India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க 19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை காலை 6 – 7 மணி, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களில் வெடிக்கக்கூடாது. பட்டாசுகளை கொளுத்தி தூக்கி எறிந்து விளையாடக்கூடாது. குடிசைகளின் பக்கத்திலோ, ஓலைக் கூரைகள் உள்ள இடங்களிலோ பட்டாசு வெடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*CSK – ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பத்திரனா, தோனி.
*SRH – கிளாசென், கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, நிதிஷ் ராணா, ஹெட்.
*LSG – நிக்கோலஸ் பூரன், பிஷ்னோய், மயங்க் அகர்வால், பதோனி, மொஹ்சின் கான்.
*KKR – நரைன், ரிங்கு, வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித்.
*MI – ரோஹித், ஹர்திக், சூர்யகுமார், பும்ரா, திலக் & நமன் தீர்
பிரிட்டன் அரசர் சார்லஸ் III, அரசி கமிலா இருவரும் இந்தியாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவுக்கு அக்.27ஆம் தேதி வந்த அரச தம்பதி, அங்குள்ள சவுக்யா மையத்தில் யோகா, தியானம் உள்பட வெல்னஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த காலத்திலும் இந்த மையத்துக்கு அரசர் சார்லஸ் வந்து சென்றுள்ளார். அரசுமுறைப் பயணம் இல்லை என்பதால் இப்பயணம் பற்றிய அறிவிப்பு முன்பே வெளியாகவில்லை.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 8-வது சீசனில், இதுவரை 3 பேர் – ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரிகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கெடுத்த நடிகர் சந்தோஷ், நடிகை பவித்ரா இருவரும் உள்ளே வருவார்கள் என தகவல்கள் உலா வருகின்றன. Let’s wait and watch.
இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து நடிகர்கள் தனுஷ், கார்த்தி ஆகியோரின் படங்களை இயக்க உள்ளார். இந்நிலையில் கார்த்தி, மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் கதை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இது மாரி செல்வராஜின் அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளியையொட்டி, மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னையிலிருந்து மக்கள் அவரவர் ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளதால், பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனையடுத்து, சென்னை சென்ட்ரல் – போத்தனூருக்கு இன்றிரவு 10.10க்கும், சென்னை எழும்பூர் – திருச்சிக்கு 9.10க்கும் முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறன.
2026 சட்டமன்றத் தேர்தலின் போது நல்ல முடிவு எடுக்கவுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுகவால் வெற்றிபெற முடியும் என மக்கள் நினைப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அதிமுகவில் தங்களை சேர்க்கவில்லை என்றால், ஒரு புதிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். அதிமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
YouTube சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து வீடியோக்களுக்கு லைக் போட்டால், கை நிறைய சம்பாதிக்கலாம் என கூறி மங்களூருவில் ஒருவரிடம் ₹56 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வீடியோக்களுக்கு லைக் போட்டதில் முதலில் ₹123, ₹492 என சிறிய அளவிலான தொகை கிடைத்துள்ளது. அதிக வருமானம் ஈட்ட, முதலீடு செய்ய வேண்டும் என WhatsApp மூலம் மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். அதை நம்பி முதலீடு செய்தவருக்கு நாமம் போட்டுள்ளனர்.
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா குறித்த சுவாரசிய செய்தியை குரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பகிர்ந்து கொண்டார். லண்டன் சென்ற டாடாவுக்கு, விமான நிலையத்தில் அவரது ஊழியர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. போன் செய்ய அவரிடம் பணமும் இல்லை. அப்போது அமிதாப்பிடம், “உங்களிடம் சிறிது பணம் கடன் வாங்கலாமா?” எனக் கேட்டுள்ளார் டாடா. அவரது பணிவும் பண்பும் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக அமிதாப் கூறினார்.
பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் ஷமி இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆஸி. முன்னாள் வீரர் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். ஷமி இல்லாததால் பும்ரா தனது தோளில் அதிக பாரத்தை சுமக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் செயல்பாடு சிறுபிள்ளைத்தனமாக இருந்ததாகவும் விமர்சித்தார். ஆஸி.க்கு எதிராக இந்தியா தவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.