India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பழைய ₹100 நோட்டுகள் செல்லாது என சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள RBI, இத்தகவல் தவறானது எனவும், பழைய மற்றும் புதிய ₹100 நோட்டுகள் இரண்டும் சட்டப்படி செல்லுபடியாகும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன், பழைய ₹100 நோட்டுகளை காலக்கெடு, கட்டணம் எதுவுமின்றி எந்த வங்கிக் கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.
கனமழையில் மீட்பு, நிவாரணப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் துணை முதல்வர் உதயநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், இன்று கனமழை பெய்தாலும், அதை எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். மேலும், சென்னையில் எங்கும் வெள்ளம் தேங்காமல் வடிந்திருப்பதே பழனிசாமிக்கான வெள்ளை அறிக்கை என அவர் பதிலடி கொடுத்தார்.
சென்னை மாநகராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன்கள் மூலம் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒத்திகை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா முன்னிலையில் நடைபெற்றது. நேற்று பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
1) இரு விரல்கள் மட்டுமே கொண்ட பறவை எது? 2) மிகப் பெரிய பல்லி இனம் எது? 3) உலகின் மிகப் பெரிய கண் வங்கி எந்த நாட்டில் உள்ளது? 4) நாயைவிட பல மடங்கு மோப்ப சக்தி கொண்ட மீன் எது? 5) உலகின் 2ஆவது உயரமான சிகரம் எது? 6) CBCID என்பதன் விரிவாக்கம் என்ன? 7) ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியைத் தொகுத்து முடிக்க எத்தனை ஆண்டுகளானது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்தவகையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்து ஒரு சவரன் ₹57,120க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ஒரு கிராம் ₹7,140க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹103க்கும், கிலோ ₹1,03,000க்கும் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது.
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
‘தளபதி 69’ படத்தில் விஜய் முன்னாள் காவல் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இப்படம், விஜய்யின் கடைசி திரைப்படமாக தயாராகவுள்ளது. இந்நிலையில், சமூக பிரச்னைகளை கதை களமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
தெலங்கானாவில் 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜு – ஜமுனா தம்பதியரின் மகளான உக்குலுவுக்கு, நேற்று காலை கண் வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறுமியை மருத்துவமனை அழைத்துச் சென்றபோதும், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், சிறுமிக்கு பிறந்ததில் இருந்தே இதயம் தொடர்பான பிரச்னை இருந்திருக்கலாம் என்றும், அதனை அடையாளம் காணவில்லை என்றனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகளின் விலை இன்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.80ஆக குறைந்துள்ளது. ஒரு கிலோ கேரட் நேற்று ரூ.70ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. இதேபோல், பல்வேறு காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.