India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஞ்ஞானியும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. நாளிதழ் விநியோகிக்கும் பையன் முதல் நாட்டின் குடியரசுத் தலைவரானது வரை அவரின் வாழ்க்கை வரலாறு பெரும் உந்துசக்தி ஆகும்.
அவரது பிறந்தநாளான இன்று சர்வதேச மாணாக்கர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கலாமின் “கடமை குறித்து கனவு காணுங்கள், அது வாழ்க்கையை அழகாக்கும்” என்ற செய்தி அனைவரையும் எப்போதும் ஊக்கப்படுத்தும்.
பருவமழையையொட்டி பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை மின்வாரியம் அளித்துள்ளது. அதை தெரிந்து கொள்வோம். *மின் கம்பிகள், டிரான்ஸ்பார்கள் அருகே செல்ல வேண்டாம் *மின்சாதனங்கள் அருகே தேங்கி கிடக்கும் தண்ணீர் அருகே செல்ல வேண்டாம் *தாழ்வாக தொங்கும் மின்கம்பியை தொடக் கூடாது *ஈரக் கைகளால் ஸ்விட்சுகள், மின்சாதனங்களை தொடுவதை தவிர்க்கவும் * ஈரப்பதமான சுவர்களை தொடுவதை தவிர்க்கவும். SHARE IT
இந்திய ராணுவத்தின் பிராந்திய படைப்பிரிவில் 2,847 இடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள், கிளார்க்குகள், டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித் தகுதியாக 8-10 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது. வயது வரம்பு 18 முதல் 42 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை https://www.jointerritorialarmy.gov.in.இல் அறியலாம். SHARE IT.
ஜம்மு-காஷ்மீரில் உமர் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு நாளை பதவியேற்கிறது. சட்டப்பேரவையில் உள்ள 90 இடங்களில், NC, காங்கிரஸ் கூட்டணிக்கு 55 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதையடுத்து துணைநிலை ஆளுநரை சந்தித்து உமர் அப்துல்லா ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையேற்று நாளை காலை 11.30 மணிக்கு உமர் அப்துல்லா, அமைச்சரவை சகாக்களை பதவியேற்கும்படி துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் சில்லரை பணவீக்கம் செப்டம்பரில் 5.49%ஆக அதிகரித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு புள்ளி விவரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் சில்லரை பணவீக்கம் 3.65%ஆக இருந்ததாகவும், அது செப்டம்பரில் மேலும் உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இது 5.87% ஆகவும், நகர்ப்புறங்களில் 5.05% ஆகவும் இருப்பதாகவும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்.15) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை RMC வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் RMC குறிப்பிட்டுள்ளது.
ரஜினி படத்துக்கு லாஜிக் தேவையில்லை என்று இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார். வேட்டையன் பட காட்சி ஒன்றில் நீதிமன்றத்தில் இருக்கும் ரஜினி, அடுத்து ஹெலிகாப்டரில் ராணாவை பார்க்க வருவார். லாஜிக் இல்லாமல் இக்காட்சி எடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கு ஞானவேல் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், அக்காட்சி ரஜினிக்காக வைக்கப்பட்டது. ரஜினிக்கு லாஜிக் பார்க்க முடியாது என்றார்.
*துப்பாக்கியை விட யோசனைகள் சக்தி வாய்ந்தவை. *வரலாற்றை உருவாக்குவது நாயகர்கள் அல்ல, வரலாறுதான் நாயகர்களை உருவாக்குகிறது. *கல்வி என்பது ஒரு ஆயுதம், அதன் விளைவு அதைப் பிரயோகிக்கும் கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. *பட்டுக் கையுறைகளுடன் உ ங்களால் புரட்சி செய்ய முடியாது.*ஒவ்வொரு நாடும், அது விரும்பினால், சொந்தப் புரட்சியை உருவாக்கும். விருப்பம் இல்லை என்றால், எந்தப் புரட்சியும் ஏற்படாது. SHARE IT
தமது கோரிக்கையை ஏற்று, சிகரெட் லைட்டர் தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் பியூஸ் கோயலுக்கு CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இந்த முடிவு வரவேற்புக்குரியது என்றும், இதனால் தமிழ்நாட்டின் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வலுப்பெறுவதுடன், சுமார் 1 லட்சம் பேரின் வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
6 இந்திய தூதரக அதிகாரிகளை கனடா வெளியேற்றியுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகள் கனடாவில் வன்முறையை தூண்டுவதாக
அந்நாடு குற்றம்சாட்டியதால், 2 நாடுகள் இடையேயான உறவில் மீண்டும் விரிசல் உருவாகியுள்ளது. கனடாவில் உள்ள தனது தூதரை திரும்ப பெற்ற இந்தியா, 6 கனடா தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக, இந்திய துணை தூதர் உள்ளிட்டோரை கனடா வெளியேற்றியுள்ளது.
Sorry, no posts matched your criteria.