India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம் உள்ளிட்ட அரசுப்பணி போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, தமிழக அரசு சார்பில் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் வருகிற 18ஆம் தேதி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரை நேரடி ஒளிபரப்பாகிறது. இதே நிகழ்ச்சி அன்றைய தினமே இரவு 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. SHARE IT
கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற நவம்பர் முதல் மீண்டும் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை தொடங்க இருப்பதாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்று தந்த மனு பாக்கர் தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு ஏற்கெனவே திட்டமிட்டபடி 2 மாதகாலம் ஓய்வில் இருந்ததாக கூறிய அவர், இக்காலத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார். அடுத்தாண்டு முதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் கூறினார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் RMC அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல், நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கணித்துள்ளது.
இந்திய தபால் துறையின் பேமெண்ட் வங்கியில் 344 காலி இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்த இடங்கள், எக்ஸ்யூட்டிவ் பதவிகள் ஆகும். அதற்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதியாக பட்டப்படிப்பும், வயது வரம்பாக 20-35 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் 31ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை குறித்த கூடுதல் தகவலை @ippbonline.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். SHARE IT.
பருவமழையை எதிர்கொள்ளும் அழகா இது என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார். பருவமழை தொடங்குவதற்கு முன்பே மக்கள் பாதிக்கத் தொடங்கி விட்டார்கள் என்றும், 4 பேர் ஒரே நாளில் மின்கம்பியை மிதித்ததால் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். களத்தில் ஆக்கப்பூர்வமாக எந்த முன்னேற்பாட்டையும் அரசு செய்யவில்லை என்பது சில மணி நேர லேசான மழையிலேயே அம்பலமாகி விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது தீபாவளிக்கு முன்பு அறிவிப்பு வெளியாகக்கூடும் எனக் கூறப்படுகிறது. விலைவாசி உயர்வை சமாளிக்க ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்ததாக படத்தை இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவரது முதல் படத்தின் ஹீரோவாக யோகி பாபு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயம் ரவி, அவரது மனைவி இடையேயான விவகாரத்து பிரச்னையால் அவரின் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், ஜெயம் ரவி இயக்குநராக போகிறார் என்று வெளியாகியுள்ள தகவல் அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேங்க் ஆப் மகாராஷ்டிராவில், 600 அப்ரண்டிஸ் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. கல்வித் தகுதியாக பட்டப்படிப்பும், வயது வரம்பாக 20-28 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.9,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க வரும் 24ஆம் தேதி கடைசி நாளாகும். கூடுதல் தகவலை https://bankofmaharashtra.in.இல் தெரிந்து கொள்ளலாம். SHARE IT
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக RMC தெரிவித்துள்ளது. அதை இங்கு காணலாம். மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுச்சேரி. 2) கனமழை: வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை.
Sorry, no posts matched your criteria.