதழ் உரிமையாளர் மணிமாறன் (69), கன்னியாகுமரியில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றார். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் அருகே, அவரது கார் சாலை தடுப்புச் சுவரில் மோதி, எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் மணிமாறன் உயிரிழந்தார். அவரது மகன் ரமேஷ் படுகாயமடைந்தார்.
உ.பி. அமைச்சராக இருப்பவர் சஞ்சய் கங்வார். இன்று அவர் கூறியுள்ள கருத்துதான் பெரும் விவாதத்தையும், விமர்சனத்தையும் எழுப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “உங்களுக்கு கேன்சர் இருக்கிறதா? கவலை வேண்டாம். மாட்டுத் தொழுவத்தில் தங்கி, அதை சுத்தம் செய்யுங்கள். கேன்சர் குணமாகும். மாட்டின் முதுகை தடவிக்கொடுத்து, வாழைப்பழம் கொடுத்தால் BP குறையும்” எனக் கூறியுள்ளார். உங்கள் கருத்தை சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.