news

News April 15, 2025

பருவமழை குறைவாக பெய்யும்: IMD

image

தமிழகத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக பெய்யும் என்று IMD அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் காலமாக இருக்கிறது. அதில், நடப்பாண்டில் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பான 87 செ.மீட்டரை விட அதிகம் பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் குறைவாக பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

News April 15, 2025

வங்கதேசத்துடன் மோதும் இந்திய.. வந்தாச்சு அட்டவணை

image

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 3 ODI மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய – வங்கதேசம் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 17-ல் இருந்து 23 வரை ODI-யும், 26-ல் இருந்து 31-ம் தேதி வரை T 20 போட்டிகளும் நடைபெறுகிறது. இதனிடையே ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இங்கிலாந்துடனான தொடரை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

News April 15, 2025

சனிப்பெயர்ச்சி தேதி அறிவிப்பு

image

திருநள்ளாறு கோயில் சனிப்பெயர்ச்சி விழா அடுத்தாண்டு மார்ச் 6ஆம் தேதி நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கவுள்ளார். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின் படி கடந்த மாதம் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற்றது. ஆனால், திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்க முறையினை கடைபிடிக்கிறது.

News April 15, 2025

அமைச்சரவையை கூட்டுகிறார் ஸ்டாலின்

image

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுப்பது, புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் கொடுப்பது ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

News April 15, 2025

டாய்லெட் பேப்பரில் ராஜினாமா கடிதம்.. இது வேற ரகம்

image

பல நிறுவனங்களில் ஊழியர்களை தேவைக்கு பயன்படுத்திவிட்டு பின் குப்பை போல் தூக்கி எறிவதை பார்த்திருப்போம். இதனை உணர்த்தும் வகையில் ஊழியர் ஒருவர் ராஜினாமா செய்த விதம் பலரின் கவனத்தை பெற்றுள்ளது. சிங்கப்பூரில் தன்னை சரியாக நடத்தாத நிறுவனத்துக்கு, டாய்லெட் பேப்பரில் ஊழியர் ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். ஆஞ்சிலா யோஹ் என்ற பெண் தொழிலதிபர் இச்சம்பவத்தை Linkedin பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

News April 15, 2025

கம்பேக் கொடுப்பாரா சிபிராஜ்?

image

சிபிராஜ் நடித்துள்ள ‘டென் ஹவர்ஸ்’ வரும் 18-ம் தேதி வெளியாகிறது. 3 வருடங்களுக்கு பிறகு அவரது படம் ரிலீசாகிறது. இப்படம் நன்றாக அமைந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என அவர் தீவிரமாக நம்பி வருகிறார். அவரது 22 வருட சினிமா கெரியரில் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘ஜாக்சன் துரை’ ஆகிய 2 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. கடைசியாக அவரது ‘வட்டம்’ படம், 2022-ல் OTT-யில் ரிலீசானது.

News April 15, 2025

உதயநிதிக்கும் ஆதரித்து பேசுவேன்: துரைமுருகன்

image

மாநில சுயாட்சி தொடர்பாக நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தாலும் அதனை ஆதரித்து பேசுவேன் என்று துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசினார். இன்று அறிமுகம் செய்யப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானம் மீது பேசிய அவர், 1974ஆம் ஆண்டு கலைஞர் தீர்மானம் கொண்டு வந்தபோதும் பேசினேன், இன்றும் பேசுகிறேன், நாளை உதயநிதி தீர்மானம் கொண்டு வந்தால் அப்போதும் ஆதரித்து பேசுவேன் என்று பெருமைப்பட கூறினார்.

News April 15, 2025

வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய கவாஸ்கர்

image

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மருத்துவ செலவுக்கு சுனில் கவாஸ்கரின் தொண்டு நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. அவரின் சிகிச்சைக்காக மாதம் ₹30,000 வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்நாள் முழுவதும் இந்ததொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பரான காம்ப்ளி 104 ODIs, 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

News April 15, 2025

பிரபல இயக்குநர் S.S.ஸ்டான்லி காலமானார்

image

பிரபல இயக்குநரும், நடிகருமான S.S.ஸ்டான்லி(58) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தனுஷ் நடிப்பில் ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‘ஏப்ரல் மாதத்தில்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரியார் திரைப்படத்தில் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். ஸ்டான்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 15, 2025

சிக்கிய கல்யாண ராணிகள்.. சீட்டிங் கும்பலின் பின்னணி!

image

உ.பி.யில் 13 திருமண மோசடியில் ஈடுபட்ட 3 கல்யாண ராணிகள் இப்போது கம்பி எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்களே அவர்களது குறி. ஆசை வார்த்தையால் ஆண்களை மயக்கும் மோசடிப் பெண்கள், திருமணம் முடிந்ததும் அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை சுருட்டிவிட்டு கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அவர்களது லிஸ்டில் இன்னும் எத்தனை ‘முதிர்கண்ணன்கள்’ சிக்கி இருக்கிறார்களோ?

error: Content is protected !!