India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமான பழம் பப்பாளி என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். பப்பாளியில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. மற்ற வைட்டமின்களும் உள்ளன. இது சுகர் நோயாளிகளுக்கு, ஒரு எனர்ஜி டானிக். சுகர் இருந்தால் வாழை, சப்போட்டா பழங்களை சாப்பிடக் கூடாது. ஆனால் பப்பாளியை அளவாக எடுக்கலாம். தினமும் 4, 5 துண்டுகள் சாப்பிட்டால் அவர்களுக்கு இயல்பாக இருக்கும் சோர்வு நீங்கிவிடுமாம்.
விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கருத்து தெரிவித்துள்ளார். திமுக கூட்டத்தில் பேசிய அவர், “இன்னும் 25 வருடத்திற்கு தமிழகத்தை ஆளப்போவது திமுக தான். யார் எந்த வேஷம் போட்டு வந்தாலும் திமுகவை அசைக்க முடியாது. நாங்கள் போட்ட அடித்தளம் அப்படி” எனக் கூறினார். இன்று நடந்த தவெக கூட்டத்தில், பொய் வாக்குறுதிகளால் மக்களை திமுக ஏமாற்றுகிறது என தீர்மானம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சின்ன வெங்காயத்தில் உள்ள குவர்சிடின், கேம்ஃபெரால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதோடு, சருமத்திற்கு பொலிவையும் வழங்குகிறது. காப்பர், வைட்டமின் B, மாங்கனீசு & நுண் ஊட்டச்சத்துகள் கெட்ட கொழுப்பை குறைக்கின்றன. முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன. ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கின்றது. ரத்தம் உறைவதை தடுக்கிறது. அதே நேரத்தில் Gastritis உள்ளவர்கள் இதை பச்சையாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரின் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்திடம் கடும் தோல்வியைச் சந்தித்த இந்தியா 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை விட அதிகமாக இருந்தாலும், இந்தியாவின் PCT (Points won by a team) 58.33’ஆக குறைந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா (62.5) முதலிடத்தில் உள்ளது. WTC இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா BGT தொடரை வெல்ல வேண்டும்.
திரைப்படங்களை பார்க்கும்போது உணர்ச்சிவசப்பட்டு அழும் பழக்கம் சிலருக்கு இருக்கிறது. அத்தகைய பழக்கத்திற்கும், முன்கூட்டிய மரணத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த சுபாவம் நரம்பியல் தன்மையுடன் தொடர்புடையது. பயம், சோகம், தனிமை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை தூண்டச் செய்து, ஆயுளை குறைக்கும் அபாயத்தை 10% அதிகரிக்கச் செய்துவிடும் என்று அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
2-வது இன்னிங்சில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், அவர் அவுட்டானது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் AB டி வில்லியர்ஸ் கூறும் போது, பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தால், On-field நடுவரின் முடிவே இறுதியானதாக இருக்க வேண்டும் என்றார். முக்கியமான போட்டியில் ஏன் Hotspot இல்லை என்றும் வினவினார் ABD.
ஐடி நிறுவனங்களில் தொடரும் பணி நீக்க நடவடிக்கைகளால் பணியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் 30 நிறுவனங்களில் இருந்து 3,080 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுவே செப்டம்பர் மாதத்தில் 35 நிறுவனங்களில் 3,941 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். ஐடி நிறுவனங்களை போன்று சில நிறுவனங்கள் Silent Layoff செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று 10 மணிக்கு <<14518322>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1)பசிஃபிக் பெருங்கடல் 2)National Institute of Technology 3)டாக்டர் சீமா ராவ் 4)1857 5)3000 பற்கள் 6)Hygrometer 7)அணிச்சல் 8)தொல்லியல் குறித்த படிப்பு. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நாளை (நவ.4) முதல் 9ம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும்.
எல்ஐசி நிறுவனம் விரைவில் மருத்துவக் காப்பீட்டு வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்போது காப்பீட்டுத் துறையில் 70 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் மருத்துவக் காப்பீடு சேவையை 7 நிறுவனங்கள்தான் வழங்குகின்றன. இந்நிலையில், மருத்துவக் காப்பீட்டில் உள்ள நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வாங்க எல்ஐசி திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.