news

News October 30, 2024

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் செய்கிறீர்களா? இதைப் படிங்க!

image

வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளால் உருவாக்கப்படும் சட்டவிரோத மின்னணு பண பரிமாற்ற தளங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு எச்சரித்துள்ளது. தனிநபர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை ரகசியமாக சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு சில செயலி நிறுவனங்கள் வழங்குவது தெரியவந்துள்ளது. அதன்படி, PeacePay, RTX Pay, PoccoPay, RPPay உள்ளிட்டவை சட்டவிரோத பணப்பரிமாற்ற தளங்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

விளையாட்டு துளிகள்

image

➤இத்தாலியில் நடக்கவுள்ள ATP டென்னிஸ் பைனல்ஸ் தொடரில் பங்கேற்க ரோஹன் போபண்ணா – மாத்யூ எப்டன் ஜோடி தகுதி பெற்றது. ➤ICC வெளியிட்ட ODI சிறந்த பவுலர்கள் தரவரிசையில் தீப்தி ஷர்மா, 2ஆம் இடத்தைப் பிடித்தார். ➤புரோ கபடி லீக்: 24ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி அணியை பெங்களூரு புல்ஸ் வீழ்த்தி, முதல் வெற்றி கண்டது. ➤ பூரன், மயங்க் யாதவ் & ரவி பிஷ்னோய் ஆகியோரை LSG அணி தக்கவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

News October 30, 2024

கிரக தோஷங்களும் அதற்குரிய பரிகார குளியலும் (1/2)

image

ஜென்ம கிரகத்தின் நீஷ பார்வையால் ஏற்படும் தோஷத்தைப் போக்க பரிகார குளியல் மேற்கொண்டு கிரகாதிபதியை வணங்க வேண்டுமென ஜாதக புராணம் கூறுகிறது. நவகிரகங்களுக்குரிய பரிகார குளியல் பற்றி இங்கே பார்க்கலாம். ➤சூரியன்: ஞாயிறன்று நீரில் சிவப்பு நிற பூக்கள் கலந்து குளிக்கலாம். ➤சந்திரன்: திங்களன்று தயிரை உடல் முழுவதும் தடவிக் கொண்டு, பின் குளிக்கலாம். ➤செவ்வாய்: செவ்வாயன்று வில்வ இலை கலந்த நீரில் குளிக்கலாம்.

News October 30, 2024

கிரக தோஷங்களும் அதற்குரிய பரிகார குளியலும் (2/2)

image

➤புதன்: புதன் கிழமையில் கடல் நீரை எடுத்து வந்து, அதில் மஞ்சள் கலந்து குளிக்க வேண்டும். ➤குரு: வியாழன் அன்று கருப்பு ஏலக்காய் கலந்த நீரில் குளிக்கலாம். ➤சுக்கிரன்: வெள்ளியன்று பச்சை ஏலக்காயை நீரில் கலந்து குளிக்க வேண்டும். ➤சனி: சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தேய்த்து, கருப்பு எள் கலந்த நீரில் குளிக்கலாம். ➤ராகு-கேது: அருகம்புல்லை நீரில் போட்டு கொதிக்க வைத்து, சனியன்று அந்த நீரில் குளிக்கலாம்.

News October 30, 2024

தீபாவளி கொண்டாட உகந்த நேரம் (1/2)

image

வேத நாட்காட்டியின்படி, அமாவாசை திதியில் தீபாவளியன்று லட்சுமி பூஜையும், பிரதோஷ காலத்தின் போது மாலையிலும் இரவிலும் லட்சுமி பூஜை செய்வது வழக்கம். இந்தாண்டு அக். 31 மற்றும் நவ.1 ஆகிய 2 நாள்கள் அமாவாசை திதி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வேத நாட்காட்டியின்படி, அமாவாசை தேதி அக். 31 மதியம் தொடங்கி, நவ.1 மாலை முடிவடைகிறது. அமாவாசை திதி, அக்.31 மதியம் 2:40 மணிக்கு துவங்கி, நவ.1 மாலை 4:42 வரை நடக்கிறது.

News October 30, 2024

தீபாவளி கொண்டாட உகந்த நேரம் (2/2)

image

<<14486810>>தீபாவளி<<>> பண்டிகையை அக்.31 அமாவாசை திதி, பிரதோஷ கால மற்றும் நிஷித கால முகூர்த்தத்தில் கொண்டாடுவது மிகவும் மங்களகரமானது. அமாவாசை திதி நவம்பர் 1ம் தேதி மாலையுடன் நிறைவடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நவம்பர் 1இல் தீபாவளியைக் கொண்டாடுவது அசுபமாகவும் மங்களகரமற்றதாகவும் கருதப்படுகிறது. இந்தத் தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 30, 2024

ரேஷன் வாங்காதவர்களுக்கு அடுத்த மாதம் கிடைக்குமா?

image

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பலரும் புத்தாடை வாங்குவது, சொந்த ஊர் செல்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தியதால், ரேஷன் கடைகளில் இம்மாதம் பொருள்கள் பலரும் வாங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இம்மாத பொருள்கள் வாங்காதவர்கள், அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ள அனுமதிக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீங்கள் இம்மாத ரேஷன் பொருள்களை வாங்கிவிட்டீர்களா?

News October 30, 2024

நீண்ட ஆயுளை அருளும் வாஞ்சிநாதர்

image

காசி, காஞ்சி, போன்ற 66 கோடி தலங்களைவிட மிக உயர்ந்த திருத்தலமென ஸ்ரீவாஞ்சியம் திருக்கோயிலை ஆன்றோர் போற்றுகின்றனர். எமனின் தோஷத்தைப் போக்கி வாஞ்சையோடு ஈசன், அவரை க்ஷேத்திர பாலகனாக நியமித்த தலம் என்பதால் இது ‘ஸ்ரீவாஞ்சியம்’ என அழைக்கப்படுவதாக ஸ்தல புராணம் கூறுகிறது. 4 யுகங்களிலும் நிலைத்திருக்கும் வாஞ்சிநாதர் – மங்கள நாயகியை வணங்கினால் நீண்ட ஆயுளும், நிறைவான ஆரோக்கியமும் அடைவர் என்பது ஐதீகம்.

News October 30, 2024

தீபாவளியும், 5 காரணங்களும்

image

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு 5 வகை காரணங்கள் கூறப்படுகின்றன.
1) நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நாள்.
2) சீதையை மீட்டு, அயோத்திக்கு ராமர் திரும்பிய நாள்.
3) பாண்டவர்கள் வனவாசம் முடிந்து, நாடு திரும்பிய நாள்.
4) சிவனை நினைத்து பார்வதி, கேதாரி விரதம் இருந்து முடித்த நாள்.
5) மகாவீரர் முக்தி அடைந்த நாள்.

News October 30, 2024

தீபாவளிக்கு எண்ணெய் நீராடுவது ஏன் தெரியுமா?

image

தீபாவளியன்று காலையில் அனைவரும் எண்ணெய் நீராடுவது ஒரு சடங்காகும். இது உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல, உடல் மற்றும் ஆன்மாவுக்கு ஆன்மிக தூய்மை அளிக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இந்த வழக்கம், சூரியன் உதிக்கும் முன், அதிகாலையில் எழுந்து, தூய்மை மற்றும் பக்தியுடன் பண்டிகையை வரவேற்பதைக் குறிக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர். நீங்கள் தீபாவளியன்று எண்ணெய் நீராடுவீர்களா? கீழே பதிவிடுங்கள்.

error: Content is protected !!