India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
▶அக். 24 (ஐப்பசி 7) ▶ வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM▶குளிகை: 9:00 AM – 10:30 AM▶ திதி: அஷ்டமி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு▶ பரிகாரம்: தைலம் ▶ நட்சத்திரம்: புனர்பூசம் ▶சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. SHARE பண்ணுங்க.
பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இணைய இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது நடைபெறும் மாநாட்டில் பாக். பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படாத நிலையில், இந்தியா எதிர்ப்பு காரணமாக பிரிக்ஸ் அமைப்பில் அந்நாடு இணைவதில் சிக்கல் நிலவுகிறது. துருக்கி மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில், அவை அனைத்தும் பரிசீலனையில் உள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக தனியார் மருத்துவமனை செயல்பட 10 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்துள்ளது. இதனை வீடியோவாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மருத்துவமனைக்கு 10 நாள் தடையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
C.M.ஆக வேண்டும் என்றால் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வேண்டும் என்று PT கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். C.M.ஆக அனைவருக்கும் ஆசை இருக்கும். அதில் எந்த தவறுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து அதற்கான முயற்சியில் திருமாவளவன் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்கள்.
பூமியில் உள்ள ஒரே அழியாத உயிரினம் ஜெல்லி மீன்கள் தான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் உடலில் ஏதேனும் காயம் அல்லது நோய்வாய்ப்பட்டால், அவை உடனடியாக ‘பாலிப்’ நிலைக்குச் செல்கின்றன. அதாவது முதுமைக்கு எதிரான நிலை. இதன்மூலம், மீனைச் சுற்றி குழகுழப்பான சவ்வு போன்று உருவாகிறது. அது 3 நாள்கள் வரை மீனின் மீது இருக்கின்றன. இதனால், அது தனது வயதை குறைத்துக் கொள்கிறது.
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவருடைய மொத்த சொத்து மதிப்பு ₹12 கோடி என குறிப்பிட்டுள்ளார். 2023-24ஆம் ஆண்டின் வருமானம் ₹46.39 லட்சம் எனவும், அசையும் சொத்து ₹4.24 கோடி, அசையா சொத்து ₹7.74 கோடி, 4,400 கிராம் தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ₹15 லட்சம் கடன் இருப்பதையும், தன் மீது 2 FIR பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.
ரயில்வேயில் இலவச வைஃபை, ஏசி கோச்களில் பெட்ஷீட், தலையணைகள் வழங்கப்படுவது அனைவருக்கும் தெரியும். அதேபோல் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு லாக்கர் வசதி வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் வசதியும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும், ரயில் தாமதமானால், கட்டணம் செலுத்தாமல் காத்திருப்பு அறையில் தங்கலாம். துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் ரயில் தாமதமானால் இலவச உணவும் வழங்கப்படுகிறது.
கொல்கத்தாவில் நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள “டானா” புயல் நாளை காலை தீவிர புயலாக வலுவடைந்து நாளை இரவு முதல் நாளை மறுநாள் காலை வரை ஓடிசா- மேற்குவங்கம் இடையே கரையை கடக்கவுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவு 1 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. *இடி மின்னலுடன் மழை: தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை. *லேசான மழை: கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, குமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்.
Sorry, no posts matched your criteria.