India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், பாஜகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், விஜய்க்கு பாஜகவை பார்த்து பயமா என கேள்வி எழுப்பினார். அத்துடன் 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப விரும்பும் கட்சிகள் பாஜக கூட்டணியில் சேரலாம் எனவும் அழைப்பு விடுத்தார்.
தமிழ் புத்தாண்டு இன்று கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து போதிய அளவு இல்லாததால், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை ரூ.500ஆகவும், ஐஸ் மல்லி, ஜாதி மல்லி, முல்லைப்பூ தலா ரூ.400ஆகவும், கனகாம்பரம் ரூ.800ஆகவும் உயர்ந்துள்ளது. சாமந்தி ரூ.240ஆகவும், சம்பங்கி ரூ.200ஆகவும், அரளிப்பூ ரூ.500ஆகவும் விலை அதிகரித்துள்ளது.
தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று ஒரு சிலர் சொல்கின்றனர். ஆனால், சித்திரையில் புத்தாண்டு கொண்டாட காரணம் இருக்கிறது. பண்டைய காலத்தில், மாதங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் ஆறு பெரும்பொழுதுகள்தான் இருந்தன. அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்பன. அவற்றில், இளவேனில் காலத்தின் முதல் மாதமான சித்திரைதான் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இக்கருத்தை மறுப்போரும் உள்ளனர்.
ஒரே ஆண்டில் 16.08 லட்சம் கார்களை விற்று, நாட்டின் நம்பர் 1 கார் விற்பனை நிறுவனம் என்ற பெயரை மாருதி சுசூகி தக்க வைத்துள்ளது. 2024-ம் நிதியாண்டில் அதிக கார்களை விற்று, கார் சந்தையில் 40.6 சதவிகிதத்தை அந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதற்கடுத்து ஹூயின்டாய் நிறுவனம் 5,59,149 கார்களை விற்று (13.46%) நாட்டில் 2ஆவதாக அதிக கார்களை விற்ற நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. நீங்க என்ன கார் வச்சிருக்கீங்க?
கன்னட காமெடி நடிகர் பேங்க் ஜனார்த்தன் (76) காலமானார். 800 படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். வயது மூப்புத் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காலமானார். நடிப்புத் தொழிலின் இடையே சில காலம் அவர் வங்கியில் வேலை பார்த்தார். இதனால் பேங்க் ஜனார்த்தன் என்று அவருக்கு பெயர் வந்தது.
அம்பேத்கர் எழுதிய Annihilation of Caste, Riddles in Hinduism ஆகிய ஆங்கில புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களை CM ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில், அம்பேத்கர் பேரன் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ₹227.85 கோடி மதிப்பில் பள்ளி, கல்லூரி விடுதி கட்டடங்களை திறந்துவைத்து, ₹104.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் CM வழங்கினார்.
5 தொடர் தோல்விகளுக்கு பிறகு இன்று LSG அணியை சந்திக்கும் CSK கட்டாய வெற்றியை பெற வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. அதனால், பிளேயிங் XI-ல் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதிக்கு பதிலாக வன்ஷ் பேடி களமிறங்க வாய்ப்புள்ளதாம். அதேநேரத்தில், தொடர்ந்து சொதப்பி வரும் அஸ்வினுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. CSK வெற்றிக்கு தேவை என நீங்கள் நினைப்பது என்ன?
தமிழ் புத்தாண்டு விடுமுறையை சொந்த ஊரில் கொண்டாட சென்ற மக்கள் மீண்டும் சென்னைக்கு இன்று திரும்பவுள்ளனர். வழக்கமாக நெல்லை-சென்னைக்கு ஆம்னி பஸ்களில் ரூ.1,100 கட்டணம் வாங்கப்படும். ஆனால் தற்போது டிக்கெட் முன்பதிவு செயலியில் ரூ.2,430, ரூ.2,570 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாகர்கோயில்-சென்னை, மதுரை-சென்னை கட்டணமும் 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சொந்த நலனுக்காக வக்ஃப் விதிகளை காங். மாற்றியதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். வக்ஃப் சட்டத்தை காங். எதிர்க்கும் நிலையில், புதிய திருத்தங்கள் மூலம் வக்ஃப் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரசிற்கு இதுவரை ஏன் ஒரு இஸ்லாமிய தலைமை இல்லை என்றும், தேர்தல் தொகுதி பங்கீட்டில் 50% இஸ்லாமியர்களுக்கு ஏன் ஒதுக்கவில்லை என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.
தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் பட்டியலில் அட்லி முதலிடத்தில் உள்ளார். அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அவருக்கு ₹110 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ், ஒரு படத்தை இயக்க ₹60- 70 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ₹55- 60 கோடிகளுடன் ஷங்கர் 3ஆவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநராக ராஜமௌலி (₹200 கோடி) உள்ளார்.
Sorry, no posts matched your criteria.