news

News November 6, 2024

முதல்வர் பிரிவினைவாதம் பேசக்கூடாது: வானதி

image

தமிழக முதல்வர் பிரிவினைவாதம் பேசுவதை ஏற்க முடியாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற திமுகவின் பழைய பேச்சையே முதல்வர் தற்போது மீண்டும் பேசுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக இன்று காலை கோவையில் நடைபெற்ற விழாவில், வடக்கு வாழ்வதற்கு தெற்கு உதவி செய்கிறது என முதல்வர் கூறியிருந்தார்.

News November 6, 2024

15 மாவட்டங்களில் இடியுடன் மழை

image

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, விழுப்புரம், நாகை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

News November 6, 2024

WHATSAPP பயனாளர்கள் கவனத்திற்கு..

image

WHATSAPPஇல் முன்பின் தெரியாதோர், உங்கள் நம்பரை குழுவில் சேர்ப்பதால் அவதியடைவது உண்டு. இதை கட்டுப்படுத்த WHATSAPP வசதி அளிக்கிறது. Privacy செட்டிங்ஸ் சென்று கிளிக் செய்தால் Everyone, My contacts, My contacts Except என்பது வரும். அதில் ஒன்றை தேர்வு செய்தால், குழுவில் யார் உங்களை சேர்க்கலாம் என்பது அப்டேட் ஆகும். அதன் பிறகு உங்கள் நம்பரை தேவை இல்லாமல் குழுவில் சேர்க்க முடியாது. SHARE IT

News November 6, 2024

சாதிய ஆதிக்க வெறியை ஒடுக்குக: முத்தரசன்

image

சாதி ஆதிக்க வெறியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தமிழக அரசை CPI மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ராணிப்பேட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இதுபோன்ற கொடிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், சாதி ஆதிக்கத்தில் தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 6, 2024

சித்தார்த், விஜய் சங்கர் சிறப்பான ஆட்டம்

image

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அசாம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி முதல் நாள் முடிவில் 299-7 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய சித்தார்த் 94, விஜய் சங்கர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். முகமது அலி 27*, சோனு யாதவ் 12* ரன்களுடன் களத்தில் உள்ளனர். அசாம் தரப்பில் தர்ஷன், ராகுல் சிங், Swarupam Purkayastha தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

News November 6, 2024

கோர விபத்தில் 10 பேர் பலி.. நெஞ்சை உலுக்கும் போட்டோ

image

உ.பி.,யில் ஆட்டோ மீது டிரக் மோதியதில் 3 குழந்தைகள், 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம் – மாதவ்கஞ்ச் சாலையில் சென்ற டிரக், பைக் ஒன்றின் மீது மோதாமல் இருக்க முயன்றபோது, ஆட்டோ மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்துள்ளனர். நெஞ்சை பதைபதைக்கும் விபத்தின் போட்டோ வெளியாகியுள்ளது.

News November 6, 2024

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி? திருமா பதில்

image

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார். கூட்டணி ஆட்சி தொடர்பாக விசிக நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும், தங்களின் கொள்கையே எல்லோருக்கும் எல்லாம் என்பதே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது கூட்டணி ஆட்சி என்பது பொருத்தமற்ற கேள்வி எனவும், எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு வரும்போது விசிக குரல் எழுப்பும் எனவும் தெரிவித்தார்.

News November 6, 2024

எப்போது நடைபயிற்சி செய்ய வேண்டும்?

image

ஒவ்வொரு நாளும் குறைந்தது 8,000 ஸ்டெப்ஸ் நடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் நடைபயிற்சி செய்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உடலில் இருக்கும் கொழுப்புகள் கரையும். மாலையில் நடைபயிற்சி செய்வது மன அழுத்தத்தை குறைக்கும். செரிமான பிரச்னைகளை நீக்கி இரவில் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். காலை, மாலை என எப்போது வேண்டுமானாலும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

News November 6, 2024

பாபி சிம்ஹா பர்த் டேவுக்காக ‘Non Violence’ போஸ்டர்

image

நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்தநாளை முன்னிட்டு, Non Violence படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் யோகி பாபு, அதிதி பாலன், மெட்ரோ சிரிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை, ஏகே பிக்சர்ஸ் தயாரிக்கிறது. யுவன் இசையமைக்கிறார். 1990 காலக்கட்டத்தில் மதுரை பின்னணில் நடந்த கதையை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. தமிழ் உள்பட 5 மொழிகளில் இத்திரைப்படம் ரிலீஸாக உள்ளது.

News November 6, 2024

DEVOTIONAL: மாலை நேர தீப வழிபாடு தரும் பலன்

image

தீப வழிபாட்டின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம். வீட்டில் தினமும் காலை, மாலை தீபம் ஏற்றிவைத்து, வழிபாடு செய்தால், தீய சக்திகள் விலகி, லட்சுமி கடாட்சம் பெருகும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. தீபத்தின் சுடரில் மகாலட்சுமி, ஒளியில் சரஸ்வதி, வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளை ஒருங்கே பெறலாம். SHARE IT

error: Content is protected !!