India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மனைவி கொடுமைப் படுத்துவதாக கூறி <<14842776>>கணவன் தற்கொலை<<>> செய்துகொண்டது விவாதமாகி உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட் நேற்று ஒரு பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவனையும், அவரது குடும்பத்தினரையும் பழிவாங்க சட்டப்பிரிவு 498A தவறாக பயன்படுத்தப்படுவதால், அந்த வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதி நாகரத்னா தீர்ப்பளித்துள்ளார். இதை நீங்கள் வரவேற்கிறீர்களா?
ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில், மாதவன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் எழுத, ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இதன்மூலம், LCU-வில் மாதவன் இணைவார் என கருதப்படுகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். கடைசியாக ‘ஆயுத எழுத்து’ படத்தில் மாதவன் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.
கணவனோ, அவரது உறவினர்களோ யாராக இருந்தாலும், திருமணமான பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ கொடுமைக்கு ஆளாக்குவதை இந்த 498A சட்டப்பிரிவு (BNS 84) கிரிமினல் குற்றமாக வரையறுக்கிறது. இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க இச்சட்டம் வழி செய்கிறது. ஆண்களை பழிவாங்க இச்சட்டப்பிரிவு அதிகம் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
AP-யை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பையா (45) சக வீரர்கள் 30 பேரின் உயிரைக் காப்பாற்றி வீர மரணமடைந்துள்ளார். ஜம்முவின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக கண்ணிவெடியை மிதித்துள்ளார். இதனை அறிந்த அவர், உடனடியாக சக வீரர்களை அங்கிருந்து திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியதால், அவர்கள் உயிர்தப்பினர். எனினும், சுப்பையா கண்ணிவெடி வெடித்ததில் உயிரிழந்தார்.
இந்தாண்டு பிப். மாதம் கோலி-அனுஷ்கா தம்பதிக்கு மகன் பிறந்தார். அவருக்கு Akaay என பெயர் வைத்தனர். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு கூகுளில் அதிக முறை தேடப்பட்ட ’வார்த்தையின் அர்த்தம்’ என்ற பட்டியலில் Akaay 2வது இடம் பிடித்துள்ளது. இந்தப்பட்டியலில் ‘All Eyes on Rafah’ என்ற வார்த்தை முதலிடத்தில் உள்ளது. இதை பார்க்கும் கோலி ரசிகர்கள் பிறந்ததில் இருந்தே Akaay சாதனை படைக்க தொடங்கிவிட்டதாக கமெண்ட் செய்கின்றனர்.
அறிவிப்பை மீறி TN கடலோரப் பகுதிகளில் 90 கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவது CAG அறிக்கையில் தெரியவந்துள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் உடன் நிறைவடைந்த நிதி ஆண்டிற்கான, TN அரசின் நிதி தணிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், Coastal Regulation Zone பகுதியில் மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அமைக்கவில்லை எனவும், அறிவிப்பை மீறி கடலோரப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுமானங்கள் நடப்பதும் தெரியவந்துள்ளது.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி, லவ் டுடே படங்களின் மூலம் பிரபலமான பிரதீப், பிரேமலு மூலம் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்திய மமிதா பைஜூ இருவரின் கெமிஸ்ட்ரியை திரையில் காண ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.
நாளை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கோவை, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதுரை வெளிச்சநத்தத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளைத் தாக்கியதாக விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, 25 அடி உயரக் கொடி கம்பத்தை, மாவட்ட நிர்வாகம் அனுமதியின்றி 45 அடியாக உயர்த்தப்பட்டது. கடந்த 7ம் தேதி அதனை அகற்றச் சென்ற அதிகாரிகளை விசிகவினர் தாக்கியதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் VAO பரமசிவம் அளித்த புகாரின் பேரில் 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
வடிவேலுக்கு எதிராக அவதூறு விளைவிக்கும் வகையில் எதுவும் பேச மாட்டேன் என்று சிங்கமுத்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிங்கமுத்து தொடர்ந்து தன்னைப் பற்றி அவதூறு பேசுவதாகவும் அதற்கு ₹5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோர்ட்டில் வடிவேலு வழக்கு தொடுத்திருந்தார். இதன் விசாரணையின்போது, இனி வாய் மொழியாகவோ, டிஜிட்டல் முறையிலோ வடிவேலு குறித்து பேச மாட்டேன் என்று சிங்கமுத்து உறுதியளித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.