India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ADMM-Plus மாநாட்டில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலேசியா சென்றுள்ளார். அங்கு அவர், USA-வின் போர் செயலர் பீட் ஹெக்செத்தை சந்தித்து பேசினார். அப்போது, INDIA -USA இடையே 10 ஆண்டுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது குறித்து கூறிய ஹெக்செத், இந்தியாவுடனான உறவு மிகவும் வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் 2 நாடுகள் இடையே தகவல் & தொழில்நுட்ப பரிமாற்றம் அதிகமாகும்.

CM ஸ்டாலின் ஆகஸ்ட் 12-ல் தொடங்கி வைத்த ‘தாயுமானவர்’ திட்டம் நவம்பர் முதல் வாரத்தில் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். இனி, ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படும்.

நாட்டின் சாபகேடாக மது மாறிவிட்டாலும், விற்பனை எப்போதும் அமோகம்தான். 2024 – 2025-ல் அதிகமாக மது அருந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவை Case-களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. (ஒரு Case = 12 மது பாட்டில்கள்) அவை என்னென்ன என தெரிந்து கொள்ள மேலே உள்ள போட்டோஸை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். லிஸ்ட்டில் டாப்பில் நீங்க எதிர்பார்த்த மாநிலம் எது?

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது T20 போட்டி இன்று மெல்போர்னில் மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது. ஆனால், போட்டி தொடங்கும் நேரத்தில், மழை பொழிவதற்கு 66% வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. முதல் T20 மழையால் ரத்தாகியது போலவே, இந்த போட்டியையும் மழை கெடுத்துவிடுமோ என்ற வருத்தத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

✱CRED, MobiKwik போன்ற 3-ம் தரப்பு செயலிகள் வழியாக SBI கார்டு வைத்து பள்ளி/கல்லூரி கட்டணங்களை செலுத்தினால், பரிவர்த்தனை தொகையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும் ✱ஆதார் புதுப்பித்தலை எளிதாக ஆன்லைனில் மாற்றலாம். அதே போல, Biometric அப்டேட் செய்யும் கட்டணம் ₹100-ல் இருந்து ₹125 ஆக உயர்த்தப்படுகிறது ✱இனி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகள், லாக்கர்களுக்கு 4 நாமினிகளை நியமிக்கலாம். SHARE IT.

தூய்மை இந்தியா முன்னெடுப்பு இருந்தாலும், நாடு தூய்மையான பாடில்லை. குப்பை தொட்டியை தவிர அனைத்து இடங்களிலும் கிடக்கும் குப்பைகள், நீர் நிலைகளில் கலந்திருக்கும் பிளாஸ்டிக் என மோசமாகிக்கொண்டே போகிறது. இந்நிலையில், இதற்காக வாரணாசி மாநகராட்சி கடுமையான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரோட்டில் எச்சில் துப்பினால், குப்பை போட்டால் ₹200 அபராதம் என அறிவித்துள்ளது. இங்கும் இது அமலுக்கு வந்தால் எப்படி இருக்கும்?

SIR பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறது TN அரசு. க, தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கூட்டத்தில் விஜய் பங்கேற்றால், அது அதிமுக-தவெக கூட்டணி கணக்கில் சிக்கலை ஏற்படுத்தலாம். ஒருவேளை பங்கேற்கவில்லை எனில் ’பாஜக பி டீம்’ என திமுக, தவெகவை விமர்சிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். SIR-ஐ ஆதரிக்கவில்லை என தவெக கூறினாலும், கூட்டத்தில் பங்கேற்குமா என கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில நாள்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என மாறிக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $3,949-லிருந்து $4,018.9-ஆக உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று நம்மூரிலும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களுக்கு பிறகு விலையில் எந்தவித மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ₹11,300-க்கும், சவரன் 90,400-க்கும் விற்பனையாகிறது.

நேபாளத்தில் ஊழல் ஆட்சியை அகற்ற GEN Z தலைமுறையினர் செய்த புரட்சியை போல, தமிழகத்திலும் இளைஞர்கள் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார். முன்னதாக, கரூர் சம்பவத்தை தொடர்ந்து நேபாளத்தில் நடந்த புரட்சி தமிழகத்திலும் நடக்கவேண்டும் என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டிருந்தார். இதற்காக, வன்முறையை தூண்டுகிறார் என அவர் மீது வழக்கு பாய்ந்தது. இந்நிலையில், அன்புமணி மீதும் வழக்கு பாயுமா?

கோவை தொண்டாமுத்தூர் தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. 2011, 2016, 2021 என தொடர்ந்து இத்தொகுதியில் EPS-ன் வலது கையாக இருக்கும் முன்னாள் அமைச்சர் S.P.வேலுமணி வெற்றி பெற்று வருகிறார். இதனால், இந்த தொகுதியை கைப்பற்றும் பொறுப்பை செந்தில் பாலாஜியிடம் திமுக ஒப்படைத்துள்ளது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.