India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் மீதான தாக்குதல் குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உழவர்களுக்கு அடுத்தபடியாக உயிர்காக்கும் கடவுள்களாக மதிக்கப்படுவது டாக்டர்கள்தான் என்றார். மருத்துவம் அளிப்பதில் பாகுபாடு காட்டப்படுவதில்லை எனவும், டாக்டர்கள் மீதான தாக்குதலை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் பணியில் இருந்த அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்டிரைக் அறிவிப்பால், மருத்துவத்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தோனி நேரில் ஆஜராக ஜார்கண்ட் ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தனது பெயரில் ஸ்போர்ட்ஸ் கல்வி நிறுவனங்களை திறக்க தோனிக்கும், அவரது முன்னாள் பார்ட்னர்கள் திவாகர், தாஸ் ஆகியோருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் காலக்கெடு முடிந்த பின்னரும், தனது பெயரை பயன்படுத்தி ₹15 கோடி மோசடி செய்ததாக தோனி புகார் அளித்திருந்தார். இதை எதிர்த்து பார்ட்னர்கள் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டாக்டர் பாலாஜிக்கு தலை, காதுப்பகுதி, முதுகில் கத்திக்குத்து விழுந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சையில் உள்ளதாகவும், அவர் இதய நோயாளி என்பதால் கத்திக்குத்தில் அதிகளவில் ரத்தம் வெளியேறி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தாக்குதல் நடத்தியவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் அல்ல, பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ்வரன் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மழை பெய்யும்போது, இடி மின்னல் விழலாம். அது தப்பித்தவறி வீட்டின் மேற்கூரையிலோ அல்லது ஏரியா EB Transformer மீதோ தாக்கினால் மின்சாதனங்கள் பாதிப்படைய வாய்ப்புண்டு. இதற்கான சாத்தியம் மிக குறைவே என்றாலும், இடி மின்னலின்போது, மின்சாரத்துடன் நேரடியாக தொடர்பில் உள்ள டிவி, ஃபிரிட்ஜ், ஏர் கூலர் போன்ற மின்சாதனங்களை Unplug செய்து, உபயோகிக்காமல் வைத்திருப்பது நல்லது.
இந்த செய்தியை பிறருக்கும் பகிருங்கள்.
ஊடக விவாதங்களில் தனி மனித தாக்குதல்கள் கூடாது என தவெக நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. ஊடக விவாதங்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியினர் வைக்கும் எதிர் கருத்துகளுக்கு கண்ணியமான முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தவெக கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் குழுவை அதிகப்படுத்தவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
மும்பையில் குடும்பத்தோடு செட்டிலானது சரியான முடிவு என சூர்யா தெரிவித்துள்ளார். மும்பை தனது மாமியாரின் ஊர் என்பதால், அதை பற்றி எப்படி தவறாகக் கூற முடியும் எனப் பேசியுள்ளார். ஜோதிகா தனக்காக 27 ஆண்டுகள் சென்னையில் இருந்தார். தற்போது அவரும் அவரது குடும்பத்தாருடன் இருக்க வேண்டும் என்பதால் மும்பைக்கு குடிபெயர்ந்ததாகக் கூறியுள்ளார். மேலும், இங்கு தனக்கு அதிகமான அன்பு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்விக்கி நிறுவனம், Employee Stock Ownership Plan (ESOP) திட்டத்தின் கீழ், தனது நிறுவன ஷேர்களை ஊழியர்களுக்கு ஒதுக்கியுள்ளது. அதன்படி, இன்று அதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், 5,000 ஊழியர்களுக்கு ₹9,000 கோடி மதிப்புள்ள ஷேர்கள் கிடைக்கும். இவர்களில் அதிகம் ஷேர்கள் பெறும் 500 பேர் கோடீஸ்வரர்களாக மாறுவர். முன்னதாக, மூத்த அதிகாரிகளுக்கு இதே வழியில் ₹1,600 கோடி கிடைத்தது.
பூசாரி தற்கொலை வழக்கில் ஓபிஎஸ் தம்பி ராஜா உட்பட 6 பேரை விடுதலை செய்து திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில் பூசாரியாக இருந்த நாகமுத்து, “தனது மரணத்திற்கு ஓ.ராஜா உள்ளிட்டோர் தான் காரணம்” என கடிதம் எழுதிவைத்துவிட்டு 2012இல் தற்கொலை செய்துக் கொண்டார். இவ்வழக்கு 12 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என SC தெரிவித்துள்ளது. வீடுகளை புல்டோசர் கொண்டு இடிப்பதற்கு எதிரான வழக்கில், வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு; அது கலைந்து விடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், இருக்கும் சட்டத்தை கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும். அதிகாரிகள் நீதிபதிகள் கிடையாது. அதிகாரிகள் தன்னிச்சையாக அதிகாரத்தை பயன்படுத்தக்கூடாது என கூறியுள்ளது.
Sorry, no posts matched your criteria.