India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்மொழியில் காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் இதோ:
*மென்காற்று: 6 km வேகத்தில் வீசும் *இளந்தென்றல்: 6-11 km வேகத்தில் வீசும் *தென்றல்: 12-19 km வேகத்தில் வீசும் *புழுதிக்காற்று: 20-29 km வேகத்தில் வீசும் *ஆடிக்காற்று: 30-39 km வேகத்தில் வீசும் *கடுங்காற்று: 100 km வேகத்தில் வீசும் *புயல்: 101-120km வேகத்தில் வீசும் *சூறாவளி: 120km மேல் வேகமாக வீசும்.
*ரவா, மைதா உள்ள டப்பாவில் கொஞ்சம் சுட்டு வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. *பச்சை மிளகாயை காம்பு கிள்ளி எடுத்து வைத்தால் நீண்ட நாட்கள் பழுக்காமல் இருக்கும். *உருளைக் கிழங்கின் மீது பாசிப்பருப்பு மாவைத் தூவி, பொறித்தெடுத்தால் வறுவல் சுவையாக இருக்கும். *காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்கிரீமை ஊற்றி வைத்தால், அது சீக்கிரம் கெட்டியாகிவிடும்.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தப் பகுதியாக மாறியுள்ளது. இந்நிலையில், நாளை காலை அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிடும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். இது மேலும் வலுவடைந்து புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறும் அவர்கள், அது சென்னை அருகே அக். 17-ம் தேதி கரையை கடக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.
ரஜினி நடிப்பில் வெளியான ‘வேட்டையன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் நானி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் பஹத் ஃபாசில் நடித்த வேடத்தில் நடிக்க நானியை தயாரிப்பாளர்கள் அணுகியதாகவும், கதாபாத்திரம் பிடிக்காததால் அதில் அவர் நடிக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் அமிதாப், பஹத், ராணா ஆகியோரின் பாத்திரத்திற்கும் சரியான ரீச் இல்லை. நானியின் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு EPS வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளநீர் தேங்குவதிலிருந்து பாதுகாக்க அமைத்த குழு அளித்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ள அவர், நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மக்களின் செல்போனுக்கு message அனுப்பி எச்சரித்து வருகிறது. உங்களுக்கு அந்த மெசேஜ் வந்ததா?
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள்
உறவினர்களைவிட நண்பர்களுடன் பழகுவதையே விரும்புவீர்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கொண்ட கொள்கையிலும் எடுத்த முடிவிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டீர்கள். நீதி, நேர்மை, அறம், அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவீர்கள். அதிகாரத்துக்கு அடிபணியமாட்டீர்கள் என்று நந்தி வாக்கியப்பாடல் கூறுகிறது. இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.
இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய விளம்பர தூதராக ரஷ்மிகா மந்தனாவை உள்துறை அமைச்சகம் நியமித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ரஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வைரலானபோது, சைபர் குற்றத்திற்கு எதிராக அவர் பேசியிருந்தார். இந்நிலையில், சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், சைபர் குற்ற தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பேன் என கூறியுள்ளார்.
*45 கிலோ உள்ளவர்கள்-1.9 லிட்டர்
*50 கிலோ உள்ளவர்கள்-2.1 லிட்டர்
*55 கிலோ உள்ளவர்கள்-2.3 லிட்டர்
*60 கிலோ உள்ளவர்கள்-2.5 லிட்டர்
*65 கிலோ உள்ளவர்கள்-2.7 லிட்டர்
*70 கிலோ உள்ளவர்கள்-2.9 லிட்டர்
*75 கிலோ உள்ளவர்கள்-3.2 லிட்டர்
*80 கிலோ உள்ளவர்கள்-3.5 லிட்டர்
*85 கிலோ உள்ளவர்கள்-3.7 லிட்டர்
*90 கிலோ உள்ளவர்கள்-3.9 லிட்டர் *95 கிலோ உள்ளவர்கள்-4.1 லிட்டர் *100+ கிலோ உள்ளவர்கள்-4.3 லிட்டர்.
சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், அமைந்தகரை அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்வாங்கியுள்ளது. நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதி 150 மீ தூரத்திற்கு, 20 அடி ஆழத்திற்கு உள்வாங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். குடியிருப்பின் சுவரிலும் விரிசல் விழுந்துள்ளதால் அச்சமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.