news

News November 11, 2024

ஒரு எருமை ரூ.23 கோடி.. அப்படி என்ன ஸ்பெஷல்?

image

ராஜஸ்தானில் புஷ்கர் விழாவையொட்டி நடந்த கால்நடை ஏலத்தில் ஒரு எருமை ரூ.23 கோடிக்கு ஏலம் போயுள்ளது. 5 அடி உயரம், 13 அடி நீளம் கொண்ட இந்த எருமை 1,500 கிலோ எடை கொண்டது. அன்மோல்(8) என்ற அந்த எருமையை ஜக்தர் சிங் என்பவர் வளர்த்து வருகிறார். இந்த எருமையின் விந்து விற்பனை மூலம் பல லட்சம் பணம் சம்பாதித்துள்ள ஜக்தர், பிள்ளையைப் போல் வளர்ப்பதாகக் கூறி எருமையை ஏலத்தில் விற்க மறுத்துவிட்டார்.

News November 11, 2024

இன்றும், நாளையும் கனமழை

image

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இன்றும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்றிரவு, நாளை காலையில் கனமழை பெய்யத் தொடங்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

இந்திரா செளந்தர ராஜன் உடலுக்கு சந்தானம் அஞ்சலி

image

எழுத்தாளர் இந்திரா செளந்தர ராஜன் உடலுக்கு நடிகர் சந்தானம் நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மர்ம தேசம், விடாது கருப்பு உள்ளிட்ட மர்ம நாவல்களை எழுதியவர் இந்திரா செளந்தரராஜன். மதுரையில் உள்ள வீட்டில் நேற்று குளியலறையில் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கேள்விப்பட்டு மதுரையில் உள்ள வீட்டிற்கு சென்று அவருடைய வாசகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News November 11, 2024

சென்னை கிராண்ட்மாஸ்டர் – பட்டம் வென்ற தமிழக வீரர்கள்!!

image

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும், சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் அமெரிக்காவின் லெவோண் அரோனியனை வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழகத்தின் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.7 சுற்றுகள் கொண்ட தொடரில் 4 வெற்றி, 3 டிரா என 5.5 புள்ளிகளைப் பெற்று பிரணவ் வென்றார்.

News November 11, 2024

மது கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!

image

திருச்செந்தூரில் தனியார்ப் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு பெற்றோர் மறியல் போராட்டம் நடத்திய நிலையில், கோவையில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News November 11, 2024

வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!

image

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 11, 2024

அப்பா தூய்மைப் பணியாளர்; மகள் நகராட்சி ஆணையர்!

image

குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்று திருவாரூர் திருத்துறைப்பூண்டியின் நகராட்சி ஆணையராக துர்கா இன்று பதவியேற்றுள்ளார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய இவரது தந்தை சேகர், 1 ஆண்டுக்கு முன் காலமானார். இந்நிலையில், ஜூன் மாதம் வெளியான TNPSC தேர்வில் தேர்ச்சிப்பெற்று நகராட்சி ஆணையர் பதவியை தேர்ந்தெடுத்த துர்கா, இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News November 11, 2024

தவெகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்

image

நாகையில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டார்கள். நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள, புதிதாக இணைந்தவர்களை நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

News November 11, 2024

சட்டம் அறிவோம்: ‘Prohibition writ’ என்றால் என்ன?

image

Prohibition writ என்பது கீழ் நீதிமன்றம், அரசு அலுவலர், தம் அதிகாரங்களுக்கு அப்பால் செயல்படுவதை தடுக்க பிறப்பிக்கப்படும் ‘இடைக்காலத் தடுப்பாணை’யை குறிக்கும். சட்டபூர்வமற்ற செயல்களை தடுக்க மாண்டமஸ் ரிட் வழங்கப்பட்டாலும், அதற்கு சரியான தீர்வு அளிக்காத, செயலற்ற நிலையில் இருக்கும் ஆணையர்களுக்கு எதிராக இம்மனுவை தாக்கல் செய்யலாம். இம்மனுவை ஐகோர்ட் & சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.

News November 11, 2024

புஷ்பா-2 திரைப்படம்… புது அப்டேட்

image

புஷ்பா-2 படத்தின் ட்ரெய்லர் வரும் 17ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் செம்மரக் கடத்தல் பின்னணியில் எடுக்கப்பட்ட புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, 2ஆவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படம் வருகிற டிச. 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் 17ஆம் தேதி வெளியிட இருப்பதாக அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!