India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளையும் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர் விளாசிய முதல் 6 இந்திய வீரர்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
1) சேவாக் – 90 சிக்சர் (178 டெஸ்டுகள்)
2) ரோஹித் ஷர்மா – 88 சிக்சர் (107 டெஸ்டுகள்)
3) தோனி – 78 சிக்சர் (144 டெஸ்டுகள்)
4) சச்சின் டெண்டுல்கர் – 69 சிக்சர் (329 டெஸ்டுகள்)
5) ரவீந்திர ஜடேஜா – 66 சிக்சர் (109 டெஸ்டுகள்)
6) பண்ட் – 64 சிக்சர் (62 டெஸ்டுகள்)
ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான ₹4,200 கோடி மதிப்பிலான பணம், தங்கத்தை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ல அல்சஹல் மருத்துவமனைக்கு நேர் கீழாக இருந்த, ஹசன் நசரல்லாவின் பதுங்கு குழியில் இருந்து இவை கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பணத்தைக் கொண்டு லெபனானை மறுகட்டமைப்பு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
➤மாவில் சிறிது சீரகத்தை தேய்த்துப் போட்டு, தோசை சுட்டால் மணமாக இருக்கும். ➤இனிப்பு பொங்கல் செய்யும்போது தேங்காய் பால் ஊற்றிக்கிளறி, இறக்கினால் சுவை கூடும். ➤காய்ந்த ஆரஞ்சு தோல்களை அலமாரிகளில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. ➤கரைக்க கடினமாக இருக்கும் புது புளியை கல் உப்பு ஜாடியில் போட்டு வைத்தால், மிருதுவாகிவிடும். ➤சுண்டல் கெட்டுப்போகாமல் இருக்க கொப்பரைத் தேங்காயைத் துருவி, வதக்கிப் போடவும்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் தன் மகன்கள் மூலமாக ₹411 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகாரளித்துள்ளது. சென்னை GST சாலையில் அந்த அரசு நிலம் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை, முதல்வர், துணை முதல்வர் செயலாளர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது. டெக்கான் ஃபன் ஐலேண்ட் அண்ட் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் மூலம் அமைச்சரின் மகன்கள் அபகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள CRPF பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இ-மெயிலில் மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களிடையே பீதியை உருவாக்க யாரோ வேண்டுமென்றே இதை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் டெல்லி ரோகிணி காலனியில் நடந்த மர்ம வெடிப்பு சம்பவத்தால், இந்த மிரட்டலை புறந்தள்ளாமல், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தவெக முதல் மாநாட்டில் விஜய் ஆற்றப்போகும் உரையை இயக்குநர் H.வினோத் வடிவமைத்துத் தரவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருவருக்கும் ‘Thalapathy 69’ படப்பிடிப்பின்போது, நெருங்கிய நட்புறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாக அரசியல் களத்தின் பழைய முக்கிய நிகழ்வுகள் குறித்து வினோத்திடம் அவர் மிக ஆர்வமாக விவாதித்ததோடு, தனியாக கலந்துரையாடியுள்ளார்.
➤தியோடோசியஸ் வால்டர் – திருச்சபை வரலாறு (1725) ➤தொம்மாசோ ரோஸ்ஸி – புனிதர் வரலாறு (1736) ➤ஃபேப்ரிசியஸ் – நாணயங்கள் பெருந்தொகுப்பு (1740) ➤ராட்லர் – இந்திய தாவரங்கள் ஆய்வு (1776) ➤காலின் மெக்கென்ஸி – கல்வெட்டுகள் பெருந்தொகுப்பு (1783) ➤எல்லிஸ் – திருக்குறள் ஆங்கிலம் நூல் (1796) ➤ஜான் டுபோயிஸ் – தமிழரின் பழக்க வழக்கங்கள் (1792) ➤மிரோன் வின்சுலோ – 68,000 சொற்கள் அடங்கிய தமிழ்-ஆங்கில அகராதி (1862)
NZ-க்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான ஃபிட்னஸுடன் பண்ட் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் போது, விபத்தில் அறுவை சிகிச்சை செய்த அதே இடத்தில் அடிபட்டதால் அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார். இருப்பினும் 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் களமிறங்கினார்.
கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியாகி உள்ளது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மிச்செலின் துபாய் 24H 2025, ஐரோப்பிய 24H தொடர் சாம்பியன்ஷிப், போர்ஸ் 992 GT3 கோப்பை பிரிவுகளில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி பங்கேற்க உள்ளது.
Sorry, no posts matched your criteria.