India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமரன் படத்தில் சில விநாடிகள் மட்டுமே வரும் காட்சியில் இடம்பெற்ற போன் நம்பரால், சென்னை மாணவர் ஒருவர் 3 நாள்களாக படாத பாடுபட்டுள்ளார். இது சாய் பல்லவி நம்பர் என சிலரும், அது முகுந்த் மனைவியின் நம்பர் என சிலரும் நினைத்து, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி கால் செய்துள்ளனர். இதனால் மொபைலை Silent Mode-ல் வைத்துள்ள அவர், முக்கிய கால்களை கூட எடுக்க முடியவில்லை என வேதனைப்படுகிறார்.
பிஹாரில் சாதிவாரி மக்கள்தொகை சர்வே நடத்தப்பட்டுக் கடந்த ஆண்டு புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன. கர்நாடகாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இம்மாதம் விவரங்கள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. நவ.9 முதல் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்குகிறது. ஆனால், தமிழக அரசு மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
BSF, CISF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளில் காலியாக இருக்கும் 39,481 இடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது. விண்ணப்பப்பதிவில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருப்பின் அதனை திருத்த அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. ஆதலால் வேலைக்கு விண்ணப்பித்தோர் உடனே திருத்தம் செய்ய கேட்டுக் காெள்ளப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
மக்களிடையே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. சிறு வணிகர்களும் UPI மூலம் பணம் வசூலிக்கும் முறையை பின்பற்றுகின்றனர். இதனால் மக்கள் ATMஐ பயன்படுத்துவது வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் 4,000 ATMகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் ₹34.70 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ள நிலையில், 1 லட்சம் பேருக்கு 15 ATM என்கிற விகிதமே உள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்க.
ஆயுதப்படைகளை வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்க பதிவில் அவர், ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை 2015 நவ.7இல் செயல்படுத்த உத்தரவிட்டதை நினைவுகூர்ந்து, நாட்டின் ஹீரோக்களை கவுரவிக்க மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை அது என்று கூறியுள்ளார். அரசின் நடவடிக்கையால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள், குடும்பத்தினர் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை பின்தொடர்வோருக்கு அளிக்க வேண்டிய தண்டனை குறித்து BNS சட்டத்தின் 77(2) பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் புகாரின்பேரில், முதல்முறை குற்றமிழைக்கும் நபருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. திரும்பவும் அதே குற்றத்தை அந்த நபர் இழைக்கும்பட்சத்தில், அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE IT.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன், பருவகால influenza தொற்றும் தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் MASK அணிந்து வெளியே செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இவ்வகை influenza காய்ச்சலுடன், நுரையீரல் தொற்றும் அதிகரித்துள்ளதால், தீவிர பாதிப்புக்கு உள்ளானவர்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. இதனால், காய்ச்சல், உடல்சோர்வு ஏற்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகவும்.
நெப்போலியன் மகன் தனுஷிற்கு திருமணம் நடைபெற்றது. ஜப்பானில் வைத்து நடைபெற்ற திருமணத்தில் மணமகள் அக்ஷயாவை அவர் கரம்பிடித்தார். நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா, சுகாசினி, குஷ்பூ, மீனா, கார்த்தி, பாண்டியராஜன், விதார்த், கலா மாஸ்டர், ஜப்பானுக்கான இந்திய தூதர் சிபி ஜார்ஜ், அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனுஷிற்கு தசைபிடிப்பு பாதிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி கோப்பை போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இரட்டை சதம் அடித்துள்ளார். மொத்தம் 201 பந்துகளில் 22 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் ரஞ்சி கோப்பையில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 2015ல் முதல் இரட்டை சதம் அடித்தார். தற்போது 227* ரன்களுடன் தொடர்ந்து ஆடி வருகிறார். தொடர்ந்து சிறப்பாக ஆடும்பட்சத்தில் இந்திய அணியில் அவர் இடம்பெற வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.