India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

EPS-க்கு எதிரான மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 2022-ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளராக EPS தேர்வானதற்கு எதிராக உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கெனவே, தள்ளுபடியான இவ்வழக்கில் மனுதாரர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில், மனுதாரர் அதிமுகவை சேர்ந்தவர் அல்ல என்பதால் அவரது வாதங்களை ஏற்க கோர்ட் மறுத்துவிட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மல்லிப்பூவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லி ₹12,000-க்கு இன்று விற்பனையாகிறது. கடும் பனி, வரத்து குறைவே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. 1 கிராம் தங்கத்தின் விலை ₹12,000-க்கு விற்கப்படும் நிலையில், அதனை மல்லிப்பூவும் எட்டியுள்ளது. இந்த விலையேற்றத்தால் பூ விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

டெல்லியில் வரும் ஜன.18, 19-ம் தேதிகளில் TN காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்த உள்ளார். ஆட்சியில் பங்கு, தவெகவுடன் கூட்டணி போன்ற பேச்சுகள் தமிழக காங்கிரஸ் மீது திமுக தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜனநாயகன் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களே பெரும் குரல் கொடுத்தனர். இந்நிலையில் டெல்லி மீட்டிங் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயில்கள் பல்வேறு காரணங்களால் பிரபலமாக உள்ளன. அதில், சில கோயில்கள் பிரசாதங்களுக்கு பெயர்பெற்றவை. பிரபலமான சில கோயில்களையும், அங்கு வழங்கப்படும் பிரசாதங்களையும் மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்க ஊர் கோயில்களில் என்ன பிரசாதம் கிடைக்கும் என்று கமெண்ட்ல சொல்லுங்க.

ராமதாஸ் தரப்பில் பாமக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்நிலையில், 2026 தேர்தலில் பாமக செயல் தலைவர் காந்திமதி போட்டியிடுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என குறிப்பிடவில்லை. அன்புமணி NDA கூட்டணியில் இணைந்த நிலையில், ‘பாமக சார்பில் வேட்பாளர்’ என ராமதாஸ் அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரில், <<18778046>>’உங்க கனவ சொல்லுங்க’<<>> திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய, மாநில அரசுக்கு பாலமாக இருக்க வேண்டிய கவர்னர், TN அரசு இயற்றும் சட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளதாக விமர்சித்தார். மேலும், 505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக குறிப்பிட்டார். 7 துறைகளில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக வளர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 15 இடங்களில் கட் செய்ய தணிக்கை வாரியம் அறிவுறுத்தியதாக கூறப்பட்ட நிலையில், மறுஆய்வுக் குழுவை படக்குழு அணுகியிருந்தது. தற்போது தணிக்கை சான்றிதழ் சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் திட்டமிட்டபடி ‘பராசக்தி’ நாளை ரிலீசாகிறது. மேலும், தமிழகம் முழுவதும் ’பராசக்தி’ படத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்கவுள்ளது.

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல், மனநிலை ஆகியவற்றை சில உணவுகளின் மூலம் அதிகரிக்க முடியும். சிறிய தேர்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் உணவுகள் என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.

சென்சார் விவகாரம் விஜய் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்த நிலையில், ‘ஜனநாயகன்’ படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க சென்னை HC உத்தரவிட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே CBFC தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதால் படம் ரிலீஸாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் கேரள விநியோகஸ்தரான SSR Entertainments நிறுவனம் ‘January 14 JanaNayagan’ என X-ல் பதிவிட்டுள்ளது.

விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு திமுக அரசு தலா ₹3,000 கொடுத்துள்ளதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் விளம்பரத்திற்காக விவசாயிகளை திட்டமிட்டு திமுக அரசு மோசடி செய்திருப்பதாகவும் அவர் X-ல் சாடியுள்ளார். எனவே, விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டுமென அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.