India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நியூசி.க்கு எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் விராட் கோலி அரை சதம் கடந்துள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் டெஸ்டில் 9,000 ரன்களை கடந்து அசத்தியுள்ளார். சச்சின் (15,921), ராகுல் டிராவிட் (13,265), கவாஸ்கரை (10,122) தொடர்ந்து 9,000 ரன்களைக் கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மிக குறைந்த இன்னிங்சில் (197) இந்த மைல்கல்லை அவர் எட்டியது குறிப்பிடத்தக்கது.
வீட்டுக்கு தெரியாமல் ரயில் ஏறிய உத்தரகாண்ட் சிறுமி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது 15 வயது மகள் காணாமல் போனதாக பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, டெல்லியில் ஹோட்டல் ஒன்றில் சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர். ரயில் பயணத்தில் 3 பேருடன் நட்பு ஏற்பட்டதும், அவர்களுடன் சேர்த்து மொத்தம் 5 பேர் அந்த சிறுமியை வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கு சம்பந்தம் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. DD தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவிர ஆளுநருக்கு அதில் எந்த பங்கும் இல்லை எனவும், தமிழ் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகள் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், வாழ்த்துப் பாடலை பாடிய குழுவினரே ‘திராவிட வரிகளை’ தவறவிட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
*பிரிஞ்சி இலைகளை குடிநீராகக் காய்ச்சி தினமும் காலை சிறிதளவு குடித்து வந்தால், கொழுப்பு குறையும்.
*சிறிது பிரிஞ்சி இலைப் பொடியுடன், 2 சிட்டிகை ஜாதிக்காய் பொடி சேர்த்து பாலில் கலந்து கொதிக்கவைத்து வடிகட்டிக் குடித்தால் நிம்மதியான உறக்கம் வரும்.
*வாந்தி, வாய்ப்புண், நீர்வேட்கை, ஜுர நோய்கள், இரைப்பு நோய் போன்றவற்றுக்கு பிரிஞ்சி இலை எதிரி.
திமுக தனித்து தேர்தலில் வென்ற வரலாறு இல்லை என அதிமுக EX அமைச்சர் செம்மலை விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு வாக்கு வங்கி குறைந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், திமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யவே இந்த மாதிரியான தகவல் பரப்பப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்றும், இபிஎஸ் மீண்டும் முதல்வராவார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜப்பானில் பல ஆண்டுகளாக வேலைக்குச் செல்லாத ரியுதா வதனாபே என்ற நபர், 3 மனைவிகள், 2 பெண் தோழிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டு வேலைகளை அந்த நபர் கவனித்துக் கொள்ள மனைவிகளும், தோழிகளும் வேலைக்குச் சென்று வீட்டுச் செலவுகளை பார்த்து கொள்கின்றனர். அதிக திருமணங்களை செய்து கொண்டு 54 குழந்தைகளைப் பெற்று வரலாற்றில் இடம்பெறுவதே தனது இலக்காக இருப்பதாக கூறுகிறார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது திராவிடம் என்ற சொல் விடுபட்டது குறித்து DD தமிழ் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது. DD தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் குளறுபடி ஏற்பட்டதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உடலின் கழிவுகளை வெளியேற்றுவது போல, மனக்கழிவுகளையும் அவ்வப்போது வெளியேற்ற வேண்டும் என உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அடக்கி வைக்கப்படுகிற மன உணர்வுகள் ஆபத்தானவை என்பதால் வார்த்தைகளால் அதை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இதை கேட்பதற்குக் கொஞ்சம் விநோதமாகக் கூட இருக்கலாம். யாரும் இல்லாத இடத்துக்குச் சென்று பேசி, கத்திக்கூட நம் உணர்வுகளை வெளியேற்றலாம். இதனாலும் மனம் அமைதியாகும்.
டெஸ்டில் சேவாக்கின் வாழ்நாள் சாதனையை நியூசி. வீரர் டிம் சவுதி முறியடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் டிம் சவுதி 65 ரன் எடுத்தார். அதில் 4 சிக்சர்களும் அடக்கம். இதன் மூலம் டெஸ்டில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் சேவாக்கை (91 சிக்ஸ்) பின்னுக்கு தள்ளி டிம் சவுதி (93 சிக்ஸ்) 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் பென் ஸ்டோக்ஸ் (131 சிக்ஸ்) உள்ளது குறிப்பிடத்தக்கது.
16ஆவது BRICS மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, வருகிற 23ஆம் தேதி ரஷ்யா செல்ல உள்ளார். கசான் நகரில் 3 நாள்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த பயணத்தின் போது, BRICS நாடுகளின் தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக, BRICS கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா என 5 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன. அது தற்போது ஈரான், சவுதி என 10 நாடுகளாக வளர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.