India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤ மழை பெய்யும் போது கார்களை முடிந்தவரை மரங்களுக்கு கீழ் நிறுத்தாதீர்கள்.
➤ பிரேக் வேலை செய்யாத போது பிரேக்கை பம்ப் செய்து பம்ப் செய்து இயக்கினால் நிச்சயம் வேலை செய்யும்.
➤ குப்பைத்தொட்டிகள் அருகே காரை நிறுத்தும் பட்சத்தில் எலிகள் வயர்களை கடிக்க வாய்ப்புள்ளது.
➤ ஏசியை ஆஃப் செய்தால் கண்ணாடி, விண்ட்ஷீல்டுகளில் ஃபாக் போன்ற நீராவி புகையால் பாதை தெரியாமல் போக வாய்ப்புள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து தகவல்களை திரட்டி அசோக் யெசுரன் விரிவாக எழுதியுள்ள பயண நூல் தாய்லாந்து. இந்த நாட்டில் பயணிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை, பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள், அவற்றின் வரலாறு என ஒரு வழிகாட்டி போல விவரிக்கிறது. பயணக் கட்டுரையாக மட்டுமில்லாமல், சமூகம் – பொருளாதாரம் – அரசியல் விவகாரங்களின் தனிச்சிறப்புகளையும் அறிய இந்நூல் உதவுகிறது.
சென்னைக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு அறிவிக்கும் முன்பாகவே, சில தனியார் பள்ளிகள் நாளையும் விடுமுறை என தனிப்பட்ட முறையில் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. இதனால், அரசின் தாமதம் மாணவர்கள், பெற்றோர்களிடையே தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. விடுமுறை குறித்து இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என துணை முதல்வர் உதயநிதி கூறியது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமார் சினிமாவில் நடித்துக் கொண்டே கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். அவரது வழியில் நடிகை கீர்த்தி சுரேஷும் பயணிக்கத் தொடங்கியுள்ளார். அபுதாபியில் கார் பந்தய பயிற்சி பெற்ற அவர், கார் பந்தயத்தில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. பந்தயத்தில் களமிறங்கும் அவருக்கு சக நடிகைகள் & ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை நிபுணர் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலும், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் 2 வளிமண்டல சுழற்சி நிலவுவதை சுட்டிக்காட்டி, அது நாளை வடதமிழகம் நோக்கி நகரும் என்றும், இதனால் பல பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவித்தார். மேலும், புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
கனமழை காரணமாக நாளையும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என துணை முதல்வர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று மாலைக்குள் CM ஸ்டாலின் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார். சென்னையில் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும், 300 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சீனுராமசாமி இயக்கத்தில் குணசித்திர வேடத்தில் யோகிபாபு நடித்த ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படம் திரைக்கு வந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது தெரிந்ததே. இப்படத்திற்கு தற்போது இன்னொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது, ஸ்பெயின் பாரம்பரிய ஜிரோனா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது. இந்த விழாவில் திரையிட தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, வேலூர், விழுப்புரம், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்று முன்னறிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து, ₹56,760க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கம் ₹25 விலை குறைந்து ₹7,095க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நீண்ட கால அளவில் விலை ஏறுமுகமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளியை பொறுத்தவரையில் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ₹103க்கு விற்கப்படுகிறது.
கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் கனமழை முடியும் வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார். கனமழை, தீவிரக் காற்று வீசுவதால் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.