news

News October 31, 2025

ஸ்டாலினை சீரியஸாக எடுக்க வேண்டாம்: கவுதமி

image

சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என CM ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கவுதமி பேசியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற அவர், அப்போதுதான் மக்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தைக் காப்பாற்ற இபிஎஸ் தலைமையிலான அதிமுகதான் சரியான தேர்வு எனவும் உறுதியாக கூறியுள்ளார்.

News October 31, 2025

பாகுபலி 3 எடுக்க இவ்ளோ பட்ஜெட்டா?

image

‘பாகுபலி: தி எடர்னல் வார்’ படத்திற்கான பட்ஜெட் ₹120 கோடி என ராஜமௌலி அறிவித்துள்ளார். பாகுபலி 1-ம் கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில்தான் எடுக்கப்பட்டது. அனிமேஷனில் உருவாகும் இப்படம் 2027-ல் வெளியாகலாம். இந்நிலையில், இன்று வெளியாகும் ‘பாகுபலி: தி எபிக்’ படத்தின் இடைவேளையில் ‘தி எடர்னல் வார்’ படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 31, 2025

விஜய்யுடன் கூட்டணி பேச்சு இல்லை: EPS

image

தவெகவுடன் அதிமுக இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை; அதேபோல் தவெகவும் எங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என EPS தெரிவித்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பின், TVK உடன் ADMK கூட்டணி வைக்க முயற்சிப்பதாக பேச்சு அடிப்பட்டது. அதேபோல், விஜய்யுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, கூட்டணியை விரிவுபடுத்த விரும்புவதாக அமித்ஷாவும் பதிலளித்திருந்தார். இந்நிலையில் EPS இவ்வாறு பதிலளித்துள்ளார்.

News October 31, 2025

மரத்தில் காய்க்கும் தங்கம்.. நம்பலனாலும் நிஜம்தான்!

image

வடக்கு பின்லாந்தில் வளரும் Norway spruce மர இலைகளில் தங்க நானோ துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அப்பகுதிகளில் மண் & பாறைகளில் தங்கம் கரைந்து soluble ions வடிவில் உள்ளன. அவை நிலத்தடி நீராக மரத்தின் வேரை அடைந்து, மரத்தில் கலக்கின்றன. மரத்தில் உள்ளே Endophytic microbes, இந்த ions-ஐ தங்க நானோ துகள்களாக மாற்றி, இலைகளில் மிளர செய்கின்றன. இந்த மரத்துக்கு இப்போதே மவுசு எகிறியுள்ளது.

News October 31, 2025

BREAKING: நள்ளிரவில் விஜய்க்கு வந்த அதிர்ச்சி

image

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புஸ்ஸி N.ஆனந்துக்கு தகவல் கிடைத்ததும், பதறியடித்துக் கொண்டு அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், அவர் உள்ளே அனுமதிக்கப்படாமல் வெளியிலேயே காத்திருக்க வைக்கப்பட்டார். விஜய்க்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 31, 2025

இதுதான் இந்த ஆண்டின் வார்த்தை!

image

ஒரு ஆண்டில் மக்கள் அதிகமாக பயன்படுத்திய சொல்லை, Word of the year என குறிப்பிட்டு பல பிரபல Dictionary-களும் ஒரு லிஸ்ட்டை வெளியிடுவார்கள். அப்படி, 2025-ம் ஆண்டின் ‘Word of the year’ ஆக ‘67’-ஐ Dictionary.com தேர்வு செய்துள்ளது. US ராப்பர் Skrilla-வின் பாடலான Doot Doot (6 7) என்பதை மக்கள் அதிகமாக பயன்படுத்தியதால், இந்த நம்பர்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன. நீங்க இந்த வருடம் அதிகமா யூஸ் பண்ண வார்த்தை எது?

News October 31, 2025

ஹிந்து மதம்: JD வான்ஸ் சர்ச்சை கருத்து!

image

USA-வின் குடியேற்ற சட்டங்கள் குறித்து இந்திய வம்சாவளி பெண்ணுடன் நடந்த <<18155827>>விவாதத்தின்<<>> போது, JD வான்ஸ் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வான்ஸின் மனைவி ஹிந்து என்பதை சுட்டிக்காட்டிய பெண், குழந்தைகளுக்கு எந்த மதம் குறித்து சொல்லி தருகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு வான்ஸ், தனது மனைவி உஷா, ஹிந்து மதத்தில் இருந்து மாறி, கிறிஸ்தவராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை.. இங்கு NO விடுமுறை

image

மாமன்னன் ராஜராஜசோழனின் 1040-ம் ஆண்டு சதய விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திற்கு நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், அக்.22-ம் தேதி கனமழையால் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 31, 2025

காய்ச்சலை விரட்டும் கறிவேப்பிலை கசாயம்!

image

எந்த காய்ச்சலையும் விரட்ட கறிவேப்பிலை கசாயம் பருகும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱தேவை: கறிவேப்பிலை, மிளகு, சீரகம், இஞ்சி, பனங்கற்கண்டு அல்லது தேன் ✱செய்முறை: இவை அனைத்தையும் நன்கு இடித்து, நீரில் கொதிக்க வைக்கவும். 3-5 நிமிடங்கள் கொதித்த பிறகு, வடிகட்டி பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்தால், கறிவேப்பிலை கசாயம் ரெடி. இதனை காலை, மாலை என இரு வேலை பருகலாம். SHARE IT.

News October 31, 2025

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: அன்புமணி

image

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கணக்கெடுப்பை நடத்தி, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டினை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!