India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘கைதி 2’ படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். ‘கங்குவா’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு தனி திரைப்படம் தயாராகவுள்ளதாகக் கூறினார். அனைத்தும் டிஸ்கஷன் ஸ்டேஜிலேயே இருப்பதாகவும், கதை முடிவானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்தார். முன்னதாக அவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 குறைந்து ஒரு சவரன் ₹58,520க்கும், கிராமுக்கு ₹45 குறைந்து ஒரு கிராம் ₹7,315க்கும் விற்கப்படுகிறது. அதேநேரம், சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹107க்கும், ஒரு கிலோ ₹1,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மண்டல மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்பாக குறைந்தது 25 லட்சம் டின் அரவணை மற்றும் அப்பம் பாக்கெட்டுகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மகர விளக்கு சீசனையொட்டி நவ. 15ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் நிலக்கல், எருமேலியில் கூடுதலாக 4,500 வாகனங்களை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 700 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அடுத்த 3 நாள்களுக்கு 14,086 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது.
ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களைக் குறைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. உரிமக் கட்டணத்தை 8% குறைக்க வேண்டுமென, மத்திய அரசுக்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்த கோரிக்கையை அரசு ஏற்கும்பட்சத்தில், ரீசார்ஜ் கட்டணங்கள் குறைய வாய்ப்புள்ளது. கடந்த ஜூலை மாதம் ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக்கு வருபவர்களுக்கு ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியுள்ளார். இது கூட்டணி ஆட்சி என முழக்கும் விசிகவுக்கான க்ரீன் சிக்னலாகப் பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை இழந்து அடுத்த தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் கட்சிகளுக்கான கொக்கியாகவும் கருதலாம். இதில் சிறு கட்சிகள் அவருடன் இணைந்து பயணிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், இதய ரத்த நாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. செரிமானப் பாதையில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. புரோபயாடிக்ஸ் இருப்பதால் செரிமானத்துக்கு உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைத்து, ரத்தத்தை சுத்திகரிக்கிறது என்கின்றனர்.
மாநாடு வெற்றி போல் அரசியல் களத்திலும் விஜய் வெற்றியடைய ADMK கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், VCK MP ரவிக்குமார், ஆதவ் அர்ஜுனா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் விஜய்யை வரவேற்றுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் அறிவிப்பே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தவெக மாநாட்டில் பங்கேற்க தன்னெழுச்சியாக ஏராளமான கூட்டம் விக்கிரவாண்டியில் குவிந்தது. ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல் கூடிய இந்த கூட்டம் ஒட்டுமொத்தமாக விஜய்க்காக கூடிய கூட்டம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அதே நேரம், அவர்களுக்காக உணவும், குடிநீரும் கூட முறையாக வழங்க முடியாமல் தவெக நிர்வாகிகள் சொதப்பியுள்ளனர். ஆனால், எவ்வித சொதப்பலும் இல்லாமல் திட்டமிட்டபடி தனது உரையை சிறப்பாக வழங்கினார் விஜய்.
தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் இதுவரை இல்லாத வகையில் மேடையில் அனல் பறக்க பேசியிருந்தார். அதில், சினிமா மூலம் தனக்கு வாழ்க்கை கொடுத்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்தால் நல்லா இருக்குமா என்று யோசித்து முடிவு எடுத்துதான் அரசியலுக்கு வந்ததாக கூறியிருந்தார். இது, அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த ரஜினியை அவர் மறைமுகமாக சாடும் வகையில் இருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.