India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நவ.13ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத, இன மற்றும் மொழி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றார்கள். இதனையொட்டி, நவ.13இல் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு லீவ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு கலை `கிராவ் மகா’ ஆகும். எதிர்பாராத சூழ்நிலைகளில், தாக்குதலை எதிர்கொண்டால், வெறும் கைகளில் (அ) கையில் கிடைக்கும் பொருள்களை கொண்டு எதிரியை சமாளிக்க இது கற்றுத் தருகிறது. எதிரியை தாக்குவதை விட, எதிரியிடம் அகப்படாமல் தப்பிப்பதே இதன் உத்தி. எதிரி பலமான ஆயுதம் வைத்திருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட எதிரிகள் இருந்தாலோ, கண நேரத்தில் முடிவெடுக்கும் ஆற்றலையும் இது வளர்க்கிறது.
எக்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவில் பணியாற்றி சுமார் 6,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து, எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். மாதந்தோறும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மஸ்க், இந்த மாதம் பொறியியல் பிரிவில் இருந்தவர்களை பணி நீக்கம் செய்துள்ளார். எந்தவித முன்னறிவிப்பு இன்றி, ஊழியர்களின் மின்னஞ்சலுக்கு பணி நீக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டதால், அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நியூசி.,க்கு எதிரான 3ஆவது டெஸ்ட்டில் கோலியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. குறிப்பாக நியூசி., வீரர்கள் எந்த பக்கம் அடித்தாலும், கோலி விரட்டி விரட்டி பிடித்தார். அப்படி டைவ் கேட்ச் பிடிக்கும்போது அவரது ஜெர்சி சேறும் சகதியுமானது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து ‘PIC OF THE DAY’ என பாராட்டும் ரசிகர்கள், வெற்றிக்காக கடுமையாக உழைக்கும் கோலியின் அர்ப்பணிப்பை ஒருபோதும் சந்தேகிக்க வேண்டாம் என பதிவிடுகின்றனர்
சீனாவில் மக்கள்தொகை வளர்ச்சி குறைந்ததால், மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வலியுறுத்தி அந்நாட்டு அரசு பிரசாரம் செய்து வருகிறது. ஊக்கப்படுத்துதல், சலுகைகள் என பல வழிகளை கையாளும் சீன அரசு, ஆரம்ப சுகாதார ஊழியர்கள் மூலம் கவுன்சிலிங்கும் செய்கிறதாம். அப்போது பெண்களின் மாதவிடாய் நாள்களை கணக்கிட்டு கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ள நாள்களில் ஒன்றாக இருக்கும்படி தம்பதியருக்கு அட்வைஸும் செய்யப்படுகிறதாம்.
மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் மாதவன், மடோனா செபாஸ்டியன், சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “அதிர்ஷ்டசாலி”. முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், நாளை காலை 9 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்காக ஒரு குத்துப்பாட்டு, ஒரு மெலோடி பாடலை யுவன் சங்கர் ராஜா ஏற்கெனவே போட்டுக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்டில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமை பெற்றார். தோனி 39 முறை 50+ ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். பண்ட் 19 அரைசதங்கள் அடித்துள்ளார். ஃபரூக் இன்ஜினியர் (18), சையத் கிர்மானி (14) முறையே 3, 4 இடங்களில் உள்ளனர்.
ஏலியன்ஸ் (எ) வேற்று கிரக உயிரினங்கள் பூமிக்கு வந்து செல்வதாக அடிக்கடி வதந்திகள் வருவதுண்டு. இந்நிலையில், ஏலியன்களின் பறக்கும் வாகனம்(UFO) உள்பட சில பொருள்களை (UAP) கைப்பற்றி அமெரிக்கா ஆராய்ந்து வருவதாகவும், ஏலியன் டெக்னாலஜியை ஆராயவும், பிரதியெடுக்கவும் அமெரிக்க அரசு பெரும் தொகையை ஒதுக்கியுள்ள ரகசியத்தையும், பென்டகனின் முன்னாள் UFO ஆய்வாளர் Dr.Sean Kirkpatrick வெளியிட்டுள்ளார். அப்ப அது உண்மைதானா?
கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சேலம் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 துப்புரவு பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஆற்றுக்குள் விழுந்த ஒரு சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் ஸ்பின்னர்களான ஜடேஜா 4, அஷ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நியூசி., தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51, பிலிப்ஸ் 26 ரன்கள் எடுத்தனர். நியூசி., இந்தியாவை விட 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.