news

News October 27, 2024

மச்சி.. ஓபன் தி பாட்டில்..!

image

தவெக மாநாட்டில் நடைபெறும் சம்பவங்கள் பார்ப்பவர்களை ஷாக் அடையச் செய்கிறதோ இல்லையோ, விஜய்யை அதிர செய்திருக்கும். நாற்காலிகளை உடைப்பதும், வாட்டர் கேன்களை வீசுவதுமாக கட்சியினர் விளையாடி வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டிலேயே அமர்ந்து இளைஞர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ வைரலாகியுள்ளது. மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வர வேண்டாம் என விஜய் கூறிய நிலையில், மாநாட்டிலேயே மது அருந்துகிறார்கள் தொண்டர்கள்.

News October 27, 2024

தவெக மாநாட்டு திடலில் சிக்னல் கட்!

image

தவெக மாநாடு நடைபெறும் திடலில் செல்போன் சிக்னல் பாதிக்கப்பட்டுள்ளதால், குடும்பத்தினருக்கு தகவல் அளிக்க முடியாமல் அக்கட்சி தொண்டர்கள் அவதி அடைந்துள்ளனர். ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளதால், சிக்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதி அப்பகுதியில் தற்காலிக டவர்கள் அமைக்கப்பட்டது. இருப்பினும், கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்துள்ளதால், அப்பகுதியில் தொலைத்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

நவ.26 இல் பார்லி., கூட்டுக்குழு கூட்டம்

image

அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நவ.26இல் சிறப்பு கூட்டுக்குழு கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் பார்லி. மைய மண்டபத்தில் லோக்சபா, ராஜ்யசபாவின் சிறப்பு கூட்டுக்குழு நடக்கவிருக்கிறது. அரசியல் சாசனம் ஏற்றுக்கொண்டதன் நினைவாக கொண்டாடப்பட்டு வந்த தேசிய சட்ட தினத்தை, 2015இல் அரசியலமைப்பு தினமாக பாஜக அரசு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

News October 27, 2024

தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ்

image

தவெக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு ‘பங்கேற்பு சான்றிதழ்’ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறும் தவெக மாநாட்டில் பங்கேற்க ஏராளமான தொண்டர்கள் திடலில் குவிந்துள்ளனர். அவர்களின் வருகையைப் பதிவு செய்யும் வகையில் QR Code வைக்கப்பட்டுள்ளது. இதை ஸ்கேன் செய்தால் சான்றிதழ் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 27, 2024

நிறுவனங்கள் வரி செலுத்த அளித்த காலக்கெடு நீட்டிப்பு

image

கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நேரடி வரிகள் வாரியம் நவ.15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய, அக்.31ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 27, 2024

பொது அறிவு வினா – விடை

image

1)உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு எது? 2)MKS என்பதன் விரிவாக்கம் என்ன? 3) உலகிலேயே அதிக தித்திப்பான பொருள் எது? 4) ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் எது? 5) ஆன்ட்ரோபோபியா என்றால் என்ன? 6)எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது? 7) ஹாக்கியின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
8)கண்கள் இருந்தும் பார்வையில்லாத உயிரினம் எது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 27, 2024

Motor News: 92,000 கார்களை திரும்பப் பெறும் ஹோண்டா

image

இன்ஜினுக்கு பெட்ரோலை அனுப்பும் பியூயல் பம்ப் கோளாறின் காரணமாக 92,672 கார்களை திரும்பப் பெறப்போவதாக ஹோண்டா கார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அமேஸ், ப்ரியோ, BR-V, சிட்டி, ஜாஸ், WR-V கார்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. 2017 ஆகஸ்ட் முதல் 2018 ஜூன் வரை தயாரிக்கப்பட்ட கார்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. இலவச மாற்றீடுகளை வழங்கும் நடைமுறைகள் நவ. 5, 2024 முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

தவெக மாநாட்டிலா இப்படி நடக்கணும்.. சோதனை

image

தவெக மாநாட்டையொட்டி விக்கிரவாண்டியே குலுங்கி வருகிறது. இந்நிலையில், தீபாவளிக்காக சென்னையைச் சேர்ந்த தம்பதியர் சொந்த ஊருக்கு காரில் சென்றுள்ளனர். அப்போது விக்கிரவாண்டி தவெக மாநாடு நுழைவாயில் முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றனர். திரும்பி வந்து பாரத்த போது, கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 லேப்டாப் மற்றும் ஹேண்ட்பேக்கை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

News October 27, 2024

இலங்கை கடற்படை அராஜகம்!

image

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் தமிழக மீனவர்கள் 12 பேர் ஒரு விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைதான 12 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி தமிழக அரசும், மத்திய அரசும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இலங்கை தனது போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை.

News October 27, 2024

Recipe: சாமை கல்கண்டு பாத் செய்வது எப்படி?

image

சாமை அரிசி, பயத்தம் பருப்பு ஆகியவற்றை நீரில் கழுவவும். பின் அதை வாணலியில் ஒன்றாக கொட்டி பொன்னிறமாக மாறும் வரை வறுத்து, சலித்து எடுக்கவும். பின் குக்கரில் போட்டு பாலூற்றி 5 விசில் வரை வேக விடவும். இந்த கலவையில் நெய் & பனங்கற்கண்டு பொடியை சேர்த்து கிளறவும். நன்கு கொதித்து, நீர் வற்றியதும் நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கினால் சுவையான சாமை கல்கண்டு பாத் ரெடி.

error: Content is protected !!