India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
NCERT ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்பு இந்தியில் மாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. CBSE பாடநூல்களின் தலைப்புகள் ம்ருதங், சந்தூர், கணித பிரகாஷ் என இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. இது நாட்டின் பன்முகத்தன்மையை சிதைப்பதாக கேரள அமைச்சர் சிவன் குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். NCERT தொடங்கி நாள்தோறும் MPக்களுக்கு எழுதும் கடிதம் வரை இந்தியை திணிப்பதா என மதுரை MP சு.வெங்கடேசனும் கண்டித்துள்ளார்.
அடுத்தடுத்த அரிவாள் வெட்டு சம்பவங்கள் தென் மாவட்டங்களை அதிரச் செய்துள்ளன. பாளையங்கோட்டையில் பள்ளிக்குள் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோன்ற சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. காதலியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டு காதலித்த பெண், திடீரென பேசாமல் ஒதுங்கியதால் அவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு பெற்றதற்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சட்டப்பேரவையில் மாநில உரிமைகளை மத்திய அரசு பறிப்பதாக CM ஸ்டாலின் குற்றம்சாட்டி உரையாற்றினார். அதே சமயம், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்காக பேரவையிலேயே நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு அவரும் நன்றி கூறினார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைந்தது. இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியதால் மாணவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். கடந்த 28-ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் 9,13,306 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதற்காக 4,113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வரும் மே 19-ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராத்திரி நன்றாக தூங்கினாலும், சிலருக்கு பகல் நேரத்திலும் தூக்கம் வந்துவிடும். இந்த பகல்நேர தூக்கத்தின் காரணம் தெரியுமா? மனச்சோர்வு, பதட்டம் போன்ற மனநிலை மாற்றங்கள். ஆரோக்கியமற்ற தூக்கத்திற்கு வைட்டமின் டி, இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம். அதே நேரத்தில், மருந்துகள் எடுப்பதும் பகல்நேர தூக்கத்திற்கு காரணமாக இருக்கலாம். நீங்களும் பகலில் தூங்குறீங்களா?
மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் தமிழக அரசு உயர்நிலைக்குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் ஐஏஎஸ் அதிகாரி அசோக் வர்தன் ஷெட்டி, திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவர் நாகநாதன் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத இறுதிக்குள் இக்குழு வரைவு அறிக்கையை தாக்கல் செய்யும். இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளுக்குள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதால் 7 நாள்களுக்குள் படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், ₹5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்த சேலம் மாநகர அதிமுக ஐ.டி. விங் நிர்வாகி இல்லத்திற்குச் சென்று இபிஎஸ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 2 நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் அதிமுக நிர்வாகி செந்தில்குமாரன் உயிரிழந்தார். அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய இபிஎஸ், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். கட்சி நிர்வாகியின் அஞ்சலி நிகழ்ச்சியையொட்டி இன்றைய பேரவை நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை.
IPL தொடரின் இன்றைய மேட்சில், PBKS – KKR அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த சீசனில் பலமான அணிகளாகவே இருக்கின்றன. KKR 6 மேட்சில், 3-ல் வென்றுள்ளது. மறுபுறம், இது PBKS 5 மேட்சில், 3-ல் வென்றுள்ளது. போட்டி நடைபெறும் பஞ்சாப்பின் முல்லான்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், இன்று பெரிய ரன் மழையை எதிர்பார்க்கலாம். போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. யார் ஜெயிப்பாங்க என நினைக்குறீங்க?
மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்பதில் CM ஸ்டாலின் திட்டவட்டமாக உள்ளார். இந்த விவகாரம் சட்டப்பேரவையிலும் இன்று எதிரொலித்தது. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் ஹிந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். எக்காரணத்தைக் கொண்டும் மும்மொழியை ஏற்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.