India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் வரும் நவ. 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஜார்க்கண்டிற்கு நவ.13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் நவ. 23-ம் தேதி வெளியாகும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை வந்துள்ளதை அடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதாலும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் அரசு இந்த விடுமுறையை நீட்டித்துள்ளது.
தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 2 நாட்களாக அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கிக் குவித்ததால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி வியாபாரிகள் சிலர் கூடுதல் விலைக்கு விற்பதாக கூறப்படுகிறது. இப்படி செய்பவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு கலெக்டர் எச்சரித்துள்ளனர். மற்ற அதிகாரிகளும் இதேபோன்ற நடவடிக்கை எடுப்பார்களா?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கிய கனமழை, இப்போது வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து மஸ்கட், கொழும்பு, விசாகப்பட்டினம், டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கவின் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இப்படத்தில் பிச்சைக்காரராக நடித்துள்ள அவர், சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். “மேக்கப் போட்டதுக்கு அப்புறமா உண்மையாவே பிச்சைக்காரன் போல இருக்கோமா என டவுட் வந்துச்சு. உடனே அப்படியே ரோட்டுக்கு போய் ஒரு அக்கா கிட்ட, 2 நாள் சாப்பிடல.. ஏதாவது கொடுங்கக்கா” என்றேன். அந்த அக்காவும் 20 ரூபாய் கொடுத்தாங்க. அப்பாடானு ஷூட்டிங் போயிட்டேன்” என்றார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்தநாள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கல்வியும், நெஞ்சில் கனவும், அதை நனவாக்கத் தேவையான கடும் உழைப்பும் இருந்தால், உயர்வு நம்மைத் தேடி வரும் என்ற ஊக்கத்தை இளைஞர்களிடம் விதைத்தவர் என பாராட்டிய அவர், கல்வியின் துணைக்கொண்டு – அறிவிற் சிறந்து விளங்கி, நமது இளைஞர்கள் அவருக்குப் பெருமை சேர்த்திட வேண்டும் என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் வீட்டிற்கு சென்றதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கனமழையால் செல்போன் சேவை தடைபடாமல் கிடைக்கும் வகையில், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு நிறுவனத்தின் சேவை துண்டிக்கப்பட்டால், மற்ற நிறுவனங்களின் உதவியுடன் செல்போன் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, Airtel, Jio உள்ளிட்ட நிறுவன பிரதிநிதிகள் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை உட்பட 9 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.