India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிக்கெட் உலகில் முக்கிய டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஜோ ரூட் இருக்கிறார். நேற்று நடைபெற்ற NZ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் நிகழ்த்திய சாதனை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. அதாவது, டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் அவர் மொத்தம் 1630 ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். இதன்மூலம், 1625 ரன்கள் எடுத்திருந்த சச்சினின் சாதனையை ரூட் முறியடித்துள்ளார்.
இந்த ஆண்டின் சிறந்த இயக்குநருக்கான நம்பிக்கை நட்சத்திர விருதை ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் வென்றுள்ளார். மலேசியாவில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது பெற்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மகாராஜாவை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி தீர்த்த நிலையில், தற்போது சீன மக்களும் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக ஃபெஞ்சல் புயல் நகராமல் நிலை கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூருக்கு 30 KM தொலைவிலும், விழுப்புரத்துக்கு 40 KM தொலைவிலும், சென்னைக்கு 120 kM தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் கூறியுள்ளது.
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் விரைவில் AC பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக சென்னை பீச் – செங்கல்பட்டு இடையேயான ரயில்களில் இணைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் 10 கி.மீ. தொலைவிற்கு ₹29, 11-15 கி.மீ.க்கு ₹37, 16-25 கி.மீ.க்கு ₹56 என கட்டணம் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது. மெட்ரோவில் குறைந்தபட்ச கட்டணமே ₹10, ஆனால் இதில் ₹29 என்பது அதிகபட்சம் என்று தற்போதே விமர்சனம் எழுந்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னரும் வலுவிழக்காமல் உள்ள நிலையில், சென்னையில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 2வது நாளாக இன்றும் மக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
சென்னையில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் செல்வி நகர், GKM காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
நடிகர் சூர்யாவின் 45ஆவது திரைப்படத்தில் நடிகை ஸ்வாசிகா முக்கிய வேடத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மன் கோயிலில் சூர்யா சாமி தரிசனம் செய்தார். இப்படத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முலுகு மாவட்டம் சல்பாக்கா அருகே உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே இன்று காலை மோதல் ஏற்பட்டது. இதில், நரசம்பேட்டையை சேர்ந்த 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது கடந்த 14 ஆண்டுகளில் அங்கு நடந்த மிகப்பெரிய என்கவுன்டர் என்று கூறப்படுகிறது.
NIA-வில் 164 (காலி இடங்களுக்கு ஏற்ப எண்ணிக்கை மாறுபடக்கூடியது) இடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. டெபுடேசன் அடிப்படையிலான இந்த பணியிடங்கள் அனைத்தும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், அசிஸ்டென்ட் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பதவிகள் ஆகும். கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவற்றை <
அமெரிக்க புலனாய்வு பிரிவான FBI-ன் இயக்குநராக காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஒரு சிறந்த வழக்கறிஞர், புலனாய்வாளர், அமெரிக்காவின் முதல் போராளியை நியமிப்பதில் பெருமை கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளியான காஷ், முந்தைய டிரம்ப் ஆட்சியில் பாதுகாப்புத் துறை தலைவராகவும், தேசிய உளவுத்துறையின் இணை இயக்குநராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.