India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சீமான் பயணித்த விமானம், மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சீமான் இன்று விமானத்தில் புறப்பட்டார். இந்நிலையில், மதுரையை விமானம் நெருங்கிய போது, மழை மேகங்கள் சூழ்ந்து மோசமான வானிலை காணப்படுகிறது. இதனால் சீமான் சென்ற விமானம், தரையிறங்க முடியாமல் 20 நிமிடங்களுக்கும் மேலாக வானில் வட்டமடிப்பதால் பரபரப்பு நிலவுகிறது.
திடீரென ஒரு செய்தி பரபரப்பாகும் போது, ஏற்கெனவே பொதுவெளியில் விவாதிக்கப்படும் மற்றொரு முக்கிய விஷயம் பின்னுக்கு தள்ளப்படும். மழை, வெள்ளத்தை தமிழக அரசு சரியாக கையாண்டதா என்ற விவாதம் எழுந்தபோது, ஆதவ் அர்ஜூனா பிரச்சனை வெடித்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றி விவாதிக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இதுதான் அரசியலா?
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தில், தான் வில்லனாக நடிப்பதாக வெளியான தகவலுக்கு மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனக்கே தெரியாது என கலாய்த்துள்ள அவர், LCU-வில் இணைந்தால் மகிழ்ச்சியே எனவும் தனது விருப்பத்தை கூறியுள்ளார். ‘பென்ஸ்’ படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுத, பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். கைதி, விக்ரம் ஆகிய படங்களின் வரிசையில் இந்த படமும் LCU-வில் இணைந்துள்ளது.
தமிழ்நாடு ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு டிச.14இல் நடைபெறவுள்ளது. கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்துகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வு எழுதுவதற்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் 100 தேர்வர்களுக்கு (50 மாணவியர் + 50 மாணவர்) 9-12ஆம் வகுப்பு வரை ஆண்டு தோறும் உதவித்தொகை ₹1000 வழங்கப்படும்.
LSG இருந்து கே.எல் ராகுல் பிரிந்து சென்றாலும், அவர் மீதான அன்பும், மரியாதையும் குறையாது என அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார். கடந்த ஐபிஎல் சீசனில் கே.எல்.ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு, அந்த நேரத்தில் உணர்வுப்பூர்வமாக இருந்தே காரணம் எனவும், அவர் எப்போதும் தன் குடும்பத்தில் ஒருவர்தான் என்றும் தெரிவித்துள்ளார். கே.எல்.ராகுல் வரும் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடவுள்ளார்.
கடந்த காலங்களில் மழையை கணிக்கும் போது வானிலை ஆய்வு மையம் சில சறுக்கல்களை சந்தித்தது விவாதப்பொருளானது. இந்நிலையில், இதுகுறித்து வானிலை மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறும் போது, வானிலை பல அம்சங்களை கொண்டிருப்பதால், சில நேரங்களில் தவறு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், உள்முகம், வெளிமுகம் கொண்ட வானிலையை கணிக்கும் போது சில நேரங்களில் தவறு ஏற்படலாம் எனவும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் மணிப்பூர் குறித்து விவாதிக்க சொன்னால், அதை கரீனா கபூர் என பிரதமர் மோடி புரிந்து கொண்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. ராஜ் கபூர் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வேண்டி, PM மோடியை கபூர் குடும்பம் நேரில் சந்தித்து அழைத்ததை சுட்டிக்காட்டிய காங்., மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கக் கூட செல்லாமல், சினிமா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக சாடியுள்ளது.
2025இல் சந்திரனும், வியாழனும் மிதுன ராசியில் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகப் போகிறது. இதனால், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பலனடைய போகின்றனர். இவர்களுக்கு வரப் போகும் புத்தாண்டில் வீடு, நிலம், தங்கம் போன்ற சொத்துகளை வாங்கிக் குவிக்கும் ராஜயோகம் உள்ளது. மேலும், மகிழ்ச்சி, மன வலிமை, அதிர்ஷ்டம், ஆளுமைத் திறன் ஆகியவையும் பல மடங்கு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில மாதங்களாக கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.88 என்ற வரலாறு காணாத அளவில் சரிந்தது. டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் இறக்குமதி அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
முறையான எச்சரிக்கை விடுத்த பிறகே அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழக அரசை TTV தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான X பதிவில், மழை பாதிப்புக்கு பின்பு, வரலாறு காணாத மழை, கணித்ததைவிட அதிக மழை என காரணத்தை தேடாமல், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதே, கனமழை பாதிப்பிலிருந்து மக்கள் பாதுகாக்க ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.