India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று காலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, வேலூர், தி.மலையில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது. SHARE IT.
ஞானவேல்ராஜா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான வேட்டையன், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படத்தில் பகத் பாசில் கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நானியை படக்குழு அணுகியதாகவும், ஆனால் கதாபாத்திரத்துக்கு போதிய முக்கியத்துவம் இல்லை எனக் கூறி அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இது உண்மையா என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 1) அதி கனமழை: திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் 2) மிக கனமழை: வேலூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் 3) கனமழை: கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இந்தியா, நியூசி. அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. நியூசி. அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் காெண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட், பெங்களூரில் இன்று முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியை Sports 18-1 SD, Sports 18-1 HD, Sports 18-2 (Hindi) டிவிக்களில் காணலாம். JioCinema app மற்றும் வெப்சைட்டிலும் போட்டியை காண முடியும்.
▶அக். 16 (புரட்டாசி 30) ▶புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM▶ திதி: சதுர்தசி ▶ பிறை: வளர்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: உத்திரட்டாதி ▶சந்திராஷ்டமம்: மகம், ஆயில்யம். SHARE பண்ணுங்க
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள பேசின்பிரிட்ஜ் தண்டவாளம் மீது மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த வழியே சென்ட்ரல் செல்லும் ரயில்கள், சென்ட்ரலில் இருந்து வெளியூர் செல்லும் ரயில்கள் ஆவடிக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் ஆவடியில் ரயில்களுக்காக குவிந்துள்ளனர். இதனால் வழக்கத்தை விட ஆவடி ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடவுள்ளது. ராம்கார், தராரி, பெலகாஞ்ச், இமாம்காஞ்ச் ஆகிய 4 தொகுதிகளுக்கு நவ.13இல் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் ஆளும் கூட்டணியில் உள்ள பாஜக 2 தொகுதிகளிலும், ஜேடியூ 1, ஜித்தன் ராம் மாஞ்சி கட்சி1 தொகுதியிலும் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஜன் சுராஜ் கட்சியும் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்கவுள்ளது.
சிங்கப்பூர் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக அந்த நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் 2 சிங்கப்பூர் போர் விமானங்கள் துணையுடன் அந்த விமானம் பத்திரமாக சிங்கப்பூரில் தரையிறக்கப்பட்டது. அங்கு விமானத்தில் சோதனை நடத்தப்படவுள்ளது.
<<14363983>>மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்<<>> மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சித் தலைவர் மாயாவதி, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட இருப்பதாகவும் அந்தப் பதிவில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.