India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
LSG-க்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தோனிக்கு சிறந்த ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய தோனி, எனக்கு ஏன் விருது கொடுத்தார்கள் என்று ஒன்னும் புரியவில்லை. எங்கள் அணியில் சிறப்பாக பந்துவீசிய நூர் அகமது தான், இந்த விருதுக்கு தகுதியானவர் என்று தோனி பதிலளித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இதனால தான் சார் அவரு தல! என்று கமெண்ட் செய்கின்றனர்.
▶சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள் ▶பகை, பொறாமையை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேரும் ▶பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது ▶ வெற்றிகளை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது.
பாமகவில் உட்கட்சி மோதல் எழுந்துள்ள நிலையில், அன்புமணிக்கு துரை வைகோ அட்வைஸ் செய்துள்ளார். ராமதாஸின் அரசியல் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது. அதை அன்புமணி புரிந்துக் கொண்டு செயல்பட வேண்டும். அவர்களுக்குள் இருக்கக்கூடிய பிரச்னையை கட்சிக்குள்ளேயே பேசி தீர்க்க வேண்டும். அதுதான் அக்கட்சிக்கும் நல்லது. அதே சமயம் தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பஞ்சாப் அணி வீரர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக நடப்பு IPL சீசனில் இருந்து வெளியேறியுள்ளார். SRH-க்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த நிலையில் அவர் தொடரிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 3-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. இதுவரை கோப்பையை வென்றிராத பஞ்சாப் அணி இந்தாண்டாவது அந்த சோகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?
சனாதனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக பேசிக் கொண்டிருக்கும் ஆளுநர், சனாதனத்தை எதிர்த்த அம்பேத்கரை புகழ்வது பொருத்தமாகவா இருக்கிறது என்று அமைச்சர் கோவி செழியன் சாடியுள்ளார். இனிப்பும், உப்பு எப்படி ஒரே சுவை தர முடியும் எனக் கேள்வி எழுப்பிய அவர், சனாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே தலித் மக்களை பற்றிக் கவலைப்படுகிறீர்களே, உங்களின் டபுள் ரோல் நடிப்பு தமிழ்நாட்டில் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 307 ▶குறள்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு, நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. ▶பொருள்: நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா உள்ளிட்டோர் நடிக்கும் ‘குபேரா’ திரைப்படம் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகவுள்ளது. இதற்கான பிரத்யேக போஸ்டரில் தனுஷ் விசில் அடித்து செம குத்து டான்ஸ் போடுகிறார்.
சட்டமன்றத்தில் இன்று ‘மாநில சுயாட்சி’ தொடர்பான தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிகிறார். நீட், மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு அநீதி இழைத்து வருவதாக திமுக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
LSG-ஐ CSK வீழ்த்திய நிலையில், சிறப்பாக விளையாடிய தோனிக்கு 6 வருடங்களுக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. IPL வரலாற்றில் ஆட்டநாயகன் விருதை வென்ற மிக வயதான வீரர் தோனிதான்(43). 11 பந்தில் 26 ரன்கள் எடுத்த தோனி, ஆயுஷ் பதோனியை ஸ்டெம்பிங் செய்து, விக்கெட் கீப்பராக 200-வது ஆட்டமிழப்பை பதிவு செய்தார். அத்துடன் அப்துல் சமத் விக்கெட்டை மிரட்டலான ரன் அவுட் மூலம் கைப்பற்றி அசத்தினார்.
▶ஏப்ரல் – சித்திரை- 02 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3 : 00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9 :00 AM – 10:30 AM ▶ குளிகை: 12:00 PM – 1:30 PM ▶ திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: தேய்பிறை
Sorry, no posts matched your criteria.