news

News April 14, 2025

மருமகனை மீண்டும் கட்சியில் சேர்த்த மாயாவதி!

image

மருமகன் ஆகாஷ் ஆனந்த் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்டதால் அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார் மாயாவதி. அதே நேரம் ஆரோக்கியமாக இருக்கும் வரை யாரையும் அரசியல் வாரிசாக நியமிக்கப் போவதில்லை என மாயாவதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதால், அரசியல் வாரிசாக இருந்த ஆகாஷை, கட்சியில் இருந்து மாயாவதி நீக்கியிருந்தார்.

News April 14, 2025

நோபல் எழுத்தாளர் மரியோ வர்காஸ் லோசா காலமானார்!

image

பெரு எழுத்தாளரும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான மரியோ வர்காஸ் லோசா காலமானார் (89). 50 ஆண்டுகளாக இலக்கிய நயத்துடன் புத்தகங்கள் எழுதி, எழுத்துலகில் கோலோச்சியவர். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், லிமாவில் உள்ள வீட்டில் அவரது உயிர் அமைதியாக பிரிந்தது. ‘Death in the Andes’, ‘The war of the End of the World’ படைப்புகளுக்காக 2010ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

News April 14, 2025

காரில் பாம் வெடிக்கும்.. சல்மானுக்கு கொலை மிரட்டல்

image

நடிகர் சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு சரியாக ஓராண்டு கழிந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்வோம் எனவும், காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் எனவும் மும்பை போக்குவரத்து துறையின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 14, 2025

இந்தியாவில் அதிகரிக்கும் ஐபோன் உற்பத்தி..!

image

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களின் உற்பத்தி 60% அதிகரித்துள்ளது. மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2024- 25 நிதியாண்டில் ஐபோன் விற்றுமுதல் (Turnover) ₹1.89 லட்சம் கோடியை தொட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பிரிவில் ஐபோன்கள் மட்டும் ₹1.5 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது.

News April 14, 2025

அதிமுகவிலிருந்து விலகலா? ஜெயக்குமார் விளக்கம்

image

அதிமுகவிலிருந்து விலகுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருமாவளவன் திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக ஆவேசமாக கூறினார். மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் தான் கட்சியிலிருந்து விலகுவேன் என எங்கும் கூறவில்லை எனவும் உயிர்மூச்சு இருக்கும் வரையில் அதிமுகவில் தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.

News April 14, 2025

இந்த பாட்டில் தண்ணீர் விலை ஜஸ்ட் ₹50 லட்சம்தான்!

image

உலகின் மிக விலை உயர்ந்த பாட்டில் தண்ணீர் ‘Acqua di Cristallo Tributo a Modigliani’ ஆகும். 750 மி.லி கொண்ட இந்த பாட்டிலின் விலை ₹50 லட்சம். 24 காரட் தங்கத்தால் செய்யப்படும் இந்த பாட்டில் தண்ணீரில் 5 கிராம் தங்கம் சேர்க்கப்படுகிறது. பிரான்ஸ், பிஜி, ஐஸ்லாந்தில் இருந்து சேகரிக்கப்படும் நீர் இதில் நிரப்பப்படுகிறது. இதன் பெயர் 2019-ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

News April 14, 2025

அண்ணல் அம்பேத்கருக்கு ராகுல் காந்தி மரியாதை!

image

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். இந்திய அரசமைப்பை கட்டமைத்த பாபாசாஹேப்பை இந்நாளில் வணங்குவதாக X பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில், அம்பேத்கரின் போராட்ட குணம் நிச்சயம் வழிகாட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News April 14, 2025

சிஎஸ்கேவில் களமிறங்கும் 17 வயது வீரர்?

image

சிஎஸ்கே கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக நடப்பு சீசனில் இருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக 17 வயது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதேநேரத்தில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2025

வெள்ளி விலை கிலோவுக்கு ₹2,000 குறைந்தது

image

சென்னையில் வெள்ளி விலை இன்று (ஏப்.14) கிலோவுக்கு ₹2,000 குறைந்துள்ளது. இதனால் நேற்று ₹110-க்கு விற்பனையான ஒரு கிராம் இன்று ₹108-க்கும், ₹1,10,000க்கு விற்பனையான ஒரு கிலோ பார் வெள்ளி ₹1,08,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் திடீரென விலை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

News April 14, 2025

குரூப்–1 தேர்வில் விவசாயி மகள் சாதனை: பாராட்டிய அமைச்சர்

image

குரூப் – 1 தேர்வில் முதலிடம் பிடித்த விவசாயி மகளுக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்தார். கடலூர், வாழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த விவசாயி கலைச்செல்வனின் மகள் கதிர்செல்வி, கடந்த ஆண்டு குரூப்–1 தேர்வு எழுதினார். அண்மையில் இதன் முடிவுகள் வெளியான நிலையில், மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதித்தார். இதையடுத்து மாணவியை அழைத்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பாராட்டினார்.

error: Content is protected !!