India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகை த்ரிஷாவின் நிகர சொத்து மதிப்பு ₹85 கோடியாக உள்ளது. ஒரு படத்தில் நடிக்க அவர் ₹5 கோடி சம்பளம் வாங்குகிறார். பிராண்ட் ஒப்பந்தங்கள், விளம்பரங்களுக்கு ₹9 கோடி பெறுகிறார். ஹைதராபாத்தில் ₹6 கோடியிலும், சென்னையில் ₹10 கோடியிலும் அவருக்கு ஆடம்பர வீடு உள்ளது. மேலும், 4 சொகுசு கார்களை கொண்டுள்ளார். அவற்றின் அதிகபட்ச விலை ₹80 லட்சம், குறைந்தபட்ச விலை ₹63 லட்சம்.
‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே’ என்ற பாடலின் முடிவில், மணக்கோலத்தில் இருக்கும் சிம்ரன், தனது காதலன் பிரசாந்திடமே செல்வார். இதேபோன்ற சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் Channa Mereya என்ற பிரபலமான பிரேக்அப் பாடலை DJ ஒலிபரப்பியுள்ளார். இதனைக் கேட்டதும் பழைய காதல் நினைவுக்கு வர, உடனே திருமணத்தை நிறுத்தியுள்ளார் மணமகன். காதலை சேர்த்து வைத்த DJ-க்கு நன்றி என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
நாமக்கல்லில் கறிக்கோழி 1 கிலோ (உயிருடன்) ₹88-ஆகவும், முட்டைக்கோழி கிலோ ₹85-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் சென்னையில் கறிக்கோழி உயிருடன் கிலோ ₹130-₹150 வரையிலும், தோல் நீக்கிய கறி ₹200 வரையிலும் விற்பனையாகிறது. முட்டை விலை 5 காசு உயர்ந்து ₹4.10ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ₹5ஆக விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் கோழி, முட்டை விலை என்ன?
மும்பையைச் சேர்ந்த பாரத் ஜெயினுக்கு ₹1.4 கோடி மதிப்பில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. அவரது நிகர மதிப்பு ₹7.5 கோடி. 2 கடைகளையும் அவர் வைத்துள்ளார். இவ்வளவு சொத்து சேர்த்தும் பிச்சை எடுப்பதை அவர் நிறுத்தவில்லை. மும்பை ஏர்போர்ட் முன்பு பிச்சையெடுக்கும் அவர், நாளொன்றுக்கு ₹2,000 – ₹2,500 என்ற வகையில் மாதம் ₹60,000 – ₹75,000 வரை வருமானம் ஈட்டுகிறார்.
இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது 25% பரஸ்பர வரி விதிக்கும் டிரம்பின் அறிவிப்பு, 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பரஸ்பர வரி விதிப்புக்குப் பிறகு US உடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முதல் நாடாக இந்தியா உள்ளதாக US நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார். முதற்கட்ட ஒப்பந்தம் செப்டம்பரில் கையெழுத்திட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர். காமராஜ் நகரைச் சேர்ந்த இவர், சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் தனியார் ஹோட்டல் அருகே பைக்கில் சென்றபோது 10 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இக்கொலைச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் ODI Tri-Series இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு இந்தியா – இலங்கை அணிகளின் மேட்சை, FanCode app-ல் காணலாம். இந்திய அணி: ஹர்மன்ப்ரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹார்லீன் தியோல், ஜெமிமா, ரிச்சா கோஷ், யஸ்திகா, தீப்தி ஷர்மா, அமன்ஜோட் கவுர், கஷ்வீ கவுதம், ஸ்னேஹ் ராணா, அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசப்னிஸ், ஸ்ரீ சரணி, ஷுச்சி உபாத்யாய்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் பாக். உடனே பாதிக்கப்படாது. காரணம், பாக்.ல் இருக்கும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் பாக்லிஹார், கிஷங்கங்கா அணைகள் என சிறிய உள்கட்டமைப்புகளை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இது குறைந்த அளவே நீரைத் தேக்கும். ஆனால், இந்தியா அணைகளை கட்டி நீரை முழுவதுமாக நிறுத்தினால் பாக்.-க்கு நீண்டகால பிரச்னையாக மாறும்.
கம்பீருக்கு<<16198203>> ‘I kill you’<<>> என மெயில் அனுப்பிய வழக்கில், குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் (21) என்ற இன்ஜினியரிங் மாணவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி கம்பீருக்கு இந்த மெயில் வந்திருந்தது. ஏற்கனவே, கம்பீருக்கு 2022-ல் இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மெயில் வந்திருந்தது.
காவல் படத்தை இயக்கியவர் நாகேந்திரன். இதேபோல், மேலும் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று அவர் திடீரென மரணம் அடைந்தார். நாகேந்திரனின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதில் அவர் மரணமடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாகேந்திரன் மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.