India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“டானா” புயல் நிலவரம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியுடன் PM மோடி நேற்று பேசினார். அப்போது அவரிடம், “டானா” புயலை எதிர்கொள்ள ஒடிசாவில் எடுக்கப்பட்டுள்ள தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து மோடி கேட்டறிந்தார். ஒடிசாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரும் என்று உறுதியளித்த மோடி, புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் பாராட்டினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையத்தால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, திருச்சியில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. SHARE IT.
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த செல்வ பெருந்தகை, திமுக கூட்டணி நல்ல வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து பேச பாஜகவினருக்கு தகுதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
* விளக்க உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.
SHARE IT.
பிரிக்ஸ் நாடுகள் தங்களிடையேயான வர்த்தகத்திற்கு பொது கரன்சியை உருவாக்க பரிசீலித்து வருகின்றன. அக்கரன்சியில், ஏசு, ஆர்தோடாக்ஸ் தேவாலயம், டிராகன், தாஜ்மஹால் ஆகியவை இடம்பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் தாஜ்மஹால் இடம்பெறுவதை விமர்சித்துள்ள இந்து அமைப்புகள், அசோக சக்ரா, சூரியனார் கோவில், லட்சுமியை இடம்பெற ஏன் முயற்சிக்கவில்லை என மோடிக்கு கேள்வியெழுப்பியுள்ளன.
ONGCல் அப்ரண்டிஸ் நிலையிலான 2,236 பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.25) கடைசி நாளாகும். அக்கவுண்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் உள்ளிட்ட பதவிகள் காலியாக இருப்பதாகவும், 10, 12, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள 18-24 வயதுடையோர் www.ongcapprentices.ong.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இன்று (அக்.25) காலை 4 மணி வரை 19 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், குமரியில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தகவலை பகிருங்கள்.
இன்று (அக். 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
“டானா” தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவான அந்த புயல் நேற்றிரவு தீவிர புயலாக வலுப்பெற்றது. இதையடுத்து, வடக்கு, வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வந்தது. இந்நிலையில் அந்த புயல் ஒடிசாவின் புரி, மேற்குவங்கத்தின் சாகர் தீவுக்கு இடைப்பட்ட பகுதியில் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அது, இன்று காலை வரை கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 1,500 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. வயதுவரம்பு: 20 முதல் 30 வரை. எஸ்.சி., எஸ்டி. பிரிவினருக்கு 5, ஓபிசி பிரிவினருக்கு 3, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு. விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. இன்று (அக்., 24) முதல் நவம்பர் 13 வரை. https://www.unionbankofindia.co.in/-இல் விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.