India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நடிகை நவ்யா நாயர் கணவரை பிரிந்து விட்டாரா? என்ற கேள்வி மீண்டும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. விஷூ தினத்தில் பதிவிடப்பட்ட அவரின் இன்ஸ்டா போஸ்ட்டில் பெற்றோர், சகோதரன் மட்டுமே உள்ளனர். அதில், அவரது கணவர் சந்தோஷ் மேனன் இல்லாததை சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
BSP மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து <<16103800>>பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்<<>> நீக்கத்திற்கு மாநிலத் தலைவர் ஆனந்தன் தான் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் நடந்த செயற்குழு கூட்டத்தில், பொற்கொடி தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆனந்தன் மீது பல புகார்களை கூறினர். குறிப்பாக ஆனந்தன் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக மேலிடப் பிரதிநிதிகளிடம் பொற்கொடி கூறியிருந்த நிலையில், இன்று திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானில் பிறப்பு விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாத இறுதியில் மொத்த மக்கள் தொகை 12 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 8,98,000 குறைவு. வேலை பளு காரணமாக இளம் வயதினர் திருமணத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கின்றனர். குழந்தை பிறப்பையும் ஒத்திவைத்து வருகின்றனர். இதனால், குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை ஜப்பான் எடுத்து வருகிறது.
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி 2016–21ல் பால் வளத்துறை அமைச்சராக இருந்த <<16105372>>ராஜேந்திர பாலாஜி<<>>, ₹3 கோடி அளவுக்கு மோசடி செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முறைகேடு வழக்கில் நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 2016 – 21 காலக்கட்டத்தில் அவர் அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கி தருவதாக ₹3 கோடி முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை CBI விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் கண்டனத்தை அடுத்து, கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இது ராஜேந்திர பாலாஜிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் விளையாடும் போது, பலரும் அதிக கவனம் கொடுக்க மாட்டார்கள். அந்த பழக்கம் 2 பிஞ்சுகளின் வாழ்க்கையை பறித்துள்ளது. தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில், மாமாவின் திருமணத்தின் போது, காரில் ஏறி 2 குழந்தைகள் விளையாடி கொண்டிருந்துள்ளனர். ஆனால், கார் லாக்காகி விட குழந்தைகள் காரிலேயே மூச்சுத்திணறி துடிதுடித்து இறந்துள்ளனர். பெற்றோர்களும், உறவினர்களும் திருமணத்தில் இருந்ததால் கவனிக்கவில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையின் 20-வது தவணை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சற்றுமுன் வரவு வைக்கப்பட்டது. ஒரு கோடியே 6 லட்சம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஏப்ரல் மாதத்திற்கான ₹1,000 செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக ₹10,600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான நபர்களைச் சேர்க்க விரைவில் விரிவாக்க அறிவிப்பு வெளியாகவுள்ளது. உங்கள் குடும்பத்திற்கு ₹1000 வருகிறதா?
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்துதான் பாஜகவுடன் இபிஎஸ் கூட்டணி வைத்திருப்பதாக CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டியுள்ளார். பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன்பு பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுகவினர், திடீரென அவர்களுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது அதிமுக தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பாளையங்கோட்டை பள்ளியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளான். தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. காயமடைந்த 2 பேரும் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எட்டாம் வகுப்பு பயிலும் சிறுவன் இப்படியான வெறிச்செயலில் ஈடுபட்டிருப்பது கவலைக்குரிய விஷயம்தான்.
சட்டப்பேரவையில் 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சபாநாயகரிடம் அதிமுக கடிதம் கொடுத்துள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக இந்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் இந்து மதத்தைக் கேவலப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.