India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤துலாம்: சிக்கல் சிங்கார வேலன் ➤விருச்சிகம் : எட்டுக்குடி முருகன் ➤தனுசு: திருவையாறு தனுசு சுப்ரமணியர் ➤மகரம்: மருதமலை முருகன் ➤கும்பம்: வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரர் ➤மீனம்: திருச்செந்தூர் சுப்ரமணியர். 12 ராசிக்காரர்களும் துலா ராசியில் சூரியன் நீச்சமான நிலையில் இருக்கும் சஷ்டி காலத்தில் முருகனுக்கு விரதமிருந்து, கோயிலிலுள்ள தீர்த்தத்தில் குளித்து கந்தனை வணங்கினால் கோடி நன்மைகள் பெறலாம்.
மித்ரன் ஆர். ஜவஹர், மாதவன் கூட்டணியில் உருவாகி வரும் ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது, மறைந்த தொழிலதிபரான ஜி.டி நாயுடுவின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகும் படமாகும். இதில், மடோனா, தன்ஷிகா, ராதிகா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஜப்பானில் சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ₹2.75 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சைக்கிள் ஓட்டும்போது செல்போனில் பேசுவதால் விபத்துகள் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளன.
தவெக மாநாடுக்கு முன்பு விஜய்யை ஆதரித்து வந்த சீமான், மாநாட்டுக்கு பின் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதுகுறித்து நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன், GOAT திரைப்பட கதையை குறிப்பிட்டு விளக்கமளித்துள்ளார். அந்தப் படத்தில் விஜய் எப்படி தனது மகனை தவறானவன் என தெரிந்தவுடன் தாக்குகிறாரோ அப்படித்தான், நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்த உடன் சீமானும் விமர்சிப்பதாகக் கூறியுள்ளார்.
*அடை, வடை, தோசை செய்யும்போது, வறுத்து பொடி செய்த ஜவ்வரிசி மாவு சேர்த்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். *தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசியாக இருக்கும். *அடைக்கு மாவு அரைக்கும்போது பருப்பு, அரிசியுடன் கொஞ்சம் புளியும் சேர்த்தால் சுவையாக இருக்கும். *டீ போடும்போது 5 புதினா இலைகளைச் சேர்த்து கொதிக்க வைத்தால் பித்தம் நீங்கும்.
➤காங்ரே புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பானின் மேற்கு பிராந்தியத்தில் இருந்து 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். ➤பொலிவியாவின் கோச்சம்பா ராணுவத் தளத்தை முன்னாள் அதிபர் மோரேலஸின் ஆதரவு ஆயுதக்கும்பல் கைப்பற்றியது. ➤லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 52 பேர் உயிரிழந்தனர். ➤நினைத்துக்கூட பார்க்க முடியாத கடும் தாக்குதலை இஸ்ரேல் சந்திக்குமென ஈரான் எச்சரித்துள்ளது.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து போனவர்களுக்கு தேற்றான் கொட்டை நல்ல மருந்தாக இருக்கும் என தேரையர் சித்தர் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேற்றான் கொட்டை பொடி, ஆவார வேர், சீரகம் ஆகியவற்றை நீரில் கலந்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, விலாமரத்துப் பிசின் சேர்த்தால் தேற்றான் கொட்டை டீ ரெடி. இந்த டீ வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே குடிக்கலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது.
குடித்துவிட்டு சண்டை போட்ட கணவனின் அந்தரங்க உறுப்பை மனைவி அறுத்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அக்.31ஆம் தேதி நள்ளிரவில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. பின்னர் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது கூர்மையான ஆயுதத்தால் அந்தரங்க உறுப்பில் தாக்கியதாக கணவன் புகாரளித்துள்ளார். தப்பியோடிய மனைவி பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இருவருக்கும் இது 3ஆவது திருமணமாகும்.
➤U19 உலக குத்துச்சண்டை: 75 Kg பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் சிமோனை வீழ்த்தி இந்தியாவின் கிரிஷா வர்மா தங்கம் வென்றார். ➤ISL கால்பந்து: லீக் ஆட்டத்தில் கோவா அணியிடம் பெங்களூரு அணி தோல்வி கண்டது➤ஹைலோ பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் ஃபைனலுக்கு மாளவிகா முன்னேறினார். ➤ புரோ கபடி தொடர்: 30ஆவது லீக் போட்டியில் பாட்னா அணி 42-37 என்ற கணக்கில் உ.பி. அணியை வீழ்த்தியது.
ஆம்னி பஸ்களில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வர அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புகின்றனர். சாதாரண நாள்களில் நெல்லை- சென்னைக்கு ₹800- 1500, மதுரையில் இருந்து ₹700- ₹1,200 வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது நெல்லையில் இருந்து ₹2,500- ₹4,000, மதுரையில் இருந்து ₹2,000 – ₹3,500 வசூலிப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.