India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதானி குழுமத்தின் (AGEL) மின் திட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் ₹3,700 கோடி செலவில், 484 MW காற்றாலை மின் உற்பத்தியை மேற்கொள்ள அதானி குழுமம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் எனக் கூறி, இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தவெகவிற்கு மேலும் 5 கேள்விகளை எழுப்பி விழுப்புரம் மாவட்ட காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தவெகவின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாநாட்டின் போது மழை பெய்தால் என்ன செய்வீர்கள்? உள்ளிட்ட 5 கேள்விகளுக்கு காவல்துறை பதில் கோரியுள்ளது. முன்னதாக, 33 நிபந்தனைகளில் 17ஐ கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1) இந்திய பத்திரிகை துறையின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 2) கொசுவின் தூய தமிழ்ப் பெயர் என்ன? 3) மழைக்காலத்தில் மட்டுமே குட்டி போடும் விலங்கு எது? 4) இமயமலையின் பரப்பளவு என்ன? 5) GMT நேரம் என்பதன் விரிவாக்கம் என்ன? 6) மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சி தரும் நாடு எது? 7) பூனைகளால் எந்த சுவையை உணர முடியாது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், தான் நலம்பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டு, விரைவில் பணியை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிச்சயமற்ற பொருளாதார சூழலில், யாருக்கு எப்போது வேலை போகும் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால், குறைந்தது 6 மாத சம்பளத் தொகையை எமர்ஜென்சி ஃபண்டாக சேர்த்து வைக்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வேலையில் இருக்கும் நபர் தனக்கு Term Insurance எடுப்பதோடு, குடும்பத்தினருக்கு Medical Insurance எடுக்கவும் பரிந்துரைக்கின்றனர். எந்த வகை கடனாக இருந்தாலும், மாத EMI சம்பளத்தில் 50%ஐ தாண்டக் கூடாது என்கிறார்கள்.
தனது படங்களில் நிறைய நல்லவர்கள் இருப்பது குறித்து சமுத்திரக்கனி மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “15 வயசுல, வீட்டில் யாரிடம் சொல்லாம சென்னை ஓடி வந்துட்டேன். ஒரு பாட்டி காசு வாங்காம எனக்கு இட்லி கொடுத்தாங்க. அரை டவுசரோடு அண்ணா மேம்பாலத்துக்கு கீழ படுத்து கிடந்ததை பார்த்த ஒரு ஏட்டய்யா போலீஸ் ஸ்டேஷனில் படுக்க வச்சாரு. இது மாதிரியான நல்லவங்களாலத்தான் பூமி இயங்கிகிட்டு இருக்கு” என்றார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வருகிறது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாள்களில் புதுவை, வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதியை நோக்கி நகரக்கூடும் எனவும் கணித்துள்ளது.
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர், ஓடென்ஸ் நகரில் இன்று தொடங்குகிறது. இந்தியா சார்பில் நட்சத்திர வீரர்களான லக்ஷயா சென், பி.வி.சிந்து ஆகியோர் இத்தொடரில் பங்கேற்க உள்ளனர். முதலாவது ஆட்டத்தில் லக்ஷயா சென், சீனாவின் லூ குயாங் சூவையும், பி.வி.சிந்து சீன தைபேயின் பாய் யு போவையும் எதிர்கொள்கின்றனர். மாளவிகா பன்சோத், காஷ்யப், உன்னதி ஹூடா ஆகிய இந்தியர்களும் பங்கேற்க உள்ளனர். ALL THE BEST TEAM INDIA
கனமழை எதிரொலியாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கிலோ ₹80க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது ₹100க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ₹120 வரை விற்கப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1,300 டன் தக்காளி வருவது வழக்கம். ஆனால், மழை காரணமாக வரத்து 800 டன்னாக குறைந்துள்ளது.
➤நார்விச் சிட்டி மினா கோப்பை (U 12) தொடரில் சென்னை அணி, 4-2 என ஜெர்மனியின் போருசியா அணியை வென்றது. ➤ஹாக்கி இந்தியா லீக்: கார்த்தியை ₹24 லட்சத்துக்கு தமிழக டிராகன்ஸ் அணி வாங்கியது. ➤முதுகுப்பகுதி காயத்தால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஆஸி.வீரர் கேமரூன் கிரீன் விலகினார். ➤ஸ்பெயினில் நடைபெறும் Rallye de Espana கார் ரேஸிங்கிற்கு இந்திய வீராங்கனை பிரகதி கவுடா தகுதி பெற்றார்.
Sorry, no posts matched your criteria.