India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், இரவு 7 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அலர்ட் கொடுத்துள்ளது.
TN-க்கு வழங்கப்பட வேண்டிய பேரிடர் நிதியைத் தராமல் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக CONG MP சசிதரூர் குற்றஞ்சாட்டியுள்ளார். மக்களவையில் பேரிடர் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், தமிழ் நாட்டில் பாதிப்பு கடுமையாக இருக்கிறது எனத் தெரிந்தும், மத்திய அரசு அலட்சியம் காட்டுவதாக சாடியுள்ளார். பேரிடர் காலங்களில் தென் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குறை கூறியுள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் ஃப்ளூ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சளியும், இருமலும் இதன் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தால் கடுமையான தொண்டை வலியும் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுக வேண்டியது அவசியம்.
பெங்களூரில் மனைவியின் டார்ச்சர் தாங்காமல் கணவன் தற்கொலை செய்த நிலையில், அவர் சாவதற்கு முன் போட்டு வைத்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. போனில் கைரேகை பாஸ்வேர்டை அழிப்பது, கார், பைக் சாவியை ஃபிரிட்ஜில் வைப்பது, ஆபிஸ் லேப்டாப்பை ஒப்படைப்பது, சேமிப்பை மகனுக்கு கொடுப்பது, இறப்பதற்கு முன் குளிப்பது உள்ளிட்டவை லிஸ்ட்டில் உள்ளன. இத்தனை பெர்ஃபெக்டாக இருந்தவருக்கு வாழ்வில் எதிர்நீச்சல் போட தெரியாமல் போயிற்றே..
ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தில், வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘ஆறு’ படத்திற்கு பிறகு த்ரிஷா, சூர்யாவுடன் இணைந்து நடிக்க உள்ளார். கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இலங்கையில் துறைமுக முனையம் அமைக்கும் திட்டத்திற்காக அமெரிக்க வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் சுமார் ₹4,700 கோடி கடன் பெறும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக அதானி நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தனது சொந்த வருவாய் மற்றும் மூலதனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கு ₹2000 கோடி லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
சென்னையில் இன்று மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் கனமழை பெய்யக்கூடும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே, அலுவலகம் சென்றோர், பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவர்கள் கவனமாக வீடு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், தற்போது தி.மலை, காஞ்சி, திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கி., வீரர் ஹாரி ப்ரூக் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்த பட்டியலில் இந்தியா சார்பில் ஜெய்ஸ்வால் (4), பண்ட்(9) இருவர் மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளனர். ஆனால் விராட் கோலி, அவரது கரியரில் மிக மோசமான ரேங்கிங்கில், 20ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸி., டூரில் கோலி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலியின் சரிவு, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வாரம் 5 படங்கள் திரைக்கு வரவுள்ளதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவா நடிக்கும் ‘சூது கவ்வும் 2’, சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’, பரத் நடிக்கும் ‘Once Upon A Time In Madras’ ஆகிய 3 படங்கள் நாளை மறுநாள் வெளியாகின்றன. அன்சல் பால் நடித்துள்ள ‘மழையில் நனைகிறேன்’ படமும் நாளை வெளியாகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தளபதி’ திரைப்படம் நாளை ரீ ரிலீஸ் ஆகிறது.
தன் மீது தவறாக புனையப்பட்ட குடும்ப வன்முறை வழக்கையும், திருமணத்தையும் ரத்து செய்யக்கோரி தெலங்கானாவை சேர்ந்தவர் SC-இல் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், 498A சட்டப்பிரிவை மனைவி தவறாக பயன்படுத்தி உள்ளதாக குறிப்பிட்டதுடன், சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து, கணவன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
Sorry, no posts matched your criteria.