news

News October 15, 2024

தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறையா?

image

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் குறைவான ஊழியர்களை வைத்து வேலை வாங்குமாறும், ஊழியர்களுக்கு WFH தருமாறும் தனியார் நிறுவனங்களை அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயத்தில், மழை அதிகமாகும்பட்சத்தில் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News October 15, 2024

ரிட்டயர்ட் ஆயிட்டிங்களா? வேலைக்கு வாங்க

image

ரயில்வேயில் காலி பணியிடங்களை, ஓய்வுபெற்ற பணியாளர்களை கொண்டு நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, points man, loco pilot, engineer, asst loco pilot, station master உள்ளிட்ட பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்படும். ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டு பணியில் நன்னடத்தை சான்று பெற்ற, 65 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர். அப்போ வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்கள்?

News October 15, 2024

மனம் திருந்தி திருடர்கள் செய்த செயல்..!

image

டெல்லியில் காரை திருடிய திருடர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லி பாலம் காலனியை சேர்ந்த வினய் குமார் என்பவர் அக்.10 முதல் தனது காரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அண்மையில் அவரது கார் நம்பர் பிளேட் இன்றி ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரை திருடியவர்கள் கார் திருடப்பட்ட இடத்துடன், மன்னிப்பு கடிதத்தையும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

News October 15, 2024

BREAKING: மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை!

image

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து, அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சேலம், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்வதால் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

தமிழக அரசை பாராட்டிய ஆளுநர் ஆர்.என்.ரவி

image

தொடர் கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு அனைத்து சாத்தியமான வழிகளிலும் முயற்சித்து வருகிறது என்றும், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததற்கு ஏற்ப, தமிழக அரசு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று ஆளுநர் பாராட்டியுள்ளார்.

News October 15, 2024

மகளிர் உரிமைத்தொகை ₹1,000 வரவு வைக்கப்பட்டது

image

மகளிர் உரிமைத் தொகையின் 14ஆவது தவணை இன்று பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு, தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்குகிறது. இதுவரை 13 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் 14வது தவணை, இன்று காலை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. உங்களது வங்கிக் கணக்கில் இந்த பணம் வந்ததா?

News October 15, 2024

பெங்களுரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

தமிழகத்தை தொடர்ந்து பெங்களூரிலும் மழை அடித்து நொறுக்கி வருகிறது. இன்று அதிகாலை முதலாகவே பெங்களுர் முழுவதும் கனமழை கொட்ட தொடங்கியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும், மெயின் ரோடுகளிலும் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்பதால் பெங்களூருக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 15, 2024

எக்ஸ்பிரஸ் ரயில்கள் திடீர் ரத்து!

image

சென்னையில் நேற்றிரவு முதல் தொடங்கிய கனமழை, இப்போது வரை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும், அடுத்த 4 நாட்களுக்கு சென்னையில் மழை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த கனமழை காரணமாக சென்னை பேசின்பிரிட்ஜ், வியாசர்பாடி ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, சப்தகிரி, ஏற்காடு, திருப்பதி, காவிரி ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

News October 15, 2024

BREAKING: சாம்சங் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்!

image

சாம்சங் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அரசின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இன்று தங்கள் போராட்டத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர். வேலைக்கு திரும்பும் ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என சாம்சங் நிறுவனத்தை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

News October 15, 2024

Recipe: சாமை அரிசி சிமிலி உருண்டை

image

வாணலியில் எள், தோல் நீக்கிய வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து, சலித்து எடுக்கவும். பாத்திரத்தில் சாமை அரிசி மாவுடன் (300 g) சிறிது நீர் & உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, அடை போல சுடவும். இவை ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாகப் பிசைந்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான சாமை அரிசி சிமிலி உருண்டை ரெடி.

error: Content is protected !!