India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) விலகுவதாக அக்கட்சி முக்கிய தலைவர் பசுபதி குமார் பராஸ் அறிவித்துள்ளார். இந்த கட்சிக்கு 5 எம்பிக்கள் உள்ள நிலையில், பாஜக கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக அவர் கூறியுள்ளார். தங்கள் கட்சிக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், ஆதலால் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் முக்கிய தலைவரான சிராக் பாஸ்வான் ஏதும் கூறவில்லை.
மத்திய, மாநில அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு RBI சூப்பர் பரிசு கொடுத்துள்ளது. RBI-யின் புதிய விதிகளின்படி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியம் அல்லது நிலுவைத் தொகை சரியான நேரத்தில் கிடைக்கப்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட வங்கி ஆண்டுக்கு 8% வட்டியை அவர்களுக்கு செலுத்த வேண்டும். இந்த விதி அக்டோபர் 1, 2008-க்குப் பிறகு தாமதமான அனைத்து ஓய்வூதிய வழக்குகளுக்கும் பொருந்தும்.
RTE திட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை இலவசமாக பயிலலாம். இதற்காக 25% இடஒதுக்கீடு உள்ளது. தமிழகம் முழுவதும் 8,000-க்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தோர் <
தோனி இறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் எதாவது ஒரு சாதனை அரங்கேற்றப்படுவது வழக்கமாகிவிட்டது. பேட்டிங்கில் தோனி சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் இன்றும் கிங்குதான். LSG-க்கு எதிரான ஆட்டத்தில் ஆயுஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்ததன் மூலம் விக்கெட் கீப்பராக 200 டிஸ்மிஷல்களை செய்த முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். அதாவது IPL-லில் மட்டும் தோனி 154 கேட்ச்களையும், 46 ஸ்டம்பிங்களையும் செய்துள்ளார்.
2014-ம் ஆண்டு முதல் பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 13 முறை உயர்த்தி இருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பு குறைந்தபோதும்கூட 13 முறை கலால் வரியை உயர்த்தியுள்ளது. 3 முறை மட்டுமே குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வந்தபிறகு அனைத்து கலால் வரிகளும் பெட்ரோலிய பொருள்கள் மீதே விதிக்கப்படுகிறது. 2026 பட்ஜெட்டில் கலால் வரி மூலம் ரூ.3.17 லட்சம் கோடி திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காரைக்கால் தாெகுதி அதிமுக EX MLA கே.ஏ.யு. அசனா நேற்று முன்தினம் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், புதுக்கோட்டை நகர அதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முகமது கனியும், இதே காரணத்துக்காக அக்கட்சியிலிருந்து இருந்து விலகியுள்ளார். தனது விலகல் கடிதத்தை புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளர் விஜயபாஸ்கருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
உபி, கான்பூரை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் வீடு திரும்பிய போது, படுக்கையில் தன் மனைவியுடன் பக்கத்து வீட்டுக்காரர் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அந்நபர் தப்பி ஓட முயல, பாய்ந்து பிடித்த கணவன், அந்நபரை தாக்கியதுடன் அவனின் ஆணுறுப்பை கடித்து காயப்படுத்தினார். இதனால் ரத்தம் வழிய தப்பிச் சென்ற அந்நபர், தற்போது ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவன் செய்தது சரியா?
இன்றைய IPL போட்டியில், LSG அணியை வெறும் 166/7 ரன்களில் சுருட்டியிருக்கிறது CSK அணி. டாஸ் வென்ற CSK கேப்டன் தோனி, LSG அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். அதன்படி களமிறங்கிய LSG, ஆரம்பம் முதலே சொதப்பியது. அதிரடி நாயகர்கள் மார்க்ரம், பூரன் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் பண்ட் நிதானமாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். CSK அணியின் பதிரனா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், மாணவர்கள் உணவுக்கு கூட வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றுவதுண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறுவர், சிறுமியர் நீர் நிலைகளில் குளித்து மகிழ செல்வார்கள். அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. ஆபத்தை உணராமல் இருக்கும் சிறார்களுக்கு அதனை எடுத்துக் கூறி, கட்டுப்பாடுகளுடன் விளையாட அனுமதியுங்கள்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை என்பதால் சிறுவர்கள் வெள்ளியங்கால் ஓடையில் குளிக்கச் சென்றபோது, அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல, ஒகேனக்கல் ஆற்றில் சுற்றுலா வந்த 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அடுத்தடுத்து நடைபெற்ற இச்சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்களே, குழந்தைகளை கவனிங்க.
Sorry, no posts matched your criteria.