India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
12ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவில் படித்தாலும், கல்லூரியில் விரும்பிய பிரிவில் படிக்கலாம் என்ற UGCயின் திட்டம் என்பது நுழைவுத் தேர்வை திணிக்கும் முயற்சி என ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். நுழைவுத்தேர்வுகள் சமூகநீதிக்கு எதிரானவை என்பதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இதனால் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய், பயிற்சி மையங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
தென்னிந்திய நடிகை பிரக்யநக்ராவின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. X தளத்திலும் #pragyanagra என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது. ஹரியானாவை சேர்ந்த இவர், தமிழில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில், நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியான நிலையில், இப்போது பிரக்யநக்ராவின் வீடியோ லீக் ஆகியுள்ளது.
சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றுள்ளார். தொண்டர்கள் புடைசூழ விழாவிற்கு வந்த அவர், அங்கு இருந்த அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அம்பேத்கர் சிலை அருகே அமர்ந்து செல்பி எடுத்துக் கொண்டார். அரசியல் கட்சி தொடங்கிய பின் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சியில், அவர் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்கள், Spotify-யில் தமிழில் இந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களாக உருவெடுத்துள்ளன. ஏ.ஆர்.ரஹ்மானும், அனிருத்தும் ஆளும் Spotify தளத்தை, இந்த ஆண்டு ஜி.வி. கைப்பற்றியுள்ளார். கேப்டன் மில்லர், தங்கலான், அமரன், லக்கி பாஸ்கர் என 2024ல் அவர் இசையமைத்த அனைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அதிலும், ‘மின்னலே’, ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல்கள் பிரம்மாண்ட ஹிட் அடித்துள்ளன.
2ஆவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸி., அணி 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்களை எடுத்துள்ளது. லபுஷேன் 20 ரன்களுடனும், மெக்ஸ்வீனி 38 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன நிலையில், ஆஸி., அணி 94 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த நிலையில், ஆஸி., வீரர்கள் நிலைத்து விளையாடுகின்றனர்.
புயல், கனமழையால் சென்னை, விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், இன்னும் பாடங்களை ஆசிரியர்கள் முடிக்கவில்லை. இதன்காரணமாக, விடுமுறையை ஈடுகட்ட சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனால், புதுச்சேரி அரசு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என கூறியுள்ளது.
கடந்த 2 BGT தொடர்களிலும் ரிஷப் பண்ட் தன்னை வேட்டையாடியதாக ஆஸி. EX வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். 2019, 2021 தொடர்களில் பண்ட் மிகச்சிறப்பாக விளையாடியதாகவும், அப்போது ஆஸி. அணியின் பயிற்சியாளராக இருந்த தன்னை அவர் மிகவும் சோதித்ததாகவும் கிண்டலாகத் தெரிவித்தார். ஆனால், தற்போது LSG அவரை ஏலத்தில் எடுத்திருப்பதால், அணியின் பயிற்சியாளர் என்ற வகையில் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செக்ஸுக்காக மட்டுமே திருமணம் என்ற சமூக எண்ணத்தை மாற்ற வேண்டும் என, மலையாள நடிகை திவ்யா ஸ்ரீதர்-கிறிஸ் வேணுகோபால் ஜோடி கூறியுள்ளனர். இந்த சமூகத்தால் எங்கள் மறுமணத்தையும், வயதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரவர் விரும்பும் வயதுகளில் திருமணம், மறுமணம் செய்வது கொள்வதில் என்ன தவறு என கேள்வி எழுப்பிய அவர்கள், மக்கள் மனம் இந்தளவுக்கு கீழ்த்தரமாகி விட்டதா என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹிந்தி தெரிந்தால் தான் டெல்லியில் பிழைக்க முடியும் என்ற வெங்கையா நாயுடுவின் கருத்து வியப்பளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உலகம் முழுவதும் பரவி இருப்பதாகவும், திறமைக்கு மொழி எப்போதும் தடையாக இருந்தது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாய் மொழியின் முக்கியத்துவத்தை பேசும் வெங்கையா நாயுடுவிடம் இருந்து இக்கருத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலை (MSP) உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் டெல்லி சலோ பேரணியை தொடங்கியுள்ளனர். ஹரியானா- பஞ்சாப் எல்லை ஷம்புவில் கூடிய விவசாயிகளை கலைக்க ஹரியானா அரசு முள் தடுப்பு, பேரிகேட், கண்ணீர் புகை வாயு என பல யுக்திகளை பயன்படுத்துகிறது. அரசு விவசாயிகளுடன் பேச தயாராக இருப்பதாகவும் அவர்களிடம் போகவும் தயார் என்கிறார் விவசாயி நல்வாழ்வுத் துறை அமைச்சர் பகீரத் சவுத்ரி.
Sorry, no posts matched your criteria.