India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சூரி, ராஜ்கிரண் நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்’ திரைப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ’விலங்கு’ வெப் தொடர் மூலம் பிரபலமான பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார். குடும்ப உறவுகள் மற்றும் அதன் உணர்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.
சீமானின் நாதக-வில் மருத்துவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தவர் இளவஞ்சி. கடந்த சில நாள்களுக்கு முன்பு அவர், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியில் அவர் இன்று அக்கட்சித் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் இணைந்தார். TN சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி நிர்வாகிகள் கட்சி மாறி வருவது குறிப்பிடத்தக்கது.
உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான Pfizer, தாங்கள் ஆய்வு செய்து வந்த உடல் எடைகுறைப்பு மருந்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. Danuglipron என்ற பெயர் கொண்ட அந்த மருந்தினால் பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுவதால், அதன் ஆய்வு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் எடைகுறைப்பு மருந்துகளுக்கான தேவை அதிகம் இருக்கும் என்பதால், முன்னணி நிறுவனங்கள் அந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
வரும் ஏப்.27-ல், ரேவதி நட்சத்திரத்திற்கு புதன் பெயர்ச்சியாவதால் இந்த ராசிக்காரர்கள் நற்பலன்கள் பெறுவர்: *ரிஷபம்- தொழில், வருமானம் மேம்படும். வேலைத் தடைகள் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி வரும். *தனுசு- நீண்டகால பிரச்னை முடிவுக்கு வரும். பணச்சிக்கல் தீர வழி பிறக்கும் *கடகம்- மன அழுத்தம் குறையும், வழக்குகளில் தீர்வு ஏற்படலாம், பணச்சிக்கல் குறையும். மொத்தத்தில் இந்த 3 ராசிகளுக்கு நன்மைகள் அதிகம்.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் ரிசர்வ் வங்கி குறைத்தது. இதையடுத்து பல்வேறு வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் <<16065106>>கடன்கள் <<>>மீதான வட்டியை குறைத்து வருகின்றன. அந்த வரிசையில், SBI வங்கியும் தான் வழங்கும் கடன்களுக்கான வட்டியை ஏப்.15 முதல் 25 புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் லோன் வாங்குபவர்கள் பயனடைவர். அதேநேரம், டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டியையும் 10-25 புள்ளி SBI குறைத்துள்ளது.
பலரும் சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும் என அலாரம் வைக்கிறோம். ஆனால், அலாரம் அடித்தால் அதை ஆஃப் செய்து 10 நிமிடம் தூங்கி எழுந்திருக்கலாம் என மீண்டும் அலாரம் வைத்து தூங்குவோம். இதுபோன்று அலாரம் வைப்பது உடலுக்கு பல தாக்கத்தை ஏற்படுத்துமாம். தூக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் விழுத்துக்கொள்வதால் கண்கள் மற்றும் இதய பாதிப்பு ஏற்பட வாய்புள்ளதாம். அன்றைய நாள் முழுவதும் சோர்வும் ஏற்படுமாம்.
மலேசிய முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமது பதாவி (85) காலமானார். கோலாலம்பூரில் உள்ள ஹாஸ்பிடலில் இதய நோய் தொடர்பான சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானதாக ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2003-2009-ம் ஆண்டு வரை மலேசிய பிரதமராக அவர் பதவி வகித்தார். ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு குடும்பத்தினரை கூட அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அரிய நீல நிற வைரம், மே 14-ம் தேதி ஜெனிவாவில் ஏலத்திற்கு வருகிறது. ‘The Golkonda Blue’ (23.24 கேரட்) என்று அழைக்கப்படும் இந்த வைரத்தை, Christie என்ற நகை வியாபாரிகள் ஏலத்தில் விடுகின்றனர். 1947க்கு முன், இந்தூர் மன்னர்களிடம் இருந்த இந்த வைரம் பின்னாட்களில் தனியாருக்கு விற்கப்பட்டது. நடைபெறவிருக்கும் ஏலத்தில் இது, ₹430 கோடி வரை விலை போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பேத்கர் உயிரோடு இருக்கையில் திரும்பத் திரும்ப அவரை காங்கிரஸ் அவமதிப்பு செய்ததாக மோடி விமர்சித்துள்ளார். தேர்தல்களில் அம்பேத்கரை 2 முறை காங்கிரஸ் தோல்வியடைய செய்ததாகவும், அவர் மரணமடைந்த பிறகு அவரது நினைவுகளை அழிக்க முயன்றதாகவும் சாடியுள்ளார். சமத்துவத்துக்காக அம்பேத்கர் போராடினார், ஆனால் காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலை நாடு முழுவதும் பரப்பியது என்றும் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
LSG அணிக்கு எதிராக விளையாடும் CSK அணியில் கேப்டன் தோனி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்துள்ளார். இன்றைய போட்டியில், கான்வேக்கு பதிலாக ரஷீத்தும் அஷ்வினுக்கு பதிலாக ஓவர்டன்னும் களம் இறங்கவுள்ளனர். அதேபோல, LSG அணியில் ஹிம்மத் சிங்குக்கு பதிலாக மிட்செல் மார்ஷ் களமிறங்கவுள்ளார். இந்த மாற்றங்கள் CSK அணிக்கு கை கொடுக்குமா என்று கமெண்ட்டில் சொல்லுங்க
Sorry, no posts matched your criteria.