India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிலளித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு பதில் கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், 2026இல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2026இல் அக்கட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படும் என்றும் கூறினார்.
காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. 8,600 குழந்தைகளிடம் (9-11 வயது) நடத்திய ஆய்வில், காற்றில் உள்ள 15 ரசாயனங்களில் அம்மோனியம் நைட்ரேட் குழந்தைகளிடையே இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் CJI-ஆகவும், அரசியல் சாசன அமர்வு நீதிபதியாகவும் சந்திரசூட் வழங்கிய டாப் 5 தீர்ப்புகள்: 1) ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கும் சட்டப்பிரிவை நீக்கியது. 2) சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என்ற விதியை நீக்கியது. 3) தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்ற தீர்ப்பு. 4) ஆளுநர்களை விட மாநில அரசுக்கே அதிகாரம் அதிகம் என்ற தீர்ப்பு. 5) அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி.
பால் ஊக்கத்தொகை குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ஆவின் மையங்களில் வேறு பொருள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்த அவர், ஆவின் சேவை அடிப்படையில் இயங்கி வருவதால், விற்பனை விலை உயர வாய்ப்பில்லை எனவும் உறுதிப்பட கூறியுள்ளார். முன்னதாக, தமிழகம் முழுவதும் ஆரோக்கியா (தனியார்) பால் விலை உயர்ந்ததால், ஆவின் பால் விலையும் உயரும் என கூறப்பட்டது.
இயக்குநர் அட்லீ சாதித்தது, தனது மகன் சாதித்ததை போல் பெருமையாக உள்ளது என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார். ஜவான் படத்தில் அட்லீயின் மெனக்கெடல், ஈடுபாடு, உழைப்பு ஆகியவை தன்னை பிரம்மிக்க வைத்ததாகக் குறிப்பிட்ட அவர், தன்னுடன் துணை இயக்குநராக இருந்தவர் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மேலும், இதுபோன்ற வெற்றிகள் சாதாரணமாக கிடைத்துவிடாது எனவும் புகழாரம் சூட்டினார்.
நடனத்தில் அசத்தும் இந்த நடிகை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, விஜய் சேதுபதி ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார். தன்னைவிட, இவர் 16 வயது மூத்த நடிகரை கடந்த 2019ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2021இல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இன்னுமா இந்த நடிகை யாருனு தெரியலயா? கமெண்ட்ஸ்ல பாருங்க.
விஜய்யின் உரையை கண்டும் காணாமல் கடந்து போயிருக்கலாம் என்று திருமா கட்சி நிர்வாகிகளிடம் கூறியுள்ளார். வழியில் காலை நீட்டி வம்புக்கு இழுப்பவர்களை எப்படி கடந்து போவது. நம்மைக் குறிவைத்து அரசியல் சதிவலைகளைப் பின்னுகின்றனர். நம் மீது சந்தேகத்தை எழுப்பி நம்பகத்தன்மையை நொறுக்க முயற்சி நடக்கிறது எனக் கூறிய அவர், புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு எந்த தேவையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
‘அமரன்’ படக்குழுவினர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் தமிழக பாஜக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாகக் கூறி, முஸ்லிம் அமைப்புக்கள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாக். அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி. தோல்வி அடைந்தது. அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் AUS அணி 35 ஓவர்களில் 163 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார். பாக். வீரர் ஹாரிஸ் ரௌஃப் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய பாக். அணி 26.3 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 1-1 என்ற நிலையை எட்டியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் இன்றுடன் ஓய்வு பெற்றார். ஒரு வழக்கில் தனது கடைசி தீர்ப்பை அளித்த அவர், தனது CJI நாற்காலியில் இருந்து கையெடுத்து கும்பிட்டபடியே எழுந்து நின்றார். இந்த போட்டோ தான் வைரலாகி வருகிறது. “இதுவரை யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நாளை முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது. ஆனாலும் நிறைவாக உணர்கிறேன்” எனக் கூறி அவர் பிரியாவிடை பெற்றார்.
Sorry, no posts matched your criteria.