India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி 20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை பரோடா அணி முறியடித்துள்ளது. சிக்கிமுக்கு எதிரான போட்டியில் 349 ரன்கள் குவித்து இந்த சாதனையை பரோடா படைத்துள்ளது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் பனியா 51 பந்துகளில் 134 ரன்கள் குவித்தார். இதில் 15 சிக்சர், 5 பவுண்டரி அடங்கும். 37 சிக்சர்கள் விளாசப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸி. மகளிர் அணிகள் மோதும் முதலாவது ODI போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர்கள் பிரியா புனியா (3) ரன்களுக்கும், மந்தனா (8) ரன்களுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தற்போது வரை இந்திய அணி 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் எடுத்துள்ளது.
சல்மான் கானின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறி நுழைந்தவருக்கு பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர். ஏப்.14ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் சல்மானை கொல்ல திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பின்னர், அடுத்தடுத்து பல வழிகளில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஜெயிலில் இருக்கும் பிரபல ரவுடி பிஷ்னோய் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சென்னை பல்லாவரம் மலைமேடு மாரியம்மன் கோயில் தெரு, குத்தாலம்மன் கோயில் தெரு பகுதிகளில் திடீரென 30 பேருக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் திருவேதி(54), மோகன் உயிரிழந்துள்ளார். குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
8 ஆண்டுகளாகியும் இன்னும் ஜெயலலிதாவின் மரணத்தில் மக்களுக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. ஆறுமுக சாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்த நிலையிலும், இன்னும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு முதலமைச்சருக்கு மரணம் எப்படி நேர்ந்தது என்பதற்கு விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கும் அளவுக்கு மர்மங்கள் நீடிக்கின்றன. ஆனால், இன்றுவரை யாரும் விடை கிடைக்கவில்லை. இனியாவது பதில் கிடைக்குமா?
ஒரு பாத்திரத்தில் நீரூற்றி, அதன் மேலே மற்றொரு பாத்திரத்தை வைத்து கடுகு எண்ணெய்யை (200ml) ஊற்றி, கொதிக்க வைக்கவும். அதில் 10g வேம்பாளம் பட்டையை போடுங்கள். எண்ணெய் நிறம் மாறியதும் கலவையை நன்கு குளிர விடவும். பின், அதை கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும். இதை 3 நாள்கள் வெயிலில் வைத்த பிறகு பயன்படுத்துங்கள். முடி உதிரும் பிரச்னையை சரிசெய்ய இந்த மூலிகை எண்ணெய் உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர்.
திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அமரன் OTTயில் வெளியானது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் படம் வெளிவந்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ₹300 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசாக ரூ.1000-ஐ பொதுமக்கள் வங்கிக் கணக்கில் அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கினால் தான், பொங்கல் பரிசு கிடைக்கும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், அது உண்மையில்லை, பொங்கல் பரிசு வழங்குவதற்கும், கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள், பொருள்கள் காணாமல் போவதை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் விநோதமாக திண்டுக்கல் வேடசந்தூர் அருகே மயானத்தில் புதைக்கப்பட்ட 6 சடலங்கள் காணாமல் போயுள்ளன. இளைஞர் ஒருவரின் சடலத்தை புதைக்க சென்றபோது, இது தெரிய வரவே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயானத்தில் திருட்டுத் தனமாக மண் அள்ளிய கும்பல், தெரியாமல் சடலங்களையும் எடுத்து சென்றது தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தக நிலவரப்படி ஒரு காயின் $100,000க்கு விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் ஒரு பிட்காயின் 85 லட்சமாக உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு பிட்காயின் மதிப்பு 40% உயர்ந்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிட்காயின் மதிப்பு $1000ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.