India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நந்தன் படத்தை பாராட்டிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அப்படத்தில் கதாநாயகன் சசிகுமார் நன்றி கூறியுள்ளார். “பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி ‘நந்தன்’ படத்தைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பயணம் வெற்றிகரமாக அமையட்டும்” என தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முன்னதாக, நந்தன் படம் மக்கள் மனதில் காலத்திற்கும் இடம் பெறும் என அண்ணாமலை பாராட்டியிருந்தார்.
▶அக். 20 (ஐப்பசி 3) ▶ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM▶குளிகை: 3:00 PM – 4:30 PM▶ திதி: சதுர்த்தி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: மேற்கு▶ பரிகாரம்: வெல்லம் ▶ நட்சத்திரம்: கார்த்திகை ▶சந்திராஷ்டமம்: சித்திரை, ஹஸ்தம். SHARE பண்ணுங்க.
போருக்கு தயாராக இருக்கும்படி சீன ராணுவ வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார். வீரர்கள் வலிமையுடன் களமாட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தைவானை தனது நாடு என சொந்தம் கொண்டாடும் சீனா, சமீப காலமாகவே அந்நாட்டுக்கு எதிராக ராணுவ அச்சுறுத்தல்களை அதிகரித்துள்ளது. மேலும், இந்தியா இடையே எல்லைப் பிரச்னை நீடிக்கும் நிலையில், சீன அதிபரின் உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. 11ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் இந்த தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதம் தலா ₹1500 என 2 ஆண்டுக்கு வழங்கப்படும். நடப்பாண்டுக்கு இன்று தேர்வு நடைபெற்ற நிலையில், 2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் மோடி நாளை ₹6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு மோடி நாளை செல்கிறார். அப்போது அவர், பல்வேறு விமான நிலையம் தொடர்பான பணிகளை தொடங்கி வைக்கவுள்ளார். புதிய கண் மருத்துவமனை, சார்நாத் சுற்றுலா மேம்பாட்டு மையத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம். 1) பாலில் கால்சியம், வைட்டமின் டி சத்து இருப்பதால் எலும்பு வலுப்படும் 2) உயர்தர புரொட்டின், அமினோ ஆசிட்ஸ் இருப்பதால் தசைகள் வேகமாக வளரும், தசைகளில் பிரச்னை இருப்பின் சரியாகும் 3) பாலில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதை குடிப்பது இதய நலனை மேம்படுத்தும் 4) பாலில் இருக்கும் லைனோசிட் ஆசிட் உடல் எடையை பராமரிக்க உதவும்.
19 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, வேலூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தி.மலை, தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, திருவாரூரில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியை திணிப்பதற்கான ஒரு முயற்சியே என துரை வைகோ கூறியுள்ளார். இந்தி மொழிக்கு தமிழர்கள் எதிரானவர்கள் கிடையாது என்றும், அதே வேளையில் இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். இரு மொழிக் கொள்ளைதான் திராவிட இயக்கங்களின் கொள்கை, இருமொழிக் கொள்கை இருப்பதால்தான், உலகம் முழுவதும் தமிழர்கள் ஆளுமைகளாக இருக்கிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்களை கவரும் வகையில் தன்னுடைய அடுத்த படம் இருக்கும் என சிம்பு தெரிவித்துள்ளார். தம்+ மன்மதன்+ வல்லவன்+ VTV ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். அவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் அந்தப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் மத்தியில் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற புது வியாதி வந்துள்ளதாக துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நடப்பு ஆண்டில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், கல்வி வணிகமாக மாறுவது தேசத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தேசிய கல்விக் கொள்கையை ‘கேம் சேஞ்சர்’ எனவும் பாராட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.