India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முறையாக சம்பளம் கொடுக்காததால் நடிகர் ஸ்ரீ, மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடல் மெலிந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஸ்ரீயின் உடல்நலம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும், அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாள்களாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஷயம் தெரியாமல் தன்னை திட்டுபவர்களை கெட்டவார்த்தையிலும் திட்டியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் 15-ம் தேதி வங்கிக் கணக்கில் ரூ.1,000 டெபாசிட் செய்து வருகிறது. இந்த மாதத்திற்கான ரூ.1,000 நாளை (ஏப்.15) பெண்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படவுள்ளது. இதற்கான SMS செல்போன் எண்ணுக்கு வந்ததும் பெண்கள், தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 எடுத்து கொள்ளலாம். இந்தத் தகவலை பகிருங்கள்.
MI-க்கு எதிரான நேற்றைய போட்டியில், ஓவர் வீச தாமதப்படுத்தியதால் DC கேப்டன் அக்ஷர் படேலுக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. MI அதிரடியாக விளையாடியதால், ஃபீல்டிங் செட் செய்ய அவர் அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீச முடியவில்லை. இது அவருக்கு முதல்முறை என்பதால் ₹12 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதே தவறு மீண்டும் நடந்தால் ₹24 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
<<16092028>>மெஹூல்<<>> சோக்சியின் கைதை சுட்டிக்காட்டி, PM மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருவதாக மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் கொள்ளையடித்தவர்கள் அதை திருப்பி தர வேண்டும் என PM முன்பு சொன்னதாகவும், அதை நிறைவேற்றும் வகையில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற சோக்சி கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். பெல்ஜியத்தில் வைத்து சோக்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய, USA நிறுவனங்களில் வேலை பார்த்த அனுபவத்தை சாஃப்ட்வேர் இஞ்சினியர் ஒருவர் Reddit-ல் போஸ்ட் போட, அது பேசுபொருளாகியுள்ளது. USA நிறுவனர்கள் ஊழியர்களை நம்பி, திறன், தரத்திற்கு மதிப்பளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், இந்திய நிறுவனர்களிடம் இந்த மனப்பான்மை இல்லை எனவும், ஊழியர்களை அலட்சியப்படுத்துவதாகவும் விமர்சித்துள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி இன்று காலையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக தலைவர் விஜய், தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எக்ஸ் தளத்தில், ‘அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்’ என அவர் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து, தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா (75) உடல்நலக்குறைவால் காலமானார். 1973-ல் கட்சியில் சேர்ந்த இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர். தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார். சின்னையா உடலுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சின்னையாவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RIP
புனித நகரமாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தின் காசியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்தால் அவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. ஆனால், அங்கு எல்லோரையும் தகனம் செய்ய அனுமதி கிடையாது. சாதுக்கள், 12 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாம்புக் கடியால் இறந்தவர்கள், தோல் நோய் இருந்தவர்களின் உடல்களை காசியில் தகனம் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லையாம்.
தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என CM ஸ்டாலினுக்கு அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் வலியுறுத்தியுள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அவர், தமிழ்நாட்டில்தான் ஆணவக் கொலைகள் குறைவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். சமூக நீதி இருக்கும் வரை நம்மை யாராலும் பிரித்தாள முடியாது என்றும் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்தார்.
சாதிய இழிவைத் துடைத்தெறிய போராடாமல் இருப்பதைவிட செத்தொழிவதே மேலானது என போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் புகழ் போற்றுவோம் என சீமான் பதிவிட்டுள்ளார். அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி தனது X பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.